யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/2/18

இன்னும் 4 நாட்களில் டவர் பிரச்சனை சரியாகிவிடும்; கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் நிறுவனம்!

முடங்கிய  ஏர்செல் சேவை, 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் ஏர்செல் டவர் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பல்வேறு இடங்களில் டவர்கள் இயங்காததால், சிக்னல் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதனால் வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஏர்செல் அலுவலகத்தில் சென்று பொதுமக்கள் முறையிட்டனர்.

ஆனால் அங்கு முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இதையடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் மேற்கு தாம்பரம் பகுதி ஏர்செல் அலுவலகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் முடங்கியுள்ள ஏர்செல் சேவை 4 நாட்களில் சரியாகிவிடும் என்று தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக