27/6/17

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. 'ஜூலை, 7 வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.


தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியை சேர்த்து, 3,050 இடங்கள் உள்ளன. இதில், 15 சதவீதமான, 456 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதி, 2,594 இடங்கள் உள்ளன. இதுதவிர, சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 783 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், 85 சதவீதம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், 15 சதவீதம், பிற பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது.
'நீட்' தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. நேரில் விண்ணப்பம் பெற, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், 'செயலர், மாணவர் சேர்க்கை கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற பெயரில், ௧௦௦ ரூபாய்க்கு எடுக்கப்பட்ட, 'டிடி'யுடன் மனு கொடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்து, அதனுடன், 'டிடி' இணைத்து அனுப்பலாம். ஜூலை, 7 வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூலை, 8 மாலை, 5:00 மணிக்குள், தேர்வுக் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் 
அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக