கார்டுக்கு பதிலாக ஆதார் பரிவர்த்தனை.மத்திய அரசு தீவிரம்.

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றாக ஆதார் எண்அடிப்படையில் பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம்காட்டி  வருகிறது.  டிஜிட்டல்பரிவர்த்தனையாக டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு, இணைய
வங்கிசேவைகள், மொபைல் வாலட்கள் எனபின் நம்பர்  மற்றும்பாஸ்வேர்டு
அடிப்படையிலான
பரிவர்த்தனைகளுக்குமாற்றாக ஆதார் அடிப்படையில் கொண்டுவரதிட்டமிடப்பட்டுள்ளது.

  கடைக்காரரிடம் ஆதார் எண்ணை குறிப்பிட்டு, ரேகை வைத்தால் பணம் பரிவர்த்தனை ஆகிவிடும்.  இதற்கானபொதுவான மொபைல் ஆப்  ஏற்படுத்தப்பட உள்ளது.

 இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாளஆணையத்தின் தலைமை செயல் அதிகாரிஅஜய் பூஷன் பாண்டே நேற்றுகூறுகையில், ‘‘ஆதார்  அடிப்படையிலானபரிவர்த்தனைகள் நேற்று மட்டும் 1.31 கோடிமேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை எண்ணிக்கையைபடிப்படியாக  அதிகரித்துநாள் ஒன்றுக்கு 40 கோடியாக்க தி்ட்டமிட்டுள்ளோம். தற்போது 10 கோடி பரிவர்த்தனைகளை இந்தஅடிப்படையில் மேற்கொள்ள  முடியும்’’ என்றார்.

 நிதி ஆயோக் தலைமைசெயல் அலுவலர் அமிதாப் காந்த்கூறுகையில், ‘‘பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கஉதவும் வகையில்,  கைரேகைஅல்லது கண் கருவிழியை அடையாளம்காணும் மொபைல் போன்களை உருவாக்ககேட்டுக்கொண்டுள்ளோம்’’ என்றார்.

* 108,39,95,782 பேருக்குஆதார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 சதவீதம் பேர் 18 வயதுக்குமேற்பட்டோர்.
* சுமார்36 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் ஆதார்எண் இணைக்கப்பட்டுள்ளது.

* ஆதார்பரிவர்த்தனைக்கு புதிதாக மொபைல் ஆப்ஏற்படுத்தப்பட உள்ளது.

ஜனவரி 1 முதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அவசியம்

ஜனவரி 1ம் தேதிமுதல் அனைத்து பணபரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டைஅவசியமாகிறது.  2017 ஜூன்30ம் தேதிக்குள் ஆதார் வழி
பரிவர்த்தனைக்குஏற்பாடு செய்ய கால அவகாசம்தரப்பட்டுள்ளதாக  ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் வழிபண பரிவர்த்தனையை அமல்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டெபிட்,கிரெடிட் கார்ட்களில் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் வழி மட்டுமேபணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும்  பரிவர்த்தனைக்குஎலக்ட்ரானிக் சிப் அட்டை, ரகசியஎண், பயோ மெட்ரிக் அடையாளம்ஆகியவை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாளங்களை உறுதிசெய்யும் கருவிகளை வைத்து  இருக்கவும்வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆதார் வழி பணப் பரிவர்த்தனையைஎப்பொழுது அமல்படுத்துவது என்பது குறித்து பின்னர்அறிவிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது.

கணித திறன் தேர்வு டிச., 18க்கு மாற்றம்

பள்ளி மாணவர்களுக்கு, நாளை நடக்கவிருந்த, கணிததிறன் தேர்வு, வரும், 18க்குமாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையசெயல் இயக்குனர், அய்யம் பெருமாள்
வெளியிட்டுள்ளஅறிவிப்பில்,

'பெரியார்அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு, நாளைகாலை, 11:00 மணிக்கு நடக்கவிருந்த கணிததிறன் தேர்வு, மோசமான வானிலைகாரணமாக, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு டிசம்பர் 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதிகடைசி என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,)
அறிவித்துள்ளது.
குரூப்1 தொகுதியில் 85 காலியிடங்களை நிரப்புவற்கான தேர்வு அடுத்த ஆண்டுபிப்ரவரி 19-இல் நடைபெறுகிறது.
தேர்வுக்குவிண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதிகடைசியாகும். வங்கி-அஞ்சலகத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 கடைசியாகும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குவிண்ணப்பிக்க கடைசி நாள் வரைகாத்திருக்காமல் அதற்கு முன்னரே விண்ணப்பிக்கவேண்டும்.
கவனமாகபதிவு செய்ய வேண்டும். விண்ணப்பம்சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களைவிண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது.
எனவே இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ளவிவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்துசமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களைமாற்றக் கோரி பெறப்படும் கோரிக்கைகள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

உண்மையைமறைத்து தேர்வுக் கட்டணச் சலுகையை பயன்படுத்திதேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும்விண்ணப்பதாரர்களின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

பாடத்திட்ட தரத்தை மேம்படுத்தக்கோரி வழக்கு:

பள்ளிக்கல்வி, உள்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழகத்தில்1 முதல் 10-ம் வகுப்பு வரையிலானபாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்தக்கோரிய வழக்கில்உள்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில்
மனுத் தாக்கல்செய்த தலைமை நீதிபதி அமர்வுஉத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில்கல்வி மற்றும் கல்விக்கான வசதிகள்முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கால மாற்றத்துக்கு ஏற்பபாடத்திட்டங்களில் உரிய மாற்றம் கொண்டுவரவேண்டும் என அண்மையில் ஊடகங்களில்செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில்உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்(ஜூடிசியல்) பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல்செய்தார். அதில் தமிழகத்தில் 1 முதல்10-ம் வகுப்பு வரையில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளஒரே மாதிரியான பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தவும், முறைப்படுத்தவும்தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதிஎஸ்.கே.கவுல், நீதிபதிஎஸ்.நாகமுத்து அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்குவந்தது.மனுவை விசாரணைக்கு ஏற்றஅமர்வு, உள்துறை, கல்வித்துறை முதன்மை செயலர்கள், தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வி துணைச் செயலர்கள், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி இயக்குனர்கள் ஆகியோர்4 வாரத்தில் பதில் மனுத் தாக்கல்செய்ய உத்தரவிட்டது.

'வாட்ஸ் ஆப்' வேணுமா போனை மாத்துங்க!

தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும், 'வாட்ஸ் ஆப்'பை, பழைய மென்பொருட்களில் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'வாட்ஸ்ஆப்' அறிமுகமாகி, ஏழு ஆண்டுகளுக்குள், உலகெங்கும், 100 கோடி பேர் இதில் இணைந்துள்ளனர். இது, புதிய தொழில்நுட்பத்துக்கு மாறஉள்ளது. இதனால், பழைய மென்பொருட்களில்இயங்கும் மொபைல் போன்களில், இனி, வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது.முதல்கட்டமாக, பழைய விண்டோஸ், ஆண்ட்ராய், ஆப்பிள் மென்பொருட்களில் செயல்படும் போன்களில், வாட்ஸ் ஆப்பை இந்தஆண்டு இறுதி வரை மட்டுமேபயன்படுத்த முடியும்.

அடுத்தஆண்டு, ஜூன் வரை, பிளாக்பெரி, நோக்கியா ஏ - 40, நோக்கியா சிம்பியான்எஸ் - 60 மென்பொருள் உடைய போன்களில், வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டுமானால், மொபைல் போனை மாற்றுவதைதவிர வேறு வழி இல்லை.