11/7/17

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வுமையம

தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும்  சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் 
மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரீனா கடற்கரை, அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் லேசான மழை தூறல் விழுந்தது.

இரவு 7 மணி அளவில் படிப்படியாக மழை அதிகரித்து கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

கோயம்பேடு,  வட பழனி, மயிலாப்பூர், மந்தைவெளி, தி.நகர், கிண்டி, கோடம்பாக்கம், அண்ணா நகர், எழும்பூர், மண்ணடி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், திருமுல்லை வாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லா வரம்,  புழல்,  செம்பரம் பாக்கம், சோழவரம், பூண்டி, திருவள்ளூர்,  காஞ்சீபுரம் உள்பட பல பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது.

வெப்பசலனம் காரணமாக நேற்றிரவு பெய்த மழை  இன்றும் நீடிக்கும் என்றும், நேற்று  இரவு  நுங்கம்பாக்கத்தில் 84 மி.மீட்டர் மழையும்,  மீனம் பாக்கத்தில் 46.2 மி.மீட்டர்  மழையும் பெய்துள்ளதாக வானிலை மையம்  அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் இன்று பேட்டி அளித்தார். அப்போது  தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். வட மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக