3/12/15

சென்னையில் மழைவெள்ளம்: வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள சென்னையில் அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒரு வாரத்திற்கு இலவச சேவையை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைமந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், 


“சென்னையில் வெள்ளம் காரணமாக இன்றில் இருந்து ஒருவார காலம் பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரையில் கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும், அவர்களுக்கான சேவையை துண்டிக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.சென்னையில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படாது. சென்னையில் உயரமான டவர்கள் மற்றும் தொடர்புகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.இதேபோல் ரிலையன்ஸ், வோடபோன் நிறுவனங்களும் இலவச அழைப்புகளை வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக