பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. நாளை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இதில் ஜாக்டோவை உடைக்கும்படி தொடக்கக்கல்வி இயக்குநருக்கு உத்தரவு இடப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கன்றன.நாளை எத்தனை விக்கெட்டுக்கள் விழப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக