4/11/17

கனமழை காரணமாக அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் 
ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை துவங்கிய மழை இடிமின்னலுடன் விடியவிடிய பெய்தது. இதனால் சென்னை நகர சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் பஸ், கார், ஆட்டோ போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக