25/7/18

வனப் பயிற்சியாளர் பதவி: தேர்வு தள்ளிவைப்பு



வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:-

வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வுகள் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேதிகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற தேர்வு நடத்தும் அமைப்புகள் பல்வேறு தேர்வுகளை அறிவித்துள்ளன.

எனவே, வனப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு தேதிகளை மாற்றியமைப்பது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்தது.

இதையடுத்து, வனப் பயிற்சியாளர் பதவிக்குரிய தேர்வு தேதிகள் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக