28/3/17

ஆசிரியர் தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்

பாரதியார் 




1. பாரதியார் பிறந்த நாள் - 11.12.1882 

2. பாரதியார் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம் 

3. பாரதியாரின் பெற்றோர் - சின்னசாமி அய்யர் - இலட்சுமி அம்மாள் 

4. தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு என பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியவர் - பாரதியார் 

5. பாரதியாரின் சிறப்புப் பெயர்கள் - மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன் 

6. பாரதியாரின் கவித்திறனை மெச்சி எட்டப்ப நாயக்கர் மன்னர் பாரதியாருக்கு வழங்கிய பட்டம் - பாரதி 

7. பாரதி தன்னை ---------- என அழைத்துக்கொண்டார் - ஷெல்லிதாசன்

8. பாரதி என்பதன் பொருள் - கலைமகள் 

9. பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள் - பாஞ்சாலிசபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு 

10. பாரதியார் ----------- பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், ----------- பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார் - சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி 

11. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி (1904) 

12. பாரதியார் ---------------- என்ற பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை 

13. பாரதியாருக்கு எட்டையபுரத்தில் உள்ள ஏழு அடி உயர திருவுருவச்சிலை யாரால் திறந்து வைக்கப்பட்டது - பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் 

14. பாரதியாரின் இயற்பெயர் - சுப்பையா (எ) சுப்பிரமணியன் 

15. பொன் வால் நரி, ஆறில் ஒரு பங்கு ஆகிய படைப்புகளின் ஆசிரியர் - பாரதியார் 


பாரதியாரின் இலக்கியப் பணிகள் :

📃 பாரதியார் தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர்.

📃 பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக