9/12/16

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்று நாள் துக்கம் அனுசரித்து பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


இன்றுடன் மூன்று நாள் நிறைவு பெறுவதையடுத்து நாளை பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக