28/7/18

Welfare Schemes for students: 20 J-directors in field work:

மாணவர்களுக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய 20 இணை இயக்குநர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிறப்பித்துள்ள அரசாணை: பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும், அரசால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இணை இயக்குநர்களை மாவட்டங்களுக்குச் சென்று களப்பணியை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அரசை கோரியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாகப் பரிசீலித்து அதை ஏற்கலாம் என முடிவு செய்து பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து இணை இயக்குநர்களையும் களப்பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக