24/10/15

டிச.4ல் ஆசிரியர்கள் போராட்டம் -நக்கீரன் செய்தி

சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. 

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் மொழி கல்வி, சமச்சீர் கல்வி உறுதிசெய்ய தனி கல்வி கொள்கையை அறிக்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக