5/8/16

இந்திய புகையிலை நிறுவனம்(ITC) இந்தியாவின் மொத்த சிகரெட் தேவைகளில் 80% பூர்த்திசெய்து சிகரெட் சந்தையில் தனிப் பெரும்  நிறுவனமாக சுமார் 100 ஆண்டுகளாக கொடிநாட்டி வருகிறது.
இதன் மொத்த பங்குகளில் 33.44% LIC(14.33%), BANKS, MUTUAL FUNDS  வசம் உள்ளது.இவை எல்லாமே கிட்டத்தட்ட அரசின் நிறுவனங்கள்.இந்நிறுவனங்கள் மட்டும் தமது பங்குகளை திரும்பப் பெற்றாலே ITC தனது உற்பத்தியில் பெரும் சரிவைச் சந்திக்கும்  என நான் உறுதியாக நம்புகிறேன். சொல்லப் போனால் இவங்க குடிக்கிறதுக்கு விக்கிறாங்கன்னா , அவங்க பிடிக்கிறதுக்கு சிகரட்ட தயாரிக்கிறாங்க. இதுல சுகாதாரத்துக்கு இத்தனை ஆயிரம் கோடின்னு வாய் கிழியப் பேசவும் செய்யுறாங்க.
தொட்டிலவும் ஆட்டிவிட்டுட்டு பிள்ளையவும் கிள்ளிவிடுறதுன்னு சொல்லுவாங்களே அதுக்கும் LIC நிறுவனம் தனது பங்குகளில் உரிமையை ITCயில் நிலைநாட்டுவதற்கும்்   என்ன   பெரிய   வித்தியாசம்ன்னு எனக்குத் தெரில.

இந்த விஷயம்  எனக்கு இன்னிக்குத்தெரியும்.(நம்ம எல்லாத்துலயும் கொஞ்சம் லேட்டுதான் போல 😁😁) ஓர் ஆசிரியன்  என்ற நிலையில் அல்லாமல் நாட்டின்  பற்றுமிக்க குடிமக்களில் ஒருவன்☺ என்ற முறையில் இதை சொல்லும் கடமை இருப்பதாகவே உணர்கிறேன்.
பொறுத்திருந்து பார்ப்போம். என்ன மாற்றம் வரப்போகுதுன்னு.

நன்றி#விக்கிபீடியா இணையதளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக