18/5/18

அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்: செங்கோட்டையன்

சென்னை: ''அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழகத்தில், 2,627 அரசு மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இதில், விருதுநகர் மாவட்டத்தில், 94 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், 93.98 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆசிரியர் காலியிடங்கள், விரைவில் நிரப்பப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கல்வி உரிமை சட்டத்தில், முறையாக மாணவர்களை சேர்க்காத, 12 பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம். விளக்கம் கிடைத்ததும், நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக