27/1/16

பிப்ரவரி 2ல் இடைக்கால பட்ஜெட்?

தமிழக சட்டசபை, 20ம் தேதி கூடியது. அன்று காலை, 10:30 மணிக்கு, கவர்னர் உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது. விவாதத்திற்கு, 23ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார். பின், சபை ஒத்தி வைக்கப்பட்டது.அ.தி.மு.க., அரசின் பதவி காலம் முடிய உள்ளதால், இவ்வாண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த மாத இறுதியில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, தேதி அறிவிக்க உள்ளதால், முதல் வாரத்திலேயே, பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தி முடிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. பிப்., 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவும், அடுத்த நான்கு நாட்கள் விவாதம் நடைபெறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக