யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/2/18

இன்னும் 4 நாட்களில் டவர் பிரச்சனை சரியாகிவிடும்; கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் நிறுவனம்!

முடங்கிய  ஏர்செல் சேவை, 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் ஏர்செல் டவர் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பல்வேறு இடங்களில் டவர்கள் இயங்காததால், சிக்னல் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதனால் வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஏர்செல் அலுவலகத்தில் சென்று பொதுமக்கள் முறையிட்டனர்.

ஆனால் அங்கு முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் மேற்கு தாம்பரம் பகுதி ஏர்செல் அலுவலகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் முடங்கியுள்ள ஏர்செல் சேவை 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி

ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி, இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், நேற்று முன்தினம், தொடர் மறியல் போராட்டம் துவங்கியது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், சென்னைக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர். நேற்று,
இரண்டாவது நாளாக போராட்டம் நீடித்தது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதத்துக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். அதுவரை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், கைதானவர்கள் முகாமிட்டிருந்தனர்.
போராட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், தாஸ் கூறுகையில், ''போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் வகுப்புகளை, 'கட்' அடிக்கவில்லை. சுழற்சி முறையில் விடுமுறை கேட்டு, போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அரசு பேச்சு நடத்தும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.

2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில்பாலிவால் தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொறியியல், பாலிடெக்னிக்கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளைபொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம்ஒப்படைக்க உள்ளோம்.

இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு'

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகம் முழுவதும்,மெட்ரிக் இயக்ககம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கப் பள்ளி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்குகின்றன.கட்டாய கல்விஉரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கல்வி கட்டண நிர்ணயக் குழு, 2009ல் அமைக்கப்பட்டது.இந்த குழுவின், தற்போதைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி பணியாற்றி வருகிறார்.அவரது தலைமையிலான குழுவே, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கிறது.

நடப்பு கல்வி ஆண்டு மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, நிர்ணயிக்கும் பணிகள், தற்போது நடக்கின்றன.கட்டண நிர்ணயத்துக்காக வரும் பள்ளிகள், அங்கீகார சான்றிதழ், உட்கட்டமைப்பு வசதிகள், அரசு துறைகளின் பல்வேறு வகை சான்றிதழ்கள் என, பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவற்றை எல்லாம் பரிசீலித்து, கல்வி கட்டணத்தை, குழு நிர்ணயிக்கும்.இந்நிலையில், இந்தாண்டு முதல், அனைத்து தனியார் பள்ளிகளும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, ரொக்கமாக வழங்காமல், இ.சி.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்' முறையில், வங்கிகள்வாயிலாக வழங்க வேண்டும்.

கல்வி கட்டண அனுமதி பெறும் பள்ளிகள், இ.சி.எஸ்., முறைக்கு மாற வேண்டியது கட்டாயம்என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கட்டண நிர்ணயம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் போது, குறைந்தபட்சம், கடைசி மூன்று மாதங்கள், இ.சி.எஸ்., முறையில் ஊதியம் கொடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வி கட்டண நிர்ணயக் குழுஉத்தரவிட்டு உள்ளது.இ.சி.எஸ்.,க்கு மாறாத பள்ளிகளுக்கு, கட்டண நிர்ணய அனுமதி  வழங்கப்படாது என்றும், கூறியுள்ளது.

தேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்

புதுடில்லி: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே, ரயில்வே பணியாளர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
ரயில்வே துறையில், 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து,ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் அளித்த விளக்கம்: மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால், ரயில்வே பணியாளர் தேர்வை எழுத விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. இதனால், நேரம் மற்றும் பணம் விரயமாகிறது.இதை தடுக்க, தேர்வு எழுதுவதற்கான கட்டணம், கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இனி மேல் இவர்களுக்கு, 250 ரூபாய், முன்னெச்சரிக்கை கட்டணமாக வசூலிக்கப்படும். இதர விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம், 100லிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். மையங்களுக்கு வந்து தேர்வு எழுதியவர்களில், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் வருபவர்களுக்கு, 250 ரூபாயும், இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு, 400 ரூபாயும் திருப்பி அளிக்கப்படும்.
 இதன் மூலம், தேர்வுக்கு விண்ணப்பித்து, தவறாமல் ஆஜராகி அதை எழுதுவோருக்கு, எந்த கட்டண உயர்வும் இருக்காது. அதே போல், தேர்வின் போது, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டர் வாயிலாக, 15 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மைய வருகைப் பதிவில், விண்ணப்பதாரர்கள், தேர்வு எழுதும் மொழியிலேயே கையெழுத்திடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் 'டிஜிட்டல்' முறையில் சம்பளம் : கட்டண நிர்ணய குழு உத்தரவு!!!

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்'
என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகம் முழுவதும், மெட்ரிக் இயக்ககம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கப் பள்ளி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்குகின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கல்வி கட்டண நிர்ணயக் குழு, 2009ல் அமைக்கப்பட்டது.இந்த குழுவின், தற்போதைய தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, மாசிலாமணி பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழுவே, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கிறது.நடப்பு கல்வி ஆண்டு மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, நிர்ணயிக்கும் பணிகள், தற்போது நடக்கின்றன.கட்டண நிர்ணயத்துக்காக வரும் பள்ளிகள், அங்கீகார சான்றிதழ், உட்கட்டமைப்பு வசதிகள், அரசு துறைகளின் பல்வேறு வகை சான்றிதழ்கள் என, பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அவற்றை எல்லாம் பரிசீலித்து, கல்வி கட்டணத்தை, குழு நிர்ணயிக்கும்.இந்நிலையில், இந்தாண்டு முதல், அனைத்து தனியார் பள்ளிகளும், தங்களது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, ரொக்கமாக வழங்காமல், இ.சி.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம்' முறையில், வங்கிகள் வாயிலாக வழங்க வேண்டும்.கல்வி கட்டண அனுமதி பெறும் பள்ளிகள், இ.சி.எஸ்., முறைக்கு மாற வேண்டியது கட்டாயம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.கட்டண நிர்ணயம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் போது, குறைந்தபட்சம், கடைசி மூன்று மாதங்கள், இ.சி.எஸ்., முறையில் ஊதியம் கொடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வி கட்டண நிர்ணயக் குழுஉத்தரவிட்டு உள்ளது.இ.சி.எஸ்.,க்கு மாறாத பள்ளிகளுக்கு, கட்டண நிர்ணய அனுமதி வழங்கப்படாது என்றும், கூறியுள்ளது 

சத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று!!!

அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு இலவசமாக
பப்பாளி, முருங்கை மரக்கன்று வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும், 40 ஆயிரம் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை படிக்கும், 50 லட்சம் மாணவர்களுக்கு, சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும், ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது.பப்பாளி மற்றும் முருங்கையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு, நீர்சத்து அதிகம் உள்ளது. இதனால், மையத்திற்கு ஒரு பப்பாளி, ஒரு முருங்கை மரக்கன்றை இலவசமாக வழங்க, தோட்டக்கலை துறை ஏற்பாடு செய்து வருகிறது. கன்றுகள் வளர்ந்தபின், மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் முருங்கை கீரை, முருங்கை குழம்பு, பப்பாளி பழம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.சத்துணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளிகளில் மரம் வளர்ப்பது, நிழல் தர மட்டுமின்றி, மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவ வேண்டும். எனவே, பப்பாளி, முருங்கையை உணவோடு சேர்க்க, அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இட வசதியிருந்தால், கூடுதல் மரங்களை நடவு செய்யலாம்' என்றார்.

2,336 கல்லூரி பேராசிரியர்கள் விரைவில் தேர்வு செய்ய முடிவு!!

கோவை: ''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொறியியல், பாலிடெக்னிக்கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளை பொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம் ஒப்படைக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது!!!

தமிழகம் முழுவதும், மாணவர்களுக்கு வழங்கப்படாத, 4,000 இலவச, 
'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.'லேப் - டாப்' உட்பட, 14 வகையான இலவச பொருட்கள், ஏழு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, இவை வழங்கப்படுகின்றன. இதில், பள்ளி படிப்பு முடிந்த பின், உயர் கல்விக்காக இடமாறும் மாணவர்கள், லேப் - டாப்பை வாங்க முன்வருவதில்லை. சிலர், பள்ளிகளில் இருந்து சரியான தகவல் கிடைக்காததால், வாங்காமல் விடுகின்றனர்.இந்த வகையில், விடுபட்ட மாணவர்களுக்கான, லேப் - டாப்களை, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், சில பள்ளிகளில், அவற்றை ஆசிரியர்கள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்று ஆண்டுகளில், மாநிலம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட லேப் - டாப்கள், மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரிய வந்து உள்ளது.இதையடுத்து, எத்தனை மாணவர்களுக்கு, லேப் - டாப் வழங்கப்பட்டு உள்ளது என்ற விபரத்தை, ஆதாரத்துடன் அளிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அதோடு, வழங்கப்படாத லேப் - டாப்களை, திரும்ப ஒப்படைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்வு கட்டணம் உயர்வு : ரயில்வே அமைச்சர் விளக்கம்!!!

புதுடில்லி: விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே,
ரயில்வே பணியாளர் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.ரயில்வே துறையில், 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் அளித்த விளக்கம்: மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால், ரயில்வே பணியாளர் தேர்வை எழுத விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. இதனால், நேரம் மற்றும் பணம் விரயமாகிறது.இதை தடுக்க, தேர்வு எழுதுவதற்கான கட்டணம், கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு, இதுவரை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இனி மேல் இவர்களுக்கு, 250 ரூபாய், முன்னெச்சரிக்கை கட்டணமாக வசூலிக்கப்படும். இதர விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம், 100லிருந்து, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். மையங்களுக்கு வந்து தேர்வு எழுதியவர்களில், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் வருபவர்களுக்கு, 250 ரூபாயும், இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு, 400 ரூபாயும் திருப்பி அளிக்கப்படும். இதன் மூலம், தேர்வுக்கு விண்ணப்பித்து, தவறாமல் ஆஜராகி அதை எழுதுவோருக்கு, எந்த கட்டண உயர்வும் இருக்காது. அதே போல், தேர்வின் போது, ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டர் வாயிலாக, 15 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மைய வருகைப் பதிவில், விண்ணப்பதாரர்கள், தேர்வு எழுதும் மொழியிலேயே கையெழுத்திடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கற்களைக் கரைக்கும் காய்கறிகள், பழங்கள்!!!

                               

காய்கறிகளில் பூசணிக்காய், நூக்கல், வெள்ளை
முள்ளங்கி, கோவைக்காய்... பழங்களில் ஆப்பிள், சாத்துக்குடி, அன்னாசி, மாதுளம், ஆரஞ்சு, பேரிக்காய், கொய்யா சாப்பிடலாம். கூடவே கரும்புச்சாறு குடிக்க மறக்க வேண்டாம். இவை சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் கரைய சாப்பிட வேண்டிய காய்கறிகள் பழங்கள் ஆகும்.

முளைக்கீரை, சாட்டரணை, யானை நெருஞ்சி, சிறு நெருஞ்சி, கரிசலாங்கண்ணி கீரைகளும், வாழைத்தண்டும் சாப்பிட்டால், சிறுநீரகம், பித்தப்பையில் கற்களை கரைக்கும்.

கீரைகளை வாரம் இருமுறை, தாராளமாகச் சாப்பிடலாம். தினமும் வாழைத்தண்டு சாறு எடுத்து பலர் சாப்பிடுகின்றனர்; அது தவறு. இது, உடலில் உள்ள உயிர் சக்தியை உறிஞ்சிவிடும் என்பதால், 15 நாள்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.

கரிசலாங்கண்ணி கீரையை உண்ணும்போது கபநீர் வெளியேறுவதால் சுவாசப்பையும் நுரையீரலும், பித்தநீர் வெளியேறுவதால் கல்லீரலும் பித்தப்பையும், மலம் வெளியேறுவதால் பெருங்குடலும், நீர் பிரிவதால் சிறுநீர்ப்பையும் சுத்தம் அடைகின்றன.

வெள்ளரிக்காய், முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு சாப்பிடுவதால், சிறுநீரகம் நன்றாக இயங்க உதவுவதுடன், நீர் நன்றாக குடித்தால் கற்கள் சேர்ந்தாலும் சிறுநீரில் பிரிந்து வந்துவிடும்.

கரிசலாங்கண்ணி கீரையை பச்சையாகவோ, சமையல் செய்தோ, நாள்தோறும் உட்கொண்டால், பித்தப்பை, சிறுநீரகக் கற்கள் கரைந்து மறைந்தே போய் விடும். இந்த கீரையில் உள்ள பழுப்பு இலைகளை நீக்கி, வாயில் போட்டு மென்று, சாற்றை விழுங்கி, சக்கையைப் பல் தேய்க்கலாம்.

தவிர, வாய் முழுவதும் நாக்கு, உள்நாக்கு உட்பட மேலும் கீழும் விரல்களால் தேய்த்தால், மூக்கு, தொண்டையிலுள்ள கபம் அந்நேரமே வெளியாகும். பித்தப்பையில் கற்கள் இருந்தால், அந்நேரமே பித்தம் வெளியேறும். அதிலுள்ள கற்கள் வாந்தி, மலம் மூலம் வெளியேறும். மேலும், சிறுநீரகம் சுத்தப்படுவதுடன், சிறுநீர்ப் பையில் கற்கள் இருந்தால், அவை சிறுநீரில் கரைந்து வெளியேறும்.

மேலும், சிறுநீரகம், பித்தப்பையின் கழிவுகளை வெளியேற்ற, உடல் தாகமாக தண்ணீர் கேட்கும். ஆனால், நாம் அந்த உடல் மொழியை அலட்சியப்படுத்துகிறோம். இது தவறு. தாகம் எடுக்கும்போது, தண்ணீர் குடித்தால், பித்தப்பை, சிறுநீரகப்பைச் சிறப்பாக இயங்கும்.

அதேபோல், அளவுக்கு அதிகமாக காபி சாப்பிடுபவர்களுக்கு, பித்தப்பையில் நச்சுத்தன்மை உருவாகி, பின் அது கற்களாக மாறும். எனவே, காபி குடிப்பதற்குப் பதில், இஞ்சி டீ குடித்தால், பித்தப்பை சுத்தமாகும்.

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

                                       

திருச்சி, ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த தொழிற்சாலை
உதவியாளர், தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 38

பணியின் தன்மை: மூத்த தொழிற்சாலை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர்

வயது வரம்பு: 18 - 35 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு

கட்டணம்: ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 16.03.2018

மேலும் விவரங்களுக்கு
http://aavinmilk.com/hrtry120218.html என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!

தமிழக அரசு 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தும்,
6 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்பி பதவியில் பணியாற்றிய 12 பேர் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். டாக்டர் கே.ஏ.செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், ஏ.ஜி.பாபு, செந்தில் குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, அசியம்மாள், ராதிகா, லலிதா லட்சுமி, ஜெயகௌரி மற்றும் காமினி ஆகியோர் டிஐஜிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கடலோரக் காவல்படை டிஐஜியாக பவானீஸ்வரி, விழுப்புரம் சரக டிஐஜியாக சந்தோஷ் குமார், கோவை சரக டிஐஜியாக கார்த்திகேயன், திண்டுக்கல் சரக டிஐஜியாக ஜோஷி நிர்மல்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராக அன்பு, சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஐஜியாக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

ஏர்செல் சேவை முடக்கம் : அதிகாரி விளக்கம்!

தமிழகத்தில் ஏர்செல் சேவை முடங்கியதற்கான காரணம்
குறித்து அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏர்செல் சேவை திடீரென முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் இணைப்பு, வணிக வியாபாரம் என அனைத்துமே மொபைல் நெட்வொர்க்கை நம்பியே இருப்பதால் இந்தச் சேவை முடக்கம் மக்களை கொதிப்படைய செய்துள்ளது. இதனையடுத்து ஏர்செல் சேவையில் இருந்து மற்ற செல்போன் நிறுவனங்களில் சேவையை பெறுவதில் வாடிக்கையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அதுவும் சிக்கலாக உள்ளதால் ஏர்செல் நிறுவனங்கள் முன்பு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை மூன்று நாட்களில் மீண்டும் சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "செல்போன் சேவை நிறுவனத்தில் கடும் போட்டி இருப்பதால், ஏர்செல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. எல்லா செல்போன் சேவை நிறுவனங்களைப் போன்று ஏர்செல் நிறுவனமும் டவர்களை மற்றொரு நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்து தான் சேவையை வழங்கி வருகிறது. எங்களுக்கும், டவர் கம்பெனிக்கும் இடையே நிலுவை தொகை பாக்கி இருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீதம் டவர்களை அந்த கம்பெனி வலுக்கட்டயமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணைத்துள்ளது. அதன்படி 9 ஆயிரம் டவர்களில் 8 ஆயிரம் டவர்கள் இயங்கவில்லை. இது எங்களுக்கும், இன்னொரு கம்பெனிக்கும் உள்ள நிதி மற்றும் சட்ட பிரச்சினை என்றாலும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அளவுக்கு சென்றிருப்பது வருத்தம் அளிக்கிறது.

தற்போது ஏர்செல்லுக்கும், டவர் சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு டவர்கள் எல்லாம் இயங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. ஒரு வேளை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், மற்ற சேவை நிறுவனங்களுடன் இணைந்து அந்த நிறுவனங்களின் சேவையை வாடிக்கையாளர்களுக்குப் பெற்று தரும் முயற்சியில் ஏர்செல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபடும்.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் ‘போர்ட் அவுட்’ முறையில் மற்ற செல்போன் சேவை நிறுவனங்களுக்குச் செல்வார்கள். இப்போது 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் போர்ட் சர்வரைப் பயன்படுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் போர்ட் அவுட் சர்வரில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அது சரியாகி வரும். அவரவர்களுக்கு போர்ட் அவுட் எண் கிடைக்கும். அதன் பின்னர் அவர்கள் விரும்பும் செல்போன் சேவையை பெற்றுக்கொள்ளலாம். போர்ட் அவுட் முறையைப் பயன்படுத்தி கொள்ள ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அரசாணைகள் வாட்ஸ்அப்பில் அனுப்பக்கூடாது! : சித்தராமையா

வாட்ஸ்அப், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற சமூக வலைதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 
அரசாணைகள் அனுப்பப்படுவது சட்டப்படி செல்லாது என்று அறிவித்துள்ளார் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா.

அரசுத்துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது தற்போது பரவலாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு அதிகாரிகள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சரில் குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு, தங்களுக்குள் தகவல் பரிமாறி வருகின்றனர். தங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தகவல்கள் தெரிவிக்க, இதனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவ்வாறு தகவல்களைப் பரிமாறிக்கொள்வது சட்டப்படி செல்லாது என்று அறிவித்திருக்கிறது கர்நாடகா மாநில அரசு.

கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினரான கோட்டா சீனிவாச பூஜாரி என்பவர், அரசு அலுவலர்கள் மத்தியில் வாட்ஸ்அப் போன்ற தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, அதன் மூலமாகத் தகவல்கள் பரிமாறிக்கொள்வது பற்றிக் குழப்பம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். அரசு ஆணைகள் மற்றும் சுற்றறிக்கைகளை மெசெஞ்சர்களில் அனுப்புவது சட்டப்பூர்வமானதா என்றும், அரசுத்துறைகளில் குறிப்புகளை பரிமாறவும் அரசாணைகளைத் தெரிவிக்கவும் இவை அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அவர் விளக்கம் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, “இதுவரை இதுபற்றி எந்த புகாரும் அரசுக்கு வரவில்லை. இதுபோன்ற தகவல்தொடர்பு சாதனங்கள் மூலமாக அரசாணைகளையோ, சுற்றறிக்கைகளையோ அனுப்புவதை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. அரசு அதிகாரிகளோ, அதிகாரத்தில் உள்ளவர்களோ தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்தி, அதன் மூலமாகப் பேசிக்கொள்வது வெறும் தகவல் தொடர்புக்கானது மட்டுமே ஆகும். அது, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதல்ல. இம்மாதிரி அனுப்பப்படும் தகவல்கள், அதிகாரப்பூர்வமான அரசின் ஆணைகளாக ஏற்றுக்கொள்ளப்படாது” என்று விளக்கமளித்தார்.

”பல அரசு அதிகாரிகள் அரசாணைகளை வாட்ஸ் அப்பிலோ, வேறு ஆப்ஸ் மூலமாக அனுப்பி வருகிறார்கள். அதன்படி செயலாற்றுவதா அல்லது வழக்கம்போல அரசாணை வரும் வரை காத்திருப்பதா என்று புரியாமல், ஊழியர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த விவகாரத்தில் தெளிவினை உண்டாக்கியுள்ளார் சித்தராமையா” என்று குறிப்பிட்டுள்ளார் இந்த விவாதத்தை எழுப்பிய பூஜாரி.

வேதாரண்யத்தில் வரும் 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

வேதாரண்யம் தாலுகாவில் வரும் 26ம் தேதி
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேதாரண்யம் கோவிலில் வரும் 26ம் தேதி தேரோட்ட விழா நடைபெறுவதையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

அரசு வேலை வேண்டுமா??

TNPSC & TET தேர்விற்கு அல்லும், பகலும்  படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை 
கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று  உங்கள் பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.


   1000 GroupD  பதவிகளுக்கு கூட 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க முடியாதா என ஏங்குகிறோம். மிகவும் சிரமப்பட்டு படிக்கிறோம். நமக்கு நாமே போட்டியை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

      ஆனால், எந்தவித கடினமும்  இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு பணிகளையும் வட மாநிலத்தவர்கள் தட்டிச் செல்கிறார்கள்.இதற்கு காரணம் நம்மிடையே RRB, SSC, UPSC, IBPS, SBI, SAIL, IOCL, BHEL, BEL, BEML, INDIAN POSTAL DEPARTMENT, BANKING EXAM, DEFENCE FACTORY, ISRO...... இன்னும் இது போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே.

     இவற்றை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.இத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம் வரும்போது விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தேர்வில் வெற்றிப்பெற பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.   
    இரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மிகவும் எளிது. அதுவும் TNPSC போட்டி தேர்விற்காக படிப்பவர்களுக்கு இது இது மிக மிக எளிது. வடஇந்திய மாநிலத்தவர்கள் அதிகமானோர் தெற்கு ரயில்வேயில் பணிப்புரிகிறார்கள். இதற்கு காரணம் நாம் நம்முடைய எதிர்ப்பு தெரிவிக்காததே. நம்முடைய எதிர்ப்பு என்பது ரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மூலமாக காட்ட வேண்டும். அனைத்து இரயில்வே தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். அதில் நாம் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று பணிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் வட இந்திய இளைஞர்களின் வருகை தானாக குறையும்.

      இரயில்வே துறை தேர்வுகளில்
வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:

1.ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களின் தொகுப்பை (கடந்த 5-10 ஆண்டுகள்) படித்தாலே நமது வெற்றி 60% உறுதி செய்யப்பட்டு விடும்.

மீதியுள்ள 40%
2.6முதல் 10 வகுப்பு வரையுள்ள கணிதம், அறிவியல், சமூகவியல்  புத்தகங்களை மேலோட்டாமாக படித்தாலே போதுமானது.

3.நடப்பு நிகழ்வுகள்.
    இதில் விளையாட்டு, மத்திய  மாநில துறை அமைச்சர்கள், துறை தலைவர்கள், செயலர்கள், கூட்டமைப்பு, உலக அமைப்புகள், மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் சம்மந்தமான கேள்விகள் இடம்பெறும்.

4.Mental Ability Questions.
5.இரயில்வே துறை சம்பந்தமான கேள்விகள் 1 அல்லது 2.(இது NTPC தேர்வுகளுக்கு மட்டும் பொருந்தும்)

இம்முறையில் படித்தாலே RRB  தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெறலாம்.

பதினோறாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கவலை வேண்டாம்-அமைச்சர் செங்கோட்டையன்

இன்று சென்னையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 
கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயம்கொள்ள வேண்டாம் தேர்வில் தோல்வியடைந்தாலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத வழியுள்ளது என தெரிவித்தார்.

நீட் தேர்வு மனு தள்ளுபடி..!

நீட் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான 
கட்டுப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வயது கட்டுப்பாட்டை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுதமுடியாது என்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடியானது.

தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்கை

தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே 
பள்ளிகளில் குழந்தையைச் சேர்க்க அனுமதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போலியோ, அம்மை, காசநோய் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது எனவும் கூறினார்.

DGE-+1 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு -2018 தேர்வு கூட அனுமதி சீட்டுகள் பதிவிறக்கம் செய்திட தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல்!!!