7/5/17

இடைநின்ற குழந்தைகள் அதிகாரிகள் கள ஆய்வு

அருப்புக்கோட்டை வட்டார வளமையத்தில், 6-14 வயதுள்ள இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் கள ஆய்வு நடந்தது. 


பாலவநத்தம், குல்லுர்சந்தை, செம்பட்டி, பாலையம்பட்டி, பந்தல்குடி, சுக்கிலநத்தம் ஆகிய பகுதிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு திட்டம், சைல்டு லைன் (1098), உமன் தொண்டு நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தியது.

இதுவரை 45 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, திட்ட அலுவலர் நல்லதம்பி, ஒருங்கிணைப்பாளர் ஜெயஅனிட்டா ஆலோசனை வழங்கினர். 

ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், சைல்டு லைன், உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சங்கீதா செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக