யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/9/18

234 தொகுதியிலும் நீட் தேர்வு மையம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

'தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நீட் தேர்வு மையம் உருவாக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு இரண்டு அல்லது மூன்று என நீட் தேர்வு மையங்கள் இருக்கும். வீடியோ கான்பரன்சிங் கிடைக்காத நிலையில் ஒரு நீட் தேர்வு மையமாவது செயல்படும். எல்லா தொகுதியிலும் நீட் தேர்வு மையம் இருக்கும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.


மாதிரி பள்ளிகள், 32 மாவட்டங்களிலும் துவங்க உள்ளது. முதன் முறையாக அரசு சார்பில் தலா 50 லட்சம் ரூபாய் என 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மலை மாவட்ட மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க கல்வித்துறை, 'அதிரடி'

மலை மாவட்ட மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், 4,343 மாணவர்களுக்கு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரியை பொறுத்தவரை, வனப்பகுதிகள், போக்குவரத்து வசதி கள் இல்லாத இடங்களில் உள்ள குழந்தைகள், பள்ளிக்கு வருவதில்லை என்ற புகார் உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், 6 முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
நடப்பு கல்வியாண்டில், நீலகிரி மாவட்ட பகுதிகளில், தொலைவில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த மாணவர்களை, பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், 142 பள்ளிகளைச் சேர்ந்த, 3,331 மாணவர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வனம், வன விலங்குகள் அச்சுறுத்தல் உள்ள, 92 பள்ளிகளைச் சேர்ந்த, 1,012 மாணவர்களுக்கு பாதுகாப்பாளர்கள் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம், மாணவர்களின் இடை நிற்றலை குறைக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பாளர் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, பள்ளிகள் வங்கி கணக்கில், 67 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு; ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவக்கம்

தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை, ஐ.சி.ஏ.ஆர்., 
வெளியிட்டது. ஆன்லைன் கவுன்சிலிங்கில், இன்று முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

வேளாண் இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வுகள் மூலம், இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகிறது.
கடந்த ஜூன் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடந்த, தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுகள்,தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப் பட்டது. மறுதேர்வுகள்ஆக.,18, 19ல் நடந்தன. பல்வேறு காரணங்களால் தாமதமாகிய நிலையில், தற்போது நுழைவுத்தேர்வு முடிவுகளை, ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆய்வுக் கவுன்சில் வெளியிட்டுள்ளது.


https://icarexam.net/ என்ற ஐ.சி.ஏ.ஆர்., இணையதள முகவரியில், லாகின் செய்து, மதிப்பெண் அட்டை மற்றும் பங்கேற்பு கடிதத்தை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேசிய வேளாண் ஒதுக்கீட்டு ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள், இன்று துவங்குகின்றன.ஆன்லைன் கவுன்சிலிங் இணையதளத்தில், தேர்வுகளை தேர்ந்தெடுத்து, கவுன்சிலிங்கிற்கு மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான, கடைசி தேதி, செப்.,13 கவுன்சிலிங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின், முதல் கட்ட ஒதுக்கீட்டு பட்டியல், செப்., 15ல் வெளியிடப்படுகிறது.

ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, கட்டணம் செலுத்தல் ஆகிய நடைமுறைகள், செப்.,16 முதல் 20 வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட ஒதுக்கீட்டு பட்டியல், செப்., 23 வெளியிடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சேர்க்கை நடைமுறைகள், செப்.,24 முதல் 28 ம் தேதி வரை நடக்கின்றன. கவுன்சிலிங் உதவிகளுக்கு, 011 - 2584 3635, 011 - 2584 6033 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!


தொல்லியல் துறை - உதயசந்திரன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள் இவை தான்!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பாடநூல்திட்ட இயக்குநராக இருந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தொல்லியல் துறையின் இயக்குநராக கடந்த மாதம் 25-ம் தேதி மாற்றப்பட்டார். அதையடுத்து இம்மாதம் 3-ம் தேதி தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தத்துறையில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உயிர் கொடுத்தார், தேர்வு முடிவுகளில் முதல் இடங்களை அறிவிக்கும் முறையை மாற்றினார். புதிய பாடத்திட்டம் உருவாக்குவதில் பல புதுமைகளை நிகழ்த்தினார். தற்போது, தொல்லியல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், இந்தத் துறையிலும் பல புதுமைகளை, மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.தமிழக தொல்லியல் துறை தொல்பொருளியல், ஆய்வியல், ஆய்வகம், நூலக ஆய்வு கையெழுத்துகள், புகைப்படம் அச்சிடும் தளம், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தளங்களில் செயல்பட்டு வருகிறது. அதோடு, மிகப் பழைமையான கட்டடங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் தொல்லியல் துறையின் தலையாயக் கடமை. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றுள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தக் கோயில்களின் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் தொல்லியல் துறை தான் பொறுப்பு. தற்போது பொறுப்பேற்றிருக்கும் உதயசந்திரன், பலரும் கண்டுகொள்ளாமல் விட்ட, தொல்லியல் சார்ந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே தொல்லியல் அறிஞர்களின் வேண்டுகோளாக உள்ளது.

கோயில்கள் பாதுகாப்பு:


தொன்மையான கோயில்களைப் பராமரிக்க, அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து வருகிறது தொல்லியல் துறை. அப்படி இருந்தாலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்கள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன. அந்தக் கோயில்களைப் புனரமைக்கவும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பல கோயில்கள் இடிந்து போகும் நிலைக்குச் செல்கின்றன.

நடுகற்கள் பாதுகாப்பு:

வேலூர் மாவட்டம், ஏலகிரி மலைப் பகுதியில் சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 10-ம் நூற்றாண்டு நடுகற்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. 2.5 அடி உயரத்தில் முதல் நடுகல் கற்திட்டை வடிவிலும், இரண்டாவது நடுகல் 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டு, புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்கள், ஏலகிரியில் வரலாற்றுக் காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதையும், வரலாற்றை இம்மக்கள் நடுகற்கள் மூலம் பதிவு செய்துள்ளதையும், பதிவு செய்துள்ளவற்றையும் தற்போது அறிய முடிகிறது. இந்த நடுகற்கள் இரண்டும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதுபோல தமிழகத்தில் பல நடுகற்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை முறையாகப் பாதுகாக்க தொல்லியல் துறை ஆவண செய்ய வேண்டும்.

செப்பேடுகள் பாதுகாப்பு:


2,300 ஆண்டுகளுக்கு முன், செப்புப் பட்டயங்களில் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தானம் அளிக்கும் மன்னனுக்கு ஓலைச்சுவடி, தானம் பெறுவோருக்கு செப்பேடு, பொதுமக்கள் பார்வைக்கு கல்வெட்டு என, மூன்று விதங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. சோழர்களின் ஆட்சியில், முதலாம் பராந்தகன் முதல், மூன்றாம் ராஜராஜன் வரை, மிக நேர்த்தியான தகடுகளில், அழகான எழுத்துகளுடன், துல்லியமான எல்லைகளைக் குறிக்கும் செப்பேடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள், அரச பரம்பரையைப் பற்றி அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. பதிப்பிக்கப்படாத செப்பேடுகள் அதிகளவில் உள்ளதால், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இவற்றைப் பதிப்பிக்க வேண்டும்.

பெருங்கற்கால கல்திட்டு:

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் திட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைச் சுற்றி எண்கல் வட்டங்கள் அமைக்கப்பட்டன. இதன் அமைப்பை வைத்து, இது 'பெருங்கற்காலம்' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பகுதியில், கி.மு., 1000 முதல் கி.பி. 500-ம் ஆண்டைச் சேர்ந்த மக்கள் வசித்துள்ளனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்ததன் நினைவாக கல்திட்டுக்களும் இங்கு உள்ளன. கட்டடக் கலையின் தொடக்கம் இதுபோன்ற கல்திட்டுகள் தான் என்கிறார்கள் அறிஞர்கள். இதுபோன்ற கல்திட்டுகள், இந்தப் பகுதியில் அதிகமாகக் காணப்பெறுகின்றன. இவற்றையும் கண்டெடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

மலை சிற்பங்கள்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ வளவில் பஞ்சபாண்டவர் மலை உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகின்றன. ஆனால், தொல்லியல் துறை இதை முறையாகப் பராமரிப்பதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரை சமணர்கள் இம்மலையை வழிபாட்டுத் தலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். மிகவும் பழைமையான அரியச் சிற்பங்கள் இங்கு உள்ளன. இதுபோன்ற மலைச் சிற்பங்கள் தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றைக் கண்டுபிடித்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து முறையாகப் பராமரிக்க வேண்டும்.


அகழ்வாராய்ச்சி:

திண்டுக்கல் அருகே பாடியூர் மேட்டுப்பகுதியில் சமூக ஆர்வலர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழங்கால ஆபரணங்கள், ஓடுகள், சிதிலமடைந்த முதுமக்கள் தாழி, செப்பேடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இந்த இடத்தில் போர் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால், இன்னும் பல பொருட்கள் கிடைக்கும் என்று நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்த அகழ்வாராய்ச்சிகள் பல பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும். இன்னும் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். அதுபோல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் அதிக இடத்தில் தொடர்ந்து கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றை சேமித்து, அதைப் படியெடுத்து சேமிக்க வேண்டும்.

கீழடி:

கீழடியில் தற்போது 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வுக்கு 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது 33 குழிகள் தோண்டப்பட்டு களிமண் அச்சுகள், பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லை. இதுவரை கீழடியில் நடந்த அகழாய்வு குறித்த முழு விவரத்தையும் உடனடியாக வெளியிட வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு, விரைவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு:

பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியுள்ளார்.
வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைக்கவில்லை- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
கரூர்:

கரூர் க.பரமத்தி சேரன் பொறியியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கரூரில் நடந்தது. சேரன் அறக்கட்டளை தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, அம்பிகை பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு 124 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விரும்பியது கிடைப்பதே வெற்றி என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறது. விருப்பத்திற்கு மாறாக கிடைப்பதும் வெற்றியே. நான் பல நேரங்களில் விரும்பாததையும் ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உங்கள் முன்னால் பேசும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். இந்தியாவில் பல வெற்றியாளர்கள் செல்வக்குடியில் பிறந்தவர்களோ, பெரிய கல்வி கூடங்களில் பயின்றவர்களோ கிடையாது. சாதாரண பள்ளியில் தாய்மொழியில் படித்தவர்கள் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள். 
சாதிக்கும் சந்தர்ப்பங்கள் இந்தியாவில் அதிகம் உள்ளன. அயராத உழைப்பும், உயர்ந்த லட்சியமும், தேவையான திறமைகளும் இருந்தால் நிலவுக்கு போகும் கனவு நனவாகும். பட்டதாரிகளுக்கு வேலையில்லை என்ற செய்தியை கேள்வி பட்டிருப்போம். அதே நேரத்தில் பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதும் உண்மையாகும். எனவே பணிகளுக்கு தேவையான தகுதியினை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக கல்லூரி முதல்வர் மகுடேஸ்வரன் வரவேற்றார். அறக்கட்டளை செயலாளர்  மனோகரன், பொருளாளர் அப்னா தனபதி, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நன்றி மாலை மலர் .

நாளை 11.9.18 ,சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஒன்றியங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள். பதிலாக வேலை நாள்.15.9. 18