23/1/17

அரசு ரூ.300 கோடி பாக்கி: தனியார் பள்ளிகள் புகார்

பெரம்பலுார்;-தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன்,
மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.சி., பள்ளிகளின்பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட நிர்வாகிகள்மாநாடு, பெரம்பலுாரில்நடந்தது.

மாநாட்டில், மாநில பொதுச்செயலர் நந்தகுமார்பேசியதாவது:கடந்த, 2014 - -15, 2015 - -16 என, இரண்டு ஆண்டுகளுக்குஇலவச கட்டாயகல்வி திட்டத்தின்கீழ், தனியார்பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய, 300 கோடி ரூபாய்நிதியை தரவில்லை.இந்த நிதியைஉடனடியாக அளிக்கவேண் டும். இல்லையென்றால் வரும் கல்வியாண்டில், இலவச கட்டாயகல்வி சட்டத்தின்படி, 'அட்மிஷன்' போட மாட்டோம்.
அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள, 10 ஆயிரம் பள்ளிகளுக்குஉடனடியாக அங்கீகாரம்அளிக்க வேண்டும். அப்பள்ளிகளில் பயிலும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியரை, அரசுபொது தேர்வெழுதஅனுமதிக்க வேண்டும்.நர்சரி, பிரைமரிபள்ளிகளை, நடுநிலைப்பள்ளிகளாக தரம்உயர்த்த நடவடிக்கைஎடுக்க வேண்டும். வட்டார போக்குவரத்துஅலுவலகத்தில், பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்றுவழங்க, லஞ்சம்கொடுத்தால் தான் காரியம் ஆகிறது.

மேலும் ஓராண்டுக்கு பள்ளிவாகனங்களை, நான்கு முறை, எப்.சி., செய்யும் முறையைவன்மையாக கண்டிக்கிறோம். இதர வாகனங்கள்போல, பள்ளிவாகனங்களும் ஆண்டுக்கு ஒருமுறை, எப்.சி., செய்யும் முறையைகொண்டு வரவேண்டும். இவ்வாறுஅவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக