29/11/16

நவம்பர் மாத சம்பள கோரிக்கை, அரசு ஊழியர்கள் அதிருப்தி

நவம்பர்மாத சம்பளத்தை, ரொக்கமாக வழங்க வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் விடுத்தகோரிக்கைக்கு, அரசு தரப்பில், எந்தபதிலும்
அளிக்கப்படவில்லை; இது, அரசு ஊழியர்களுக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகள் மற்றும்ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்க, மக்கள்நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, நவ., மாத சம்பளத்தை, ரொக்கமாகவழங்க வேண்டும் என, அரசு ஊழியர்மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று, அரசு அலுவலகஉதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்சங்க நிர்வாகிகள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலரை சந்தித்து, மனுகொடுத்தனர்; ஆனால், எந்த பதிலும்தெரிவிக்கப்படவில்லை. வழக்கம் போல், வங்கிக்கணக்குகளில் தான், சம்பள பணம்போடப்படும் என்பதால், அரசு ஊழியர்கள் அதிருப்தியடைந்துஉள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக