சமீபத்தில் நடந்து முடிந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை தொடர்ந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியரில் இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என ஆசிரியர்கள் காத்திருந்த சமயத்தில் இதுவரை அந்த கலந்தாய்வு நடைபெறவில்லை.இதனை வலியுறுத்தும் பொருட்டு மாநில பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.பொன் செல்வராஜ் அவர்கள் இன்று பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை அணுகி கோரிக்கை மனு கொடுத்தார் .அதனை பெற்றுக்கொண்ட இயக்குனர் அவர்கள் விரைவில் கலந்தாய்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என உறுதி அளித்ததாக நம்மோடு பகிர்ந்து கொண்ட நிகழ்வில் தெரிவித்துள்ளார்.விரைவில் கலந்தாய்வு நடக்கும் எதிர்பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக