யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/8/17

PGT,HSHM TO HSSHM PROMOTION COUNSELLING ANNOUNCED - அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெற உள்ளது.


2017-2018 ஆம் கல்வியாண்டிற்கு அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  01.01.2017 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 28.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில்   நடைபெற உள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது காலியாக உள்ள 120  தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ள நிலையில் , சுழற்சி பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை இடம் பெற்றுள்ள ஆசிரியர்களில் பதவி உயர்வு துறப்பு செய்பவர்களின் பணியிடங்களையும் மாணவர்கள் நலன் கருதி நிரப்ப வேண்டியுள்ளதால்,  இந்த சுழற்சி   பட்டியலில் வரிசை எண். 622 முதல் 820 வரை  இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் தவறாமல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ள அம்சங்கள் என்ன? கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தகவல்

புதிய பாடத்திட்டத்தில் இடம்பெற உள்ள அம்சங்கள் என்ன? என்பது குறித்து கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த 
கிருஷ்ணன் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம் வடிவமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்ததும் கலைத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு பாகம், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மற்றொரு பாகமாக பிரித்து பாடத்திட்டங்கள் தயார் செய்யும் பணி நடைபெறுகிறது. இதில் அடிப்படை மாற்றங்கள் கொண்டுவர வேண்டி இருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படும் என்பதை எதிர்கால திட்டத்துடன் மாணவர்களுக்கு பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

பாடத்திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாகவும் ஆலோசனை கேட்க இருக்கிறோம். இந்த ஆலோசனை கூட்டம் 9-ந்தேதி மதுரையிலும், 11-ந்தேதி கோவையிலும், 22-ந்தேதி சென்னையிலும், 24-ந்தேதி தஞ்சாவூரிலும் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து பேச வேண்டும்.

இதில் பொதுமக்கள் மட்டுமல்லாது மாணவர்களும் கலந்துகொள்ளலாம். அவர்கள் கூறும் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படும். நாங்களும் சில பள்ளிக்கூடங்களுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடமும் கருத்து கேட்க இருக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

எல்லா பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை சுற்றுலா அமைத்து செல்ல தடை , பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு