6/11/15

மீதியுள்ள Laptop -களை, உடனடியாக அனுப்புமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் உத்தரவு, அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை

கடந்த, 2013 - 14 கல்வி ஆண்டு தமிழக அரசின் இலவச திட்டத்தில் Laptop பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கியது போக, மீதி உள்ளவற்றை திருப்பி அனுப்புமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மீதியிருக்கும் Laptop பற்றிய கணக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இன்னும் வரவில்லை.

இந்நிலையில், மீதியுள்ள Laptop -களை, உடனடியாக அனுப்புமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர். 

இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாடு மின்னணு கழகமான, ‘Elcot‘ நிறுவனத்துக்கு, நாங்ள் கணக்கு கொடுக்க வேண்டும். எனவே, ஓராண்டாக பதுக்கி வைத்த, Laptop -களை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளோம். அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக