17/5/17

FLASH NEWS : போக்குவரத்து ஊழியர்கள் மீது "எஸ்மா" சட்டம் - ஐகோர்ட் உத்தரவு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில் குமரய்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் சட்டவிரோதம் ஆனது. உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக