28/11/16

வங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16) சி.ஆர்.சி., பயிற்சி ஒத்திவைக்கப்பட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தற்போது500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்துநிலவும் வங்கி நடைமுறைகளால் பணம்எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும்ஆண்டு இறுதியாக உள்ளதால்
விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள்வங்கிக்கு பணம் எடுக்கச் செல்லஇயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே நவம்பர் மாத ஊதியத்தைவங்கிக்குச் சென்று எடுக்க வசதியாகவரும் சனிக்கிழமை (03.12.16) நடைபெற உள்ள குறுவளமையஅளவிலான பயிற்சியினை ஒத்திவைத்து வேறொரு நாளில் நடத்திடஅரசு ஆவன செய்ய வேண்டும்என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடக்க கல்வி துறையும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் ஆசிரியர்களின்இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்ற ஆவன செய்வார்கள் என்றநம்பிக்கையில் ஆசிரியர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக