யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/18

Flash News : 2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2018-19ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் இடம்பெற்றவர்களின் பட்டியலை டிச.11ல் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
எவ்வளவு பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், எங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், இயக்குநர் விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டிசம்பர் -2018 பள்ளி நாட்காட்டி:

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு :

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது
அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் இயக்குனர் சுடலை கண்ணன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. 



அதன்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோடியாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2015-ஆம் ஆண்டில் 56 லட்சமாக குறைந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், மேலும் குறைந்து 46 லட்சமாக உள்ளது.

21 ஆயிரத்து 378 பள்ளிகளில், வெறும் 15 முதல் 100 வரையிலான மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.

6 ஆயிரத்து 167 பள்ளிகளில், 101 முதல் 250 வரையிலான மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

714 அரசு பள்ளிகளில் மட்டுமே, 251 முதல் ஆயிரம் வரையிலான மாணவர்கள் படித்து வருவதும் தெரியவந்துள்ளது. 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள், வெறும் நான்கு மட்டுமே உள்ள நிலையில், 

900 பள்ளிகளில் பத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

அதே நேரத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, 22 லட்சமாக இருந்த தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது, 52 லட்சமாக உயர்ந்துள்ளது.

மகிழ்ச்சியில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்... வங்கி அறிவித்த திட்டம் அப்படி!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ கடந்த சில மாதங்களாக புதிய அறிவிப்பால் வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் தீபாவளி அறிவிப்பாக, 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து, தற்போது, பிக்சட் டெபாசிட் திட்டத்தின்வட்டி விகிதம் உயர்த்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது இணையதளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.05 முதல் 0.10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஆர்பிஐ 5வது நாணய கொள்கை கூட்டம் வர இருக்கும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போதே எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்று கேள்வை எழுப்பியுள்ளது.
எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ள வட்டி விகிதம் முழு விபரம்
1 கோடிக்கும் கீழ் எஸ்பிஐ வங்கியில்  பிக்சட் டெபாசிடதிட்டத்தில் இணைந்தவர்களுக்கு கடந்த 30.7.18 தேதி மாற்றப்பட்ட வட்டி விகிதம் முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது அட்டவணையில் இன்று(28.11.18)  அறிவிக்கப்பட்ட  வட்டி விகிதம் இடம்பெற்றுள்ளது .


இந்த வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு, மக்களுக்குக் கூடுதலான வட்டி வருமானம் கிடைக்க வழி செய்யும். எஸ்பிஐ- யின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பிற வங்கிகளுக்கு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளில் அக்கவுண்ட வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை! வாடிக்கையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Homeவணிகம்
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளில் அக்கவுண்ட வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!
வாடிக்கையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகளில் அக்கவுண்ட வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!
நாட்டின் மிகப்பெரிய வங்கிகள் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப் போன்ற வங்கிகள் பிக்சட் டெசாபிட் திட்டத்தில் எவ்வளவு வட்டி விகிதத்தை அளிக்கின்றன என்பது குறித்து கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
எஸ்பிஐ வங்கி நேற்றை தினம் தனது இணையதளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் உயர்த்தி வாடிக்கையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.05 முதல் 0.10 சதவீதம் வரை உயர்த்தியது. ஆர்பிஐ 5வது நாணய கொள்கை கூட்டம் வர இருக்கும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்று கேள்வியையும் எழுப்பியது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் பெரும் கவனத்தை பெற்று ஐசிஐசிஐ, எச்டிஎப் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் எவ்வளவு வட்டிவிகிதம் வழங்குகின்றன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
1. ஐசிஐசிஐ வங்கி :
1 கோடிக்கு கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐசிஐசி வங்கி அளிக்கும் வட்டி விகிதம் இந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் திட்டத்திற்கான வட்டி விகிதம் முதல் கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.
மூத்த குடிமக்கள் தொடரும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அளிக்கப்படும் வட்டி விகிதம் இரண்டாவது கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.

2. எச்டிஎப்சி வங்கி :
1 கோடிக்கு கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎப் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் இந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் திட்டத்திற்கான வட்டி விகிதம் முதல் கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.
மூத்த குடிமக்கள் தொடரும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அளிக்கப்படும் வட்டி விகிதம் இரண்டாவது கால அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.


3. எஸ்பிஐ வங்கி:
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் எஸ்பிஐ வங்கி அளிக்கும் வட்டி விகிதத்தை  இங்கே கிளிக் செய்து தெரிந்துக் கொள்ளுங்கள் 

CPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும் மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும் - திண்டுக்கல் எங்கெல்ஸ்:

CPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும்
மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும் - திண்டுக்கல் எங்கெல்ஸ்*
🔥
🛡 தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் சுமார் 5,10,000 அரசு ஊழியர் ஆசிரியர் உள்ளிட்ட CPS சந்தா தாரர்கள் உள்ளனர்.
🔥
🛡 இவர்களிடமிருந்து நாளது தேதி வரை சுமார் ரூ.13,000,00,00,000/- CPS சந்தாத் தொகையாக அரசு பிடித்தம் செய்துள்ளது.
🔥
🛡 இதற்கு ஈடான அரசின் பங்களிப்பாக, சுமார் ரூ.13,000,00,00,000/-யை இதுவரை அரசும் செலுத்தி வந்துள்ளது.
🔥
🛡 தற்போதைய சூழலில் இவ்வாறு ஈடு செய்ய வேண்டிய அரசின் பங்களிப்பானது, சுமார் ரூ.150/- கோடியிலிருந்து ரூ.200/- கோடி மாதாந்திர தொடர் செலவினமாக அரசின் சார்பில் செலவிடப்பட்டு வருகிறது.
🔥
🛡 அரசு ஊழியருக்கு ஓய்வூதியமோ, குடும்ப ஓய்வூதியமோ ஒரு பைசா கூட வழங்க இயலாத இந்த *CPS திட்டத்தால் அரசு ஊழியர்களின் ஊதியமும் அரசின் நிதியும் ஒருங்கே சுரண்டப்பட்டு வருகிறது.*
🔥
🛡 தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்தினால் *அரசின் பங்களிப்பான ரூ.13,000 கோடி  உடனடி வருவாயாக அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும்.*
🔥
🛡 மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பான *ரூ.13,000 கோடி மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர வைப்பு நிதியாக அரசிற்குக் கிடைக்கும்.*
🔥
🛡 இதுமட்டுமின்றி தற்போது மாதந்தோறும் அரசு பங்களிப்பாக அளித்து வரும் சுமார் ரூ.200/- கோடியை அரசு செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால் *அரசின் மாதாந்திர நிதிச் செலவினத்தில் மாதந்தோறும் ரூ.200/- கோடி குறையும்.*
🔥
🛡 எனவே, CPS திட்டத்தை இரத்து செய்துவிட்டு *பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக அரசிற்கு பெருத்த & தொடர் மாதாந்திர நிதி இழப்பு சரிசெய்யப்படுவதோடு சுமார் 5 இலட்சம் ஆசிரிய அரசு ஊழியர் குடும்பங்களும் பயனடையும்*
🔥
🛡 தமிழக மூத்த அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இடையேயான இன்றைய (30.11.2018) பேச்சுவார்த்தையில் இது குறித்து  வலியுறுத்தப்படும் என பிரடெரிக் எங்கெல்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜாக்டோ ஜியோ உயர் மட்ட குழு உறுப்பினர்கள் அரசுடன் ஏற்பட்டபேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை| டிசம்பர் 4 முதல் கால வரையற்றவேலை நிறுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் :

இன்று 30.11.2018 மாலை ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.இதனால் நாளை மீண்டும் சென்னையில் உயர்ம்மட்ட குழு  உறுப்பினர்கள் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு .செல்வராஜ் அவர்கள் தெரிவித்தார் .