யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/7/18

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதிவி உயர்வு - நெறிமுறைகள் வெளியீடு

காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும்.-சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


கூட்டுறவு சங்கத் தேர்தல்: 23ஆம் தேதி தீர்ப்பு!

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்
நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், வேட்பு மனு ஏற்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், உரிய விளக்கமின்றி மனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி திமுக கொறடா சக்கரபாணி, கூட்டுறவுச் சங்கங்களில் போட்டியிட்டவர்கள் என 400க்கும் அதிகமானோர் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றக் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூட்டுறவுச் சங்கத் தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5ஆவது கட்ட தேர்தல்களை நடத்தத் தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்தஉத்தரவை எதிர்த்துக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்தலாம் எனவும், முடிவுகளை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டதுடன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் மதுரை உயர் நீதிமன்றதில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து சுமார் 400க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்துத் தரப்புகளும் எழுத்துபூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி எழுத்துபூர்வமான வாதங்கள் கூட்டுறவு சங்க ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன. அதனையடுத்து இந்த வழக்குகளுக்கான தீர்ப்பு வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கை அளிக்க ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக்குழு தமது ஆய்வறிக்கையை கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை மத்திய அரசு அமைத்தது.

அந்தக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அறிக்கை வழங்கப்படாததால் கடந்த மாதம் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது 3-வது முறையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லோக் ஆயுக்தா அமைப்பு மற்றும் அதன் பணி என்ன?

 லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தெரிவுக்குழு அமைக்கப்படும். தெரிவுக் குழு தலைவராக முதல்–அமைச்சரும், உறுப்பினர்களாக சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் இருப்பார்கள். அந்த தெரிவுக் குழுவுக்கு பெயர் பட்டியலை
தயாரித்து வழங்க 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். தெரிவுக்குழு தேர்ந்தெடுக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

* லோக் ஆயுக்தா அமைப்புக்கு நீதிபதியோ, ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிர்வாகத்தில், விழிப்புணர்வில், நிதியில், சட்டத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவரோ தலைவராக நியமிக்கப்படுவார். ஏனைய 4 உறுப்பினர்களில் 2 பேர் நீதித்துறையை சார்ந்தவராக இருப்பார்கள். மீதமுள்ள 2 பேர் ஊழல் தடுப்பு உள்ளிட்ட கொள்கையில் 25 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள். தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்கும்போது அவர்களின் வயது 45–க்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

* மேலும், அரசின் துணை செயலாளர் நிலைக்கு குறையாதவர் லோக் ஆயுக்தா அமைப்பின் செயலாளராக நியமிக்கப்படுவார். அவரை அமைப்பின் தலைவர் தேர்வு செய்வார்.

* எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள், ஊராட்சி – நகராட்சி உறுப்பினர்கள், மத்திய – மாநில பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தேர்ந்தெடுக்க முடியாது.

* லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது. இதில், எது முதலில் வருகிறதோ அதுவரை பொறுப்பில் இருப்பார்கள்.

* லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படித்தொகையும், உறுப்பினர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் படித்தொகையும் வழங்கப்படும். இதற்கான நிதியை மாநில அரசு வழங்கும்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக் ஆயுக்தா இயங்கும். அதன் அதிகார வரம்புக்குள் முதல்–அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வருவார்கள்.

* குற்றம் நடைபெற்றதாகக் கருதப்படும் தேதியில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் அது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட வேண்டும்.

* அளிக்கப்படும் புகார்கள் மீது, புகார் பெறப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.

* பொய் புகார் அளித்தது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!!!

சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பள்ளிகளில் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. உலக சுகாதார அமைப்பு உடற்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 9,000 பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருப்பது விதிமீறல். ஆனால், இதனை மாநில அரசும் , சிபிஎஸ்இ நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. எனவே, உடற்கல்வியை பயிற்றுவிப்பது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உரிய விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்தமனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சிபிஎஸ்இ நிர்வாகத்தையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட உடற்கல்வி தொடர்புடைய வசதிகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET), ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம்(BIET), ஆரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (GTTI)ஆகியவற்றில், தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பு 2018-19 -ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு கடந்த ஜூன் 18 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை இணையதளத்தில்  (www.tnscert.org)விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு 821 பேர்விண்ணப்பித்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்களில் 713 தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதில், 413 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை அரசு ஆய்வு செய்ததில், கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தினால், இப்பள்ளிகளில் கற்றல் விளைவுகள் மேம்பட வாய்ப்புள்ளது என முடிவெடுக்கப்பட்டது.

எனவே, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு முடித்து, ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பமுள்ளவர்கள் இரண்டாண்டு (D.EI.Ed- Diploma in Elementary Education)  பட்டயப் படிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE)  வகுத்துள்ள விதிமுறைகளின்படி சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதள முகவரியில்(www.tnscert.org)   ஜூலை 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது: வழக்கம்போல பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு கடும் போட்டி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக திங்கள்கிழமை தொடங்கிய ஆன்லைன் கலந்தாய்வில் பி.எஸ்சி. வேளாண் 
படிப்புக்கான பெரும்பாலான இடங்கள் முதல் நாளிலேயே நிரம்பியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கடந்த 7-ஆம்தேதி நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 67 இடங்கள் பூர்த்தியாகின. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வரலாற்றிலேயே மாணவர்கள் நேரில் வராமலேயே மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, குளறுபடிகள் ஏதும் நடைபெறாமல் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இருப்பினும் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பிற்பகலுக்குள் அது சரி செய்யப்பட்டது.

இதுகுறித்து மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு என்றாலும் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இடங்களைப் பூர்த்தி செய்ய முடியும். இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கும் மாணவர்கள் அதை 11-ஆம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 12-ஆம் தேதி எத்தனை காலி இடங்கள் உள்ளன, அவற்றுக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலேயே மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சில்பா அறிவிப்பு

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலய ஆடிதபசை முன்னிட்டு 27ம் தேதி நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி
நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

CPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும் -CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். -திண்டுக்கல் எங்கெல்ஸ்.

ரூ.22,891கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி அல்ல! மாநில
நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே!

CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.22,891 கோடியை PFRDA-விடம்செலுத்தக்கோரி போராடவில்லை.

அரசிற்கும், ஊழியர்களுக்கும் ஒருசேர பாதிப்பை ஏற்படுத்தும் *CPSதிட்டத்தையே முற்றாய் நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும்நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கை.

CPS-ஆல் ஊழியருக்குப் பாதிப்பா? அரசிற்கு பாதிப்பா?என்றால்இரண்டிற்கும் ஒரே பதில்,

*ஆம்!* என்பதே.

பழையஓய்வூதிய திட்டத்தின்படி அரசு தனது பங்காக எவ்விதத் தொகையும்
செலுத்த வேண்டிய அவசியமில்லை._

ஆனால், *CPS திட்டத்தில் பணியேற்கும் ஊழியருக்கான 10% தொகையைஊழியர்
பணியேற்ற மாதம் முதல் ஓய்வு பெறும் மாதம் வரை அரசு செலுத்தியாக
வேண்டும்.*

இப்படியாக 2003-ல் இருந்து கடந்த 2017 மார்ச் மாதம் வரை CPSதிட்டத்திற்காகத் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் & ஆசிரியர்களிடம் பிடித்தம்செய்த தொகை ரூ.11,000 கோடி.

இதற்கு ஈடாக தமிழக அரசு செலுத்திய பங்கு ஈடுத் தொகை ரூ.11,000 கோடி.

அரசு& அரசு ஊழியர்களின் CPS பங்குத் தொகைகளின் கூடுதலான இந்தரூ.22,891 கோடியை இன்னும் ஏன் PFRDA-விடம் செலுத்த வில்லை எனக்கேட்டுப் போராடவில்லை.

மாறாக,

CPS திட்டத்தால் அரசு தரப்பு செலுத்த வேண்டிய கட்டாயப் பங்குத்தொகையால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையிலிருந்து அரசு விடுபட,

CPS-ஐ முற்றிலுமாக நீக்கிவிட்டு, எங்களின் ரூ.,000 கோடியை வருங்காலவைப்பு நிதியில் சேர்த்து கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை எங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் .TET, TRB, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளால் அரசுப் பணியேற்கும்நபர்களின்
சராசரி பணிக்காலம் என்பது 35 ஆண்டுகள்.

அதேநபர்கள் பணி ஓய்வு பெற்ற பின்னான ஆயுட்காலம் என்பது சராசரியாக10 - 15 ஆண்டுகளே.

CPS திட்ட நடைமுறையில் ஊழியருக்காக *35 ஆண்டுகளும் மாதாமாதம் அரசுபெரும் தொகையை வழங்க வேண்டிய கட்டாயம்* உள்ளது.

ஆனால்,

பழையஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரின் ஓய்வுக்காலத்திற்குப்பின்னான 10 - 15 ஆண்டுகள் நிதி* ஒதுக்கினாலே போதுமானது.

இவ்வாறு ஒதுக்கும் நிதியானது 7 ஊதியக்குழுக்களை கடந்துள்ள நிலையிலும்ஒட்டுமொத்த செலவினத்தில் 14% மட்டுமே ஆகும்.

மேலும்,

NHIS உள்ளிட்ட திட்டங்களில் திருமணத்திற்குப் பின் ஊழியர்களின்
பெற்றோர்கள், அதன் பயன்களைத் துய்க்க இயலாத அனாதைகளாக அரசே
கொள்கை வகுத்துள்ளது.

இந்நிலையில் CPS-ல் இருந்து ஓய்வுபெறும் ஒரு நபருக்கு,

*குடும்பநலநிதி*
*மருத்துவக் காப்பீடு*
*பணிக்கொடை*
*மாதாந்திர ஓய்வூதியம்*
*உள்ளிட்ட எதுவுமே இல்லாத சூழலில்*
அவரிடமிருந்து பிடித்த தொகையிலும்100%-தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது என்பது,

இந்நாட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அதன்பின் உயிருடன் வாழத்தகுதியற்றோர் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.


இவ்வாறாக, அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள்
நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும்,

CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு,

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் தேர்தல்கால & சட்டசபை அறிவிப்பின்படி,அரசின் நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கும்
படியாகத் தொடர்ந்து காலம் கடத்தாது

*அரசையும் அரசு ஊழியரையும் காக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனேநடைமுறைப்படுத்திட வேண்டும் .

அண்ணனான ஆசிரியர் திரு.விஜயராஜ்

Image may contain: 3 people, people smiling

தினம் ஒரு கதை மாணவர்களுக்கு கூற தினம் ஒரு கதை.!தென்கச்சி கோ சுவாமிநாதன்




ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்


வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முயன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முயன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முயன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமாவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது


அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு 

கல்வி தரத்தை உயர்த்த பாடப்பொருள் மேம்பாட்டு மையம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்

தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்த பாடப்பொருள் மேம்பாட்டு மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தார்.



தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான பாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள் மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது.



 இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது.



 விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.




பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் ‘கியூ ஆர்’ கோடு இணைக்கப்பட்டுள்ளது.



 இந்த ‘கியூ ஆர்’ கோடுவை செல்போனில் ‘ஸ்கேன்’ செய்தால், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ தெரியும்.



 அதாவது உதாரணமாக 6–ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கும்மி அடி என்று தலைப்பில் உள்ள பாடத்தில் ‘கியூ ஆர்’ கோடு இருந்து, அதை ‘ஸ்கேன்’ செய்தால், கும்மி அடிப்பது மற்றும் சத்தம் ஆகியவை வீடியோ மற்றும் ஆடியோவாக தெரியும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பார்.



 இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ‘கியூ ஆர்’ கோடு இடம் பெற்றுள்ளது. 



இவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.
இதையடுத்து முதன்மை கல்வியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.


 அந்த பயிற்சியின் நிறைவு விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது


முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.


 அதற்கு காரணம் இணை இயக்குனர், இயக்குனர் மூலம் எதையும் தீர்க்க நாட்கள் அதிகமாகும். அதனால் தான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.



 அதை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். நான் 8 முறை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன்.



 அதற்கு காரணம், யார் எதை கூறினாலும் அதை காது கொடுத்து கேட்பேன். அவர்களை தட்டிக்கொடுப்பேன். அதேபோல நீங்களும் செயல்படுங்கள்.



உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு அந்த பள்ளிகளில் கழிப்பறை மற்றும் ஏதாவது குறை இருந்தால் தெரியப்படுத்துங்கள்.



 பள்ளிகளுக்கு அனைத்து கட்டமைப்புகளும் செய்து கொடுக்கப்படும்.



 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் சேவை மனப்பான்மை உள்ளவர்களை சேருங்கள். சிறப்பாக பணியாற்றுங்கள். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


 பிளஸ்–2 படித்து முடித்த உடன் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அனைத்து பாடங்களும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

(மின்னல் கல்வி செய்தி குழுவில் இணைய MKS என type செய்து   6380815982 க்கு  whatsapp இல் அனுப்பவும்)

பின்னர் அவர் புதுமை பள்ளி விருதுகளையும், கனவு ஆசிரியர் விருதுகளையும் ஆசிரியர்களுக்கு வழங்கினார்


பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது



புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு.


 ஆனால் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் பயிற்சி நடத்தப்படும்.


 அந்த பயிற்சி விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கூட வேலைநேரம் போக மற்ற நேரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு பள்ளிக்கு கல்விச்சீர்: அள்ளி கொடுத்த மக்கள் :

அரசு துவக்கப் பள்ளிக்கு, ஐந்து டிராக்டர்களில், கிராம மக்கள் கல்விச்சீர் வழங்கினர்.

சேலம் மாவட்டம், முத்தானுாரில், 64 ஆண்டு களாக, அரசு துவக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 127 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு முத்தானுார், கட்டபுளியமரம், விநாயகர் நகர், கட்டியப்பன்புதுார் உள்ளிட்ட கிராம மக்கள், நேற்று கல்விச்சீர் வழங்கினர்.
மேள தாளம் முழங்க, வகுப்பறைக்கு தேவையான ஐந்து பீரோ, டேபிள், சேர், மின் விசிறி, ஸ்டாண்ட், நோட்டு, புத்தகங்களை, ஐந்து டிராக்டர்களில், மக்கள் ஏற்றிச் சென்றனர். பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 

தொடர்ந்து, பள்ளியில் விழா நடந்தது. மாணவ - மாணவியர் பங்கேற்ற, பேச்சு போட்டி, பழமொழி ஒப்புவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் மாதவராஜன், பள்ளி புரவலர் திட்டத்தை துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் நிதி வழங்கினர்.
சீர் வழங்கிய சிலர் கூறியதாவது: தனியார் பள்ளிகளை விட, இங்கு ஆங்கிலம், கையெழுத்து பயிற்சி சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது. இதனால், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, குழந்தைகள் அதிகம் சேர்கின்றனர். பள்ளியில் இரு வகுப்பறை மட்டுமே உள்ளது. இதில் தான், அனைத்து, மாணவ - மாணவியரும் நெருக்கடியாக அமர்ந்து படிக்கின்றனர். பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டித் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதுமை பள்ளி விருது :

அரியலுார் மாவட்டம், சோழன்குடிகாடு கிராமத் தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி, 10 ஆண்டுகளாக, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 2017 - 18 கல்வியாண்டில், இப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வெழுதிய, 81 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இதனால், தமிழக அரசு, 2017 - 18 கல்வி ஆண்டுக்கான, புதுமைப் பள்ளி விருதுக்கு, சோழன்குடிகாடு பள்ளியை தேர்வு செய்தது. 'இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்' என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்; பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்:

டெல்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்பொழுது, நீட் தேர்வானது பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் கணினி முறையில் நடத்தப்படும் என கூறினார்.
தொடர்ந்து அவர், பாடத்திட்டம், தேர்வுகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை. தேர்வுகள் வெளிப்படையானதும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கணினி முறையில் தேர்வு நடந்தாலும் இது ஆன் லைன் தேர்வு இல்லை.
தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும்.  மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படும்.
மாணவர்கள் கணினி அறிவுடன் இருப்பதால் தேர்வுகள் நடத்துவதில் சிரமம் இருக்காது.   தேர்வுகள் இரண்டு கட்டமாக நடப்பதால் மாணவர்கள் மொத்தமாக தேர்வு எழுதுவது தடுக்கப்படும் என கூறினார்.
இந்த நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்துவது பற்றி தமிழக அரசுக்கு கடிதம் வரவில்லை.
ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.  இதுபற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என தெரிவித்துள்ளார்.

பிளஸ் 1 தொழிற்கல்வி புத்தகங்கள் தட்டுப்பாடு :

தொழிற்கல்வியில் புதிய பாடத்திட்ட புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறையில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. 

ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும், பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும், புதிய பாட புத்தகங்கள் தாமதமாகவே வினியோகம் செய்யப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கான புத்தகங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தொழிற்கல்வியில், 14 பாடங்களுக்கான புத்தகங்களுக்கு, மாநிலம் முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. 

அதனால், தொழிற்கல்வி பாடப்பிரிவு வகுப்புகளில், பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தொழிற்கல்வி மாணவர்கள் கூறியதாவது:தொழிற்கல்வியில், பாடத்திட்டம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில், 14 பாடங்களுக்கு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்கள், பெரும்பாலான பாடநுால் கழக விற்பனை மையங்களில் இருப்பு இல்லாததால், புத்தகங்களை எங்கே வாங்குவது என, தெரியவில்லை.

தொழிற்கல்வி பாட மாணவர்களுக்கு, குறைந்த எண்ணிக்கையில் தான் பாடங்கள் உள்ளன. அவற்றுக்கும், புத்தகங்கள் வழங்குவதை தாமதம் செய்வதால், வரும் பொது தேர்வுக்குள் முழுமையாக தயாராகி, அதிக மதிப்பெண் பெற முடியுமா என்ற, அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக பள்ளி கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, பாட புத்தகங்களை வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்வை கணினி வழியில் நடத்துவது சரியா? ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு அவசியமா? கல்வியாளர் - மாணவர்கள் கருத்து

ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்துவது அவசியமா?, தேர்வை கணினி வழியில் நடத்துவது சரியா? என்பதற்கு கல்வியாளர், தொழில்நுட்ப வல்லுனர், மாணவர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘நீட்’ தேர்வு
மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்த நாளில் இருந்தே தமிழகம் அதை எதிர்த்து வருகிறது. ஆனாலும், 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வும் முடிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும், கணினி வழியில்தான் தேர்வை எழுத முடியும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு மேலும் அந்த எதிர்ப்பை வலுவடைய செய்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘நீட்’ தேர்வை கணினி வழி நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ‘நீட்’ தேர்வை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பை கல்வியாளர்களும், மாணவர்களும் எவ்வாறு கருதுகிறார்கள்? என்பதை இனி பார்ப்போம்.
கல்வியாளர்
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியதாவது:-
போட்டித்தேர்வு என்பது மட்டும் மாணவர்களின் திறமையை வெளிக்கொணருவது கிடையாது. வலுவான பாடத்திட்டம், நல்ல ஆசிரியர்கள், நூலகம் சென்று படித்தல், பாடத்திட்டத்துக்கு தொடர்புடைய கள ஆய்வு செய்தல் என கல்வியை மேம்படுத்த வேண்டும். தற்போது ‘நீட்’ தேர்வில் தகுதி பெற்றவர்களில், மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் ஓராண்டு பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.
தற்போது பிப்ரவரி மாதம் ஒரு தேர்வும், ஏப்ரல் மாதம் மற்றொரு தேர்வும் என ஆண்டுக்கு 2 தடவை ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி மாதம் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும். எனவே மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்துவார்களா? இல்லை, இந்த தேர்வுக்கு தங்களை தயார் படுத்துவார்களா? என்ற கடினமான சூழ்நிலை உள்ளது. நிச்சயம் இது மாணவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும்.
பயிற்சி கட்டணம் தவிர்த்து ‘நீட்’ தேர்வு கட்டணம் ரூ.1,400 ஆகும். தற்போது 2 முறை தேர்வு நடத்தப்பட்டால் 2 தடவை கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏழை-எளிய மாணவர்களுக்கு இது மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும். அவர்களால் ஒரு தேர்வு மட்டுமே எழுத முடியும். வசதி படைத்த மாணவர்கள் 2 தேர்வையும் எழுதுவார்கள். இதில் ஒரு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் கூட அவர்களுக்கு மருத்துவக்கல்லூரி சீட் கிடைத்துவிடும்.
ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக காமராஜர் 6 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தார். ஆனால் தற்போது மத்திய அரசு நீட் தேர்வால் ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது. ‘நீட்’ தேர்வு என்பது வியாபாரம் மட்டுமே. எனவே அதனை ரத்து செய்யவேண்டும். ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தி கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழில்நுட்ப வல்லுனர்
தொழில்நுட்ப வல்லுனர் கார்த்திக் கூறியதாவது:-
ஆன்லைனில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டால் தேர்வு நேரம், அதன் முடிவு அறிவிக்கும் காலம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் தேர்வுக்காக ஒரு சிஸ்டம் தொடங்கினால், ஒரு வருடம் அல்லது 3 வருடங்கள் வரை கடினமாக இருக்கும். தொடர்ந்து நடைபெறும் வரும் சூழலில், தேர்வு எளிதாகிவிடும். தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும் சான்றிதழும் உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்று பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.
அதே சமயத்தில் தீமைகள் என்று சொன்னால் நிறைய கேள்விகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக 500 கேள்விகள் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். 5 பேர் தேர்வு எழுத செல்கிறார்கள் என்றால், அந்த 500 கேள்விகளை ரேண்டமாக அச்சிட்டு, விடைகளை இணைக்கும்போது, கேள்விகள் எளிதாக தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் அதிகப்படியான கேள்விகள் தேவைப்படும் நிலை இருக்கிறது. அதிகமானோர் தேர்வு எழுதுவதற்கான ‘சிஸ்டம்’, அதற்கான இணையதள இணைப்பு உள்ளிட்டவை தேவைப்படும். ஒரே நேரத்தில் அதிகமானோர் தேர்வு எழுதும்போது இணையதள ‘சர்வர்’ முடங்குவதற்கு வாய்ப்பும் இருக்கிறது. மேலும் வினாத்தாள்களை இணையதளத்தில் இருந்து திருடுவதற்கு (ஹேக்) அதிக வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்
ஏற்கனவே, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத நிலையில், மீண்டும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டு வரும் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மாணவர் கவுசிக் (வயது 19) இதுகுறித்து கூறியதாவது:-
ஆன்லைன் மூலம் ‘நீட்’ தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு சாதகமான ஒன்றுதான். ஏனென்றால், ஆன்லைனில் தேர்வு எழுதும்போது, ஒரு கேள்விக்கான பதிலை தவறாக ‘கிளிக்’ செய்துவிட்டாலும், உடனே அதை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், பேப்பரில் தேர்வு எழுதும்போது திருத்திக்கொள்ள முடியாது. அதேபோல், தேர்வு எழுதும் நாள், தேர்வு எழுதும் மையம் ஆகியவற்றை மாணவர்களே தேர்வு செய்ய முடியும் என்பதும் நல்ல விஷயம்தான். ஆனால், கேள்வித்தாள் தான் எவ்வாறு இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு என்பதும் வரவேற்கக்கூடிய அம்சமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. காரணம், 2 முறை தேர்வு நடத்தப்பட்டாலும், அதில் அதிகமாக பெற்ற மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வதால் அதுவும் மாணவர்களுக்கு சாதகமானதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி
சிதம்பரத்தை சேர்ந்த மாணவி பவிதா கூறுகையில், தமிழக மாணவிகள் திறமையானவர்கள். அவர்களுக்கு தகுதித்தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. ஒரு நீட் தேர்வு எழுதுவதற்கே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதில் ஆண்டுக்கு 2 நீட் தேர்வு என்பது இப்போது படிக்கிற மாணவிகளுக்கு ஆறுதலாக இருந்தாலும் கூட இதில் அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கே, முன்னுரிமை என்பது வருத்தம் அளிக்கிறது.
இந்த முறையால் ஆண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக படிக்க வேண்டிய நிலை ஏற்படும். அடுத்த மேல் படிப்பை எப்படி படிப்பது. நீட் தேர்வே வேண்டாம் என்ற நிலையில், 2 தேர்வு தேவையில்லை. இது மாணவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுத்தும் என்றார்.

சென்னை மாணவிக்கு அமெரிக்க நிறுவனம் ஊக்க விருது!!

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018 ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப் விருது , சென்னையைச் சேர்ந்த 21 வயதான மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய குறியீடு ஆராய்ச்சி


சென்னையிலும் மும்பையிலும் இளமைக் காலத்தை கழித்த அபர்ணா, பள்ளிப்படிப்பிலேயே சாதனை புரிபவராக விளங்கினார். கணிதத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்; மேலும் படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார். ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் கிளப்பில் முன்னோடியாக திகழ்ந்த இவர், இந்த தொழில் நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியல் ஈடுபட்டார். மேலும் ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தையும் ( மெக்கானிசம் லேப்) இவர் ஏற்படுத்தினார். ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக் செயின் பயிற்சி அளித்துள்ளார்.

ஒரு லட்சம் டாலர் உதவி


தற்போது தியேல் அறக்கட்டளை ஊக்கவிருதைப் பெறுவதன் மூலம், உலகின் தலைசிறந்த ரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம் பெறுகிறார். இளம் வயதிலேயே நிறுவனங்களைத் தொடங்கவும், சிறந்த பெரிய வழிமுறைகளைக் கண்டறியும் திறமையுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பெல்லோஷிப் வழங்கப்படுகிறது.
பே பால் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பேஸ்புக் அமைப்பின் துவக்க கால முதலீட்டாளருமான பீட்டர் தியேல் என்ற கோடீஸ்வரரின் ஆதரவுடன் ஒரு தனியார் அறக்கட்டளையாக தியேல் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் பெல்லோஷிப் பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் உதவித் தொகையும், தியேல் அறக்கட்டளையைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் வழிகாட்டுதலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும்.

SCERT- தொடக்க/நடு/உயர்/மேல்நிலை ஆசிரியர்களுக்கு காணொலி மூலம் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள் :


ஆசிரியர் பணி நிரவல்: ஒரு மாற்று யோசனை

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணி நிரவல் காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 
அதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தனியார் பள்ளிகளில் சேரும் 25 சதவீத மாணவர்களுக்கு அரசாங்கமே கட்டணம் செலுத்துவது என்ற கொள்கை முடிவு காரணமாக பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். தனியார்பள்ளிகளில் கற்பிக்கப்படும் ஆங்கில வழிக் கல்வியின்மீது பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள மோகம் காரணமாக தனியார் பள்ளிகளை நோக்கி பொதுமக்களின் பார்வை திரும்பியதின் விளைவாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.

அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பெற்றோர்களுக்குப் புரிய வைப்பதில் கல்வியாளர்கள் மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய சிந்தனையாளர்களின் உதவி தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பல குறைகள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி, அத்தகைய தவறுகளை சீரமைத்து வழி நடத்திச் செல்ல வேண்டியது கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரின் கடமையாகும். இல்லையெனில், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசக் கல்வி எட்டாக்கனியாகிவிடும்.150 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆசிரியர்கள், ஒரு தலைமையாசிரியர், ஓர் உடற்கல்வி ஆசிரியர், ஓர் இளநிலை உதவியாளர், ஓர் ஆய்வக உதவியாளர், ஓர் அலுவலக உதவியாளர், ஓர் இரவுக் காவலர் கட்டாயம் தேவை. ஆயினும் பல இடங்களில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது. அலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள்இல்லை. கல்வித்துறை இணையச் செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை. மேலும் பள்ளி சார்ந்த பலவிதமான அலுவலகப் பணி, கருவூலப் பணி, கல்வி அலுவலங்களுக்கு நேரில் சென்று கடிதங்களை ஒப்படைத்தல் பணி என பல்வேறு பணிகளையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள ஆசிரியர்கள் கல்வி கற்பித்தல் பணியோடு இத்தகைய செயல்பாடுகளிலும் ஈடுபடவேண்டிய சூழ்நிலை உள்ளதால் அவர்களுடைய கற்பித்தல் பணி தொய்வடைகிறது. அவற்றைச் செய்யும் ஆசிரியர்கள் அமையாத பள்ளியும், தலைமையாசிரியரும் படும்பாடு சொல்லி மாளாது.இத்தகைய சூழ்நிலையில் குறிப்பாக, கிராமப்புறங்களில்உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பணி நிரவலை முறைப்படுத்தி மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் போதும் என்ற கணக்கிடப்பட்டு மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் நகர்ப்புறங்களைவிட்டு வெகு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை.பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டு வரப்படுகின்றனர். அவர்களுக்கான மாற்றுப் பள்ளி தேடுவதைவிட, தற்போது பணியாற்றும் பள்ளியிலேயே உரிய வகையில் பணியை பின்வருமாறு மாற்றியமைக்கலாம்.புதிய உயர்தர பாடத் திட்டத்தில், சிறப்பான வகையில் பல தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றை நன்முறையில் வெற்றிகரமாக பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆசிரியராக அவர்களை மிளிரச் செய்யலாம். அவர்களுக்கு கூடுதலாக பயிற்சி அளித்து அதை செயல்படுத்தலாம்.

தங்கள் பாடம் சார்ந்த கற்பித்தல் பணியோடு, கணினியை நிர்வகித்தல், கணினியை பயன்படுத்துதல், கணினியைப் பயன்படுத்த மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துஅனைத்து ஆசிரியர்களையும் ஸ்மார்ட் டீச்சராக மாற்றுதல், கணினியை கல்வி கற்பிக்க சிறப்பாகப் பயன்படுத்துதல், மூவகைச் சான்றிதழ்களைப் பெற உதவுதல், பள்ளியின் கடிதப் போக்குவரத்துகளை இணையவழியில் செயல்படுத்துதல், பாடம் சார்ந்த ஒலிஒளி கோப்புகளை உருவாக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வினை எளிமையாக்குதல், கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளை செயல்படுத்துதல், பள்ளி தொடர்பான அரசின் விலையில்லா திட்டங்களை திட்டமிட்டு குறையில்லாமல் பள்ளியில் செயல்படுத்துதல், பள்ளிக் கல்வி முடித்தபின் மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன மேல்படிப்புகள் உள்ளன, அவற்றை எங்கு கற்பது, தொழிற்கல்வி,என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன அவற்றிற்குரிய கல்வியை எங்கு பயில்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒரு தொடர்பாளராக செயலாற்றி, மாணவ, மாணவியர்களுக்கு நல் ஆலோசகராக விளங்க முடியும்.இத்தகைய ஆசிரியர்களை உருவாக்கினால் அரசு பள்ளிகளும்பன்முக வளர்ச்சியை பெறும். உபரி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் பணி நிரவல் தேவையிராது. இனிவரும் காலங்களில் பணி நிரவல் இல்லாமலாக்குவது அரசு, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கையிலும்தான் உள்ளது.

DGE-Internal mark proceedings for +1 and +2 Exams

பள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு

தமிழக அரசின் புதிய சட்டப்படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளி இயக்குனர், தனியார் பள்ளி இயக்குனர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள்
வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க பள்ளி இயக்குனர் கவனித்து வந்தார்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகத்தை, பள்ளிக்கல்வி இயக்குனரும், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரும் கவனித்து வந்தனர்.இந்நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 2018ன் படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் இயக்குனர் பதவி நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கான பொறுப்புகள், தனியார் பள்ளிகள் இயக்குனர் வசம் மாற்றப்பட்டுள்ளன.மாற்றம் என்ன?

= தமிழக அரசின் புதிய சட்டப்படி, ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க கல்வி இயக்குனர் கவனிப்பார்
= 10ம் வகுப்பு வரை செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், பிளஸ் 2 வரை செயல்படும், மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கவனிப்பார்
= மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் கிடையாது. மாறாக, தனியார் பள்ளிகள் இயக்குனர் என்ற, புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இவரே, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., என்ற சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற, பிறவகை பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிப்பார்
= தனியார், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளி, பிரைமரி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகங்களையும், தனியார் பள்ளிகள் இயக்குனரே கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.