தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

அரசுமேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகள் செயல்படுகின்றன.

இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால், பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.

அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம்.

மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

DIGITAL SR கணினி மயம் ஆவதில் ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்

ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் பணிப் பதிவேடு கணினி மயமாவது
  வரவேற்கத்தக்கதே

அதேவேளையில் ஏன் இந்த அவசரம்?

பல பணிப்பதிவேடுகளிலே முதல் பக்கத்தைத் தவிர வேறு பதிவுகள் இல்லை, பதிவுகளும் தவறாக உள்ளது.

பல ஆண்டு  தவறுகளை ஓரிரு நாளில் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?எப்படிக் களைய முடியும்?

Digital ஆக்குவதிலும் எண்ணிலடங்கா தவறுகள் .

தலைவலி  போய் திருகுவலி வந்தது போல் உள்ளது.

Digital ஆக்கியதில் அவசர கதியில் சரி பார்த்து விடுபட்டவைகளைச் சேர்க்க வாய்ப்பளிக்க வேண்டும்.

இதுதான் Final எனச்சொல்ல நாம் Foreign ல் இல்லை.

எனவேமீண்டும் மீண்டும் வாய்ப்புகள் தர வேண்டும்.

யாரோசெய்த தவறுக்கு ஊழியர் எப்படி இழக்க முடியும்.

மற்றதுறைகளை விட கல்வித்துறையில் மட்டும்ஏன் இந்த அவசரம்?

யாருக்கும் எள்ளளவும் பாதிப்பின்றி கணினிமயமாக்க சங்கங்கள் வலியுறுத்த வேண்டும்.,

தவறுகள் ஏற்படலாம் தவறில்லை அதை திருந்திக் கொள்ள மறுபடி மறுபடி வாய்ப்புகள் வழங்கவில்லை எனில் ஊழியருக்கு பெருத்த அடியே.

அதுவும் நம் நாட்டில் அவசர கதியில் எந்த ஒரு திட்டமானாலும் செயல்படுத்துவது வாய்ப்பு தராமலிருப்பது  வழக்கத்திற்கு மாறானது.

நாம்  நினைக்கலாம் நமக்கு விடுதல் இல்லை என ஆனால் நமக்கே தெரியாமல் தவறுகள் இருக்கலாம்.


எனவே  தவறுகள் திருத்த வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.