27/10/16

அகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


 புதுக்கோட்டையில்வருகின்ற தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வைஅறிவித்து வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் புதுக்கோட்டைமாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில்புதன் கிழமையன்று
ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாவட்டத் தலைவர் கே.ஜெயபாலன்தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர்சி.கோவிந்தசாமி, பொருளாளர் கே.நாகராஜன் மற்றும்நிர்வாகிகள் கு.சத்தி, மலர்விழி, ரெங்கசாமி, மு.முத்தையா, ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளிக்குமுன்பாக அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். சிபிஎஸ்திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். முதல்வர் அறிவித்தபடி மகப்பேறு விடுப்பை 9 மாதமாக அமுல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள்

எழுப்பப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக