4/12/15

டிசம்பர் 4ல் நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள்மீண்டும் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றது. இந்நிலையில்,

மாணவர்களின் நலன் கருதி டிசம்பர் 4-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழகதுணைவேந்தர் அறிவித்துள்ளார்.தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக