யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

25/10/16

பத்திரப்பதிவு சட்ட திருத்தத்தை அமலாக்க அரசாணை:அங்கீகாரமில்லா மனைகளுக்கு அக்.20 முதல் தடை

அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை தடை செய்யும் வகையில், பத்திரப்பதிவு சட்டத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்ட, '22 அ' பிரிவை அமல்படுத்தும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை, தடுக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை பதிவு செய்ய, செப்., 9ல், தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு, அக்., 21ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனையை தடை செய்யும் வகையில், பத்திரப்பதிவு சட்டத்தில், '22 அ' என்ற, புதிய பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. புதிய சட்ட திருத்தத்தை, அக்., 20 முதல் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும், அரசாணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது, அதன் நகல் வெளியாகி உள்ளது. அதில், 'பத்திரப்பதிவுக்கான, 1908ம் ஆண்டு சட்டத்தில், '22 அ' பிரிவைச் சேர்ப்பதற்கான சட்ட திருத்தத்தை, 2016 அக்., 20 முதல் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவை தடை செய்யும், இந்த சட்ட திருத்தம், 2008ல் நிறைவேற்றப்பட்டது. எட்டு ஆண்டுகளாக, அமலாக்கம் தேதி குறித்து, அரசாணை பிறப்பிக்கவில்லை. தற்போது மனை விற்பனை பதிவில், நீதிமன்றம் தடை விதித்ததால், வேறு வழியின்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



குழப்பம் நீடிக்கும்:இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசாணைப்படி, 2016 அக்., 20க்கு பின் அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய முடியாது. அதற்கு முன், வீட்டு மனையாக பதிவு செய்யப்பட்ட மனைகளின் அடுத்தடுத்த விற்பனைக்கு தடை இருக்காது.இந்த அரசாணையை, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா; எப்படி அமல்படுத்துவது என, பதிவுத்துறை தலைவர் தான் நிர்வாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; அது வரை குழப்பம் நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

TRB Exam:'ஹால் டிக்கெட்' பிரச்னை;வழக்கு தொடர முடிவு.

அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில், பலருக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காததால், வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர், காலி பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், நேற்று முன் தினம் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு, 48 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; 45 ஆயிரம் பேர் தகுதி பெற்றனர்.

நேற்று முன் தினம் நடைபெற்ற தேர்வில், 16 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. பல விண்ணப்பதாரர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து, ஹால் டிக்கெட் அனுப்பாததே காரணம் என, தெரிய வந்துள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்.

மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும்அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக் கணினி கொடுத்த அரசு கணினிவழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன்?இதனால், கணினிவழிகல்வி போதிக்கும் பல பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்க்கைகேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினி வழிக்கல்வி ஆசிரியர்கள்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களும் உயரவேண்டும் என்று சமச்சீர் கல்வி முறையை 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது அரசு. அதில்,ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் புத்தகங்கள்கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வருடம் மட்டும் புத்தகங்கள்கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால், கடந்த ஆறு வருடங்களாககணினி அறிவியலில் பி.எட். படித்தஆசிரியர்களை பணிநியமனம் செய்யவில்லை.கடந்த 15ஆண்டுகளாக கணினி அறிவியல் பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து 2014-ஆம் ஆண்டு கணினி அறிவியல்வேலையில்லாபட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

 இச்சங்கத்தின்மாநிலப் பொதுச்செயலாளர் குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தேகம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு. நான் படிச்சது பி.எட். ஆனா,டெக்ஸ்டைல்ல வேலை பாத்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் வேலை இல்லாமஇருக்காங்க.ஒரு படிப்புனுஇருந்தா அதுக்கான வேலை வாய்ப்பு இருக்கணும். வருஷாவருஷம் ஆயிரக்கணக்கான பேர்படிச்சுட்டு வெளியே வராங்க. ஆனா,ஏற்கெனவே படிச்சு வேலைவாய்ப்பு அலுவலகத்திலபதிவு செய்திருக்கிறயாருக்குமே வேலை இல்லை. பின்ன ஏன் இந்தப்படிப்பஇன்னும்வச்சிருக்காங்கன்னு புரியல" என்று குமுறுகிறார்.கம்ப்யூட்டர் சயின்ஸ்ல பி.எட்.படிச்ச நாங்க பலவகையில நசுக்கப்பட்டவங்க. மற்ற ஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள்கலந்துகொள்ளும்  டெட், டிஆர்பி எக்ஸாம் போன்றவற்றில் கூட கலந்துகொள்ளஎங்களுக்கு அனுமதி கிடையாது" என்று விரக்தியுடன் பேசுகிறார்கள் கணிப்பொறிஆசிரியர்கள்.2006-ஆம் ஆண்டுக்குப் பிறகுதரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள்எதிலும் கணிப்பொறி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.கடந்த வருடத்தில் கூட 407பள்ளிகள்தரம் உயர்த்தப்பட்டதாக எம்.எல்.ஏ பெஞ்சமின் கூறியிருக்கிறார்.ஆனால்அந்தப் பள்ளிகள் எதிலும் கணிப்பொறிவழிக் கல்வி கிடையாது.கம்யூட்டர் சயின்ஸ்டீச்சர் இல்லாமல்தான் பல பள்ளி மாணவர்கள் தானாகவே கற்றுக்கொள்கிறார்கள்.2011 இல் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள் அதில் கணினி அறிவியல் பாடத்திட்டம்இருந்தது.ஆனால்,அந்தபுத்தகங்களும் அரசு அலுவலகங்களில் கிடப்பில்போடப்பட்டிருக்கிறது.மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.பட்டதாரிஆசிரியர்களுக்கும் வேலை வழங்கவில்லை.வருடந்தோறும் மத்திய அரசு கோடி கணக்கில்நிதி ஒதுக்கி வருகிறது.வருடத்திற்க்கு 250 கோடி ரூபாய் வருகிறது.2011-இல்முதல்கட்டமாக 43கோடி ரூபாய் கொடுத்தார்கள்.ஆனால் எதையும் செயல்படுத்தாமல்வீணாக்குகிறார்கள்"என்று மாநில செயலாளர் குமரேசன் வருத்தத்துடன் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும்நடத்தியிருக்கிறோம்.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியிர் அலுவலகத்திலும் கருணை மனுகொடுத்திருக்கிறோம்.47முறை சென்னைக்கு வந்து மனு செய்திருக்கிறோம்.அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையைமுன்வைத்திருக்கிறோம்.எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தது போல் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டதுஎன்ற பதில்தான் வருகின்றது.தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புமுதலே கணினி வழிக்கல்வி இருக்கிறது.அதைஇன்னும் மேம்படுத்த அரசும் ஊக்குவிக்கிறது.ஆனால் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ்ஒன்,ப்ளஸ் டூக்கு மட்டுமே அதுவும் பாதி பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல்படிக்கிறார்கள்" என்கிறார் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வேல்முருகன்.****படித்தது கணினி அறிவியல் பிடிப்பது கசாப்புக் கத்தி!"2010இல் பி.எட் முடிச்சேன். அப்ப் கூட வாரத்துல ஒருநாள் மட்டன் கடையில் வேலைபாக்குறேன்.எனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு.இப்ப வரைக்கும் எவ்வளவோபோராட்டம் பண்ணிருக்கோம்.எத்தனையே இடத்துல மனு கொடுத்தும் ஒண்ணும்நட்க்கல.நாங்க நாற்தாயிரம் ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறோம்.அங்குபள்ளிகளில் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.ஸ்கூலுக்கு ஒரு டீச்சருக்கு வேலைகிடைச்சிருந்தாலும் படிச்சவங்க பாதிபேரு வேலைக்குப் போயிருக்கலாம்என்றுஆதங்கப்படுகிறார் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள்ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் கார்த்திக்.

*ரங்கநாயகி, அந்தியூர்*

பி.எட் முடிச்சிட்டு ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டிருக்கேன்சூப்பர்வைசரா இருந்தாலும் எல்லா வேலையும் பாக்காணும்.படிச்சபடிப்புக்கேத்தவேலையில்லாம,குறைஞ்ச கூலிக்கு கிடைத்த வேலையைச் செஞ்சிட்டிருக்கேன்.பொண்ணுப்பாக்க வர்றவங்க பி.எட் கம்ப்யூட்டர் சயின்ஸ்னா வேலை கிடைக்கிறதுகஷ்டம்னு சொல்லிட்டு போய்டுறாங்க

.*ஆரிஃபா, ஈரோடு*

எங்க வீட்ல அஞ்சு பொண்ணுங்க.பி.எட் முடிச்சிட்டு ஒரு கம்பெனிக்கு வேலைக்குப்போய்ட்டு இருக்கேன்.எங்கப்பாவால வேலை செய்யமுடியாது.நாங்க வேலை செஞ்சுதான்குடும்பத்தக் காப்பாத்தானும்.வேலை கிடைக்காததால கல்யாணம் தள்ளிப்போய்ட்டுஇருக்கு.

*லலிதா, கொள்ளிமலை*

அம்மாவோட கூலி வேலைக்குப் போய்டுருக்கேன்.வீட்டில இருக்கிற ஆடு மாடு அப்பாபாத்துக்கிறாங்க.இவ்ளோ தூரம் படிச்சிட்டு கூலி வேலைக்குப் போறது ரொம்ப கஷ்டமஇருக்கு.பி.எட் படிச்சிருந்த வேலை வாங்கித் தந்துடுவோம்னு சொல்லி பொண்ணு பாக்கவந்தாங்க .கம்ப்யூட்டர் சயின்ஸ்னு தெரிஞ்சதும் அதுக்கு எப்போ கிடைக்கிறதுனுரிஜெக்ட் பண்ணிட்டாங்க....

*கிருத்திகா, கோவை*

எனக்கு குடும்பத்தில பல சிக்கல்.அரசு வேலைதான் என்னை மீட்டெடுக்காணும்என்னுடைய ரெண்டு பெண் குழந்தைகளோட  எதிர்காலம் பத்தி ரெம்பக் கவலையாஇருக்கு.வாழ்க்கைய நகர்த்துறதுறதே பெரிய போராட்டம இருக்கு...****

*சாய்  ஜானு , கரூர்*

நான் ஒருகல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்கிறேன்.என்க்கு சில கேள்விகள் இருக்கு.
--->வேலைகேட்டு போராடும்போது அரசுக் கொள்கை முடிவுக்கு உட்பட்டதுன்னுசொல்றாங்க.அப்படினா அரசு கொள்கை பி.எட் முடிச்சவங்களுக்கு வேலை தரக்கூடாதுஎன்பதா?
--->அரசு வேலைக்கு எடுக்க முடியாத நிலையில் ஏன் இந்தப் படிப்ப நீக்காமவைச்சிருக்கங்கா?
--->சபீதா மேடம் மத்திய அரசு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டுத்துக்காக கொடுத்தபணத்தை ஏன் திருப்பிக் கொடுத்தார்கள்?இதுக்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறது அரசு ?என கேள்விகளை அடுக்குகிறார் சாய்ஜானு.சுமார் 40,000 வேலையில்லா பட்டதாரிகள் 27,000 பேர் பெண்கள்.இவர்களின்வாழ்க்கைக் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.தாயுள்ளம் கொண்ட தமிழக இவர்களின்மீது கருணை கண் காட்டுமா??

திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

Article:தனியார் பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

நடுத்தர வயதைச் சேர்ந்த அவர் பதற்றத்தோடு காத்திருந்தார். அவருடைய உடையையும் தோரணையையும் பார்த்தாலே ஏதோ ஒரு பெருநிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரி என்பதைச் சொன்னது. பக்கத்தில் அவர் மனைவி. இருவரும் பொறுமை இல்லாமல் அரை மணிநேரம் காத்திருந்த பிறகு அவர்கள் அந்த அறைக்குள் அழைக்கப்பட்டார்கள். 
வெளியே வர 15 நிமிடங்கள் ஆயின.இது தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியரைப் பெற்றோர்கள் சந்திக்கும் காட்சி. இந்தச் சந்திப்பு எப்போது நடக்க வேண்டும் என்று முடிவுசெய்வது பள்ளி நிர்வாகம். தேர்வுக்குப் பிந்தைய சந்திப்பு என்றால் முன்கூட்டியே தகவல் கொடுப்பார்கள். புகார் அல்லது அதுபோன்ற பிரச்சினை என்றால் திடீர் அழைப்பு வரும். இப்போது வர இயலாது என்னும் பதிலைப் பள்ளி நிர்வாகங்கள் பெரும்பாலும் ஏற்பதில்லை. குழந்தையின் கல்வி அல்லது மனநிலை தொடர்பான பிரச்சினை என்பதால் பெற்றோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள். பள்ளியின் முதல்வர் விடுக்கும் அழைப்பு கிட்டத்தட்ட நீதிமன்ற அழைப்புபோலத்தான்.பள்ளி முதல்வரைப் பெற்றோர் எதிர்த்துப் பேச முடியாது. தங்கள் தரப்பை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும் மிகவும் கவனமாகத்தான் பேச வேண்டும்.

நிர்வாகத்துக்கு எதிராக இவர்கள் எழுப்பும் ஒவ்வொரு குரலும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் குழந்தை மீது திரும்புவதற்கான சாத்தியம் அதிகம். குழந்தையை நடத்தும் விதத்திலிருந்து, மதிப்பெண்,விளையாட்டு, கலை முதலான துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகள் எனப் பல விதங்களிலும் பாதிப்பு இருக்கலாம்.எனவே பெற்றோர் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும்கூட கூடியவரை பள்ளி நிர்வாகத்தை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.தனியார் பள்ளிகளைப் பற்றிப் பேசும்போது அவற்றின் 'கட்டணக் கொள்ளை' பற்றிப் பேசப்படும் அளவுக்கு அவை தரும் கல்வியின் தரம் பற்றிப் பேசப்படுவதில்லை. பல தனியார் பள்ளிகளில் ஆண்டொறுக்குச் சராசரியாக ஒரு மாணவருக்கு 20000 முதல் 70000 வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில்அதுபற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஆனால், கல்வித் தரம்?தனியார் பள்ளிகளின் பெருவாரியான மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்கள், பொது அறிவு, ஆங்கில மொழி அறிவு, போட்டித் தேர்வுகளிலும் நுழைவுத் தேர்வுகளிலும் செயலாற்றும் விதம், தன்னம்பிக்கையின் அளவு ஆகியவை அரசுப் பள்ளிகளில்படிப்பவர்களைவிடவும் அதிகமாக இருப்பதைப் பொதுவாகக் காணமுடிகிறது. ஆனால், இவற்றை வைத்துக்கொண்டு மட்டும் இந்தப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குவதாகச் சொல்லிவிட முடியுமா?தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆங்கில வழிப்பாடம் இருப்பதாலும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தாலும் ஆங்கில அறிவு ஓரளவு நன்றாகக் கிடைத்துவிடுகிறது.

ஆனால், மற்ற பாடங்களைப் பொறுத்தவரை மாணவர்களின் குடும்ப, சமூகப் பின்புலங்களில் இருக்கும் வலுவான ஆதாரங்கள்தாம் அவர்களை நன்றாகப் படிக்கவைக்கின்றன. வீட்டிலும் தாங்கள் சார்ந்த நடுத்தர வர்க்கச் சூழலிலும் இருக்கும் நெருக்கடிகள், பள்ளியில் கொடுக்கப்படும் நெருக்கடி, அடுக்கடுக்காக வைக்கப்படும் தேர்வுகள், தேர்வுகளுக்கான பயிற்சிகள் ஆகியவற்றால் இந்தமாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள்.சொல்லித்தருவதன் மூலம் அதிக மதிப்பெண்கள் என்பது ஒரு சில பள்ளிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். பெரும்பாலான பள்ளிகள் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியே மாணவர்களைப் படிக்கவைக்கின்றன. கற்பித்தல் (Teaching) என்பதைவிடப் பயிற்றுவித்தல் (coaching) என்பதுதான் இந்தப் பள்ளிகளில் அதிகம். அதாவது, மதிப்பெண் பெறும் இயந்திரங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இந்த மதிப்பெண்ணையே அளவீடாக பெற்றோரும் எண்ணுவதாலேயே தாங்கள் எல்லா விதத்திலும் சரி எனும் முடிவுக்கு வந்துவிடுகின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள்.கணிதம், அறிவியல் முதலானவற்றில் கோட்பாடுகளைப் புரியவைக்கும் கற்பித்தல் முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை.

தனியார் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்களிடம் அவர்கள் கல்வி பற்றி உரையாடியிருக்கிறேன். அந்த உரையாடல்களில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் படிப்பதெல்லாம் சொற்களைத்தான். கோட்பாடுகளையோ அடிப்படைகளையோ புரிந்துகொண்டு படிப்பதில்லை. கேட்டால், அதையெல்லாம் யாரும் சொல்லித்தருவதில்லை என்றே சொல்லியிருக்கிறார்கள்.ஆங்கிலத்தில்கூட, சரளமாகப் படிக்கவும் பேசவும் பயிற்றுவிக்கும் அளவுக்கு இலக்கணம் சொல்லித்தரப்படுவதில்லை. ஆங்கிலத்திலேயே புழங்குவதால் மாணவர்கள் அம்மொழியை இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் தடுமாறுவதையும் இதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.மாணவர்களில் பலர் பொது அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் முதலானவற்றைப் புரிந்துகொள்ளும் திறன் அதிகம் பெற்றிருப்பதன் காரணம் பெரும்பாலும் அவர்களுடைய இயல்பான ஆர்வமும், குடும்பச் சூழலும், சொந்த முயற்சியும்தான்.பள்ளி முதல்வரும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளியைப் பற்றியும் தங்களது அலாதியான அணுகுமுறைகள் பற்றியும் பேசும் பகட்டுப் பேச்சுகளே பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களை ஆக்கிரமித்திருக்கும். இதையெல்லாம் கேட்கும் பெற்றோர்கள், கல்வி, குழந்தைகளை நடத்தும் விதம்என்று தங்களுக்குத் தெரிந்த எதையாவது பகிர்ந்துகொண்டாலோ, அதை வைத்துக் கேள்வி எழுப்பினாலோ, எல்லாமே தங்களுக்குத் தெரியும் என்ற ரீதியில் பதில் வரும். அதோடு, இந்தக் கேள்வியின் தாக்கம் குழந்தையின் மீது எதிரொலிக்கும்.நண்பர் ஒருவர், தன் பையன் படிக்கும் பள்ளியில், மாணவர்கள் தூக்கும் பையின் எடை பற்றி பேசியிருக்கிறார்.செய்தித்தாளில் வந்திருந்த தகவலை ஆதாரமாகக் காட்டி, இவ்வளவு எடையை ஒரு குழந்தை தூக்கக் கூடாது என்றிருக்கிறார்.

முகம் சிவந்துபோன முதல்வர், நாங்கள் அப்படித் தூக்கச் சொல்வதில்லையே என்று சொல்லி அந்த விவாதத்தை முடித்துக்கொண்டுவிட்டார். ஆனால், மறுநாள் வகுப்பில் அந்தக் குழந்தையிடம் இதுபற்றி ஆசிரியைகள் குத்தலாகப் பேசியிருக்கிறார்கள். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அக்குழந்தை, “நீங்க ஏன் எங்க டீச்சர்கிட்ட என் பையைப் பத்தி கேட்டீங்க?” என்று நண்பரிடம் கேட்டு அழுதிருக்கிறது. கேள்வி எழுப்பினால், அது மீண்டும் தன் குழந்தையின் தலையில்தான் வந்து விடியும் என்பதையே நம்முடைய பள்ளிகள் நமக்குச் சொல்கின்றன.மாணவர் சரியாகப் படிக்கவில்லை என்றால் பெற்றோர் அழைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட எச்சரிக்கப்படுகிறார்கள்.பதறிப்போகும் பெற்றோர் மேலும் பணம் செலவுசெய்து தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். போதாக்குறைக்குத் தாங்களும் சொல்லிக்கொடுக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் கணிதம் முதலான பாடங்களுக்குத் தனிப் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார்கள் என்றால் இந்தப் பள்ளிகளின் கல்வித் தரத்தைப் பற்றி என்ன சொல்ல?பொதுவாக, எங்கே நாம் அதிகமாக விலை கொடுக்கிறோமோ அங்கே கேள்வி கேட்கும் உரிமை நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது.

பெரிய உணவகங்களிலும் கடைகளிலும் வாடிக்கையாளருக்கு ஒப்பீட்டளவில் அதிக மரியாதை கொடுக்கப்படுவதைப் பார்த்திருப்போம். ஆனால், கல்வி விஷயத்தில் இதற்கு நேர்மாறாக நடக்கிறது. அதிகமாகப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் பெற்றோர்கள் நிர்வாகத்தைக் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.இது அதிகாரப் போக்கு மட்டும் அல்ல; நுண்ணுணர்வற்ற தடித்தனமும்கூட. அதிகார போதை ஏறிய இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது?-

அரவிந்தன்,
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை விரைவாக இணைக்கவும்.

ஆசிரியர்கள் நவ.4 முதல் மூன்று கட்ட போராட்டம்.

Jio Network : வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம்: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாரணையை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.


இதையடுத்து, அவற்றின் நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளின் மேயர்கள்-மாமன்ற உறுப்பினர்கள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12, 524 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள்- உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் (அக்டோபர் 24) முடிவடைகிறது.

இதையடுத்து, தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சித் துறை பிறப்பித்துள்ளது.

அவசரச் சட்டம்: முன்னதாக, அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருந்தது. ஆனால், பழங்குடியினருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. மேலும், புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார்.

இதன்படி, புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடைபெறும் நாள் அல்லது டிசம்பர் 31-ஆம் தேதி ஆகிய இந்த இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரை தனி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் இருப்பார்கள் என்று அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு (25.10.2016) விசாரணை!

28.10.2016 வெள்ளிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும்.