12/10/17

குழந்தை திருமணத்தை தடுக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !!

குழந்தை திருமணத்தை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த போது 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை மணந்து கணவர் பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையே என்றும், மேலும் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் அந்த பெண் புகார் 
அளித்தால் அது வன்கொடுமையாக கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்குக்குள் உள்ள மனைவியுடன் உறவு கொள்வது சட்ட விரோதம் அல்ல என்ற ஷரத்து நீக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக