14/12/16

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே கட்டணம் !!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்இனி ஆன்லைன்மூலமே கட்டணம்செலுத்த முடியும். மோடி தலைமையிலானமத்திய அரசுபணமில்லாவர்த்தகம்
கொண்டுவர பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் மூலம்ஊழலற்ற இந்தியாவைஉருவாக்க முடியும்என அரசுநம்புகிறது.  இதன் முக்கிய நடவடிக்கையாகசமீபத்தில் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ்பெறுவதாக
அறிவித்தது. இதன் மூலம்பணம் பதுக்கிய, பண முதலைகள்தங்களின் கள்ளப்பணத்தைவெள்ளையாக மாற்றபகீர பிரயத்தனம்செய்ய முயற்சிசெய்து வருகின்றனர். ஆனால் , வருமானவரி மற்றும்அமலாக்க துறையினரின்கடும் நடவடிக்கையால்நாடு முழுவதும்கோடி, கோடியாகபணம் , கிலோகணக்கில் தங்கம்பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது.மத்தியஅரசின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்இனி ஆன்லைன்மூலமே பள்ளிக்கட்டணம்செலுத்த முடியும். கரன்சி நோட்டுகளாகபெற்று கொள்ளமுடியாது , இந்த முறை வரும் ஜனவரிமாதம் 17 ம்தேதி முதல்நடைமுறைக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ., செயலர்ஜோசப் இம்மானுவேல்அனைத்து பள்ளிதலைமைநிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜனவரி மாதம் 17 ம்தேதி முதல்:

ஆன்லைன் மூலம் இகட்டணம் செலுத்தும்முறைக்கு வாருங்கள், உங்களின் மொபைல்போனே உங்களின்வங்கி என்று, வாலட், டெபிட்கார்டு, ஸ்வைப்பிங்மூலம் பணமில்லாவர்த்தகத்திற்கு அரசு அழைப்பும், இது தொடர்பாகநாள்தோறும் விளம்பரமும் வெளியிட்டு வருகிறது. மத்தியஅரசு துறைகளும், அரசு சார்ந்தஅமைப்புகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக