4/1/17

பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில், "தமிழர்
திருநாளாம் பொங்கல்திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன்கொண்டாடும் வகையில், குடும்ப அட்டை அட்டைதாரர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்குஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் இரண்டு அடிநீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கியசிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கப்படும்.

இந்தப்பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல்திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும். இதன்மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவர். ஏழை, எளிய, சாமானியமக்கள் பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட இது வழிவகுக்கும்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக