யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/2/17

வருகிற கல்வியாண்டிலாவது கணினிக் கல்வி அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்படுமா.......?CM-CELL -REPLY

No automatic alt text available.

மாத ஊதியம் பெறுவோருக்கான

ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை
வருமான வரி 10%ல் இருந்து 5% ஆக குறைப்பு*

*ரூ. 3 லட்சம் வரையிலான மாத வருமானத்துக்கு வருமான வரி
விலக்கு*

*அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க ஜேட்லி அதிரடி அறிவிப்பு*

*ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான மாத வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி*

*ரூ. 1 கோடிக்கு அதிகமான மாத வருவாய் மீதான 15% கூடுதல் வரி தொடரும்*

*தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை*

*வருமான வரி விகிதம் குறைப்பு:*
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 சதவீதமாகஇ ருந்த வருமான வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரிச்சலுகைகளை கருத்தில் கொண்டால் ரூ.3 லட்சம் வருமானத்திற்கு வரி இருக்காது.

#ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு தலா ரூ.12,500 கழிவு அனுமதிக்கப்படும்.
வரிவிகித குறைப்பால் அரசுக்கு ரூ.15,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.


மேலும் ஒரே ஒரு பக்கத்தில் வருமான வரி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் .

IT - 12C FORM

TNPSC 2017 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு

பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு




பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் தயாரிப்பில் முக்கிய பணியாற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் மீது 2% கூடுதல் சுங்கத்தீர்வை விதிக்கப்படவுள்ளதால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது.

இந்தபுதிய வரிவிதிப்பினால் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பயன் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட போர்டுகளைப் பயன்படுத்தும் மொபைல் போன்களின் விலை 1% வரை இதனால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் இறக்குமதிசெய்யப்பட்ட சர்கியூட் போர்டுகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுசெல்போன்கள் தயாரிப்பு செலவில் 25-30% தாக்கம் செலுத்துவதாகும்.

மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரி காரணமாக புகையிலை உள்ளிட்ட சில பொருட்கள் விலை உயர உள்ளன. அதேநேரம் சூரிய மின்சக்தி தகடுகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலை குறைய உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:

விலைஉயரும் பொருட்கள்:

சிகரெட், பான் மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை.

எல்.இ.டி. விளக்குகள்

வறுத்த முந்திரி பருப்பு

அலுமினிய தாதுக்கள்

பாலிமர் எம்.எஸ். டேப்புகள்

வெள்ளி நாணயங்கள், பதக்கங்கள்

செல்போன் சர்க்கியூட் போர்டுகள்

விலைகுறையும் பொருட்கள்

ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள்

வீட்டு உபயோக ரிவர்ஸ்டு ஆஸ்மாசிஸ் தகடுகள்.

திரவஎரிவாயு

சூரிய மின் சக்தி தகடுகள்

காற்றாலை ஜெனரேட்டர்

பி.ஓ.எஸ். இயந்திரங்கள், விரல் ரேகை பதிவு இயந்திரங்கள்


பாதுகாப்பு துறை சேவைகளுக்கான குழு காப்பீடு

TNTET: ஆசிரியர் தகுதி தேர்வு எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள இக்கால கட்டத்தில்
அனைவரின் கேள்வியும் அதுவே.

அதற்கான பதிவு பதில் இங்கே...
ஆசிரியர் தகுதி தேர்வு தயாராகும் முன் தெளிவாக பாட திட்டம் அறிதல் அவசியம்
பாடதிட்டம் :
தாள்1:
வகுப்பு 1 முதல் 8 வரைஅனைத்து சமச்சீர் புத்தக பாடம் + உளவியல் = 120 + 30
தாள்2 :
வகுப்பு 6 முதல் 10 வரை(தமிழ், அறிவியல் 12 வரை படிக்கலாம்)
தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பட்டதாரிகள்
தமிழ் : 30
ஆங்கிலம் : 30
ச.அறிவியல்: 60
உளவியல் : 30
அறிவியல், கணித பட்டதாரிகள் :
தமிழ்: 30
ஆங்கிலம் : 30
கணிதம் : 30
அறிவியல் : 30
உளவியல் : 30
இதற்கான தயாரிப்பு எங்கு எப்படி துவங்குவது?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது பாட வாரியான தோராய கால அட்டவணை
உதாரணமாக
தமிழ் வகுப்பு 6 : அரை நாள்
7 : அரை நாள்
8 : ஒரு நாள்
9 : ஒரு நாள்
10: ஒரு நாள்
மொத்தமாக 4 அல்லது 5 நாட்கள். அனைத்து பாடத்திற்கும் மொத்த கால அளவு தோராயமாக 25 முதல் 30 நாட்கள்.
இந்த30 நாட்களும் தங்களது பங்களிப்பு உழைப்பு பொறுத்தே வெற்றி அமையும்.
மீதமுள்ள 30 நாட்களில் 2 திருப்புதலும் சில சுய தேர்வுகளும் நமக்கு நாமே செய்து கடின பகுதியை மீள்பார்வை செய்யலாம்
தமிழில் இலக்கண, செய்யுள் பகுதிகள்
கணிதம் நடைமுறை கணக்குகள்
அறிவியல் உயிரியியல் பகுதிகள்
சஅறிவியல் வரலாற்று பகுதிகள் கடினமானவை. இவற்றில் கூடுதல் பயிற்சி தேவை.

புத்தக வாசிப்பே சால சிறந்தது. சுய குறிப்புகளும் திருப்புதலில் உதவும். கூடுமான வரை மொபைல், கணினி வழி படிப்பதை தவிர்க்கவும். அவை உடல் சோர்வை உண்டாக்கும்.
மேலும் படிக்கும் போது மொபைல் பயன்பாட்டை குறைக்கவும். நேரத்தை அது உண்டுவிடும். வேண்டுமெனில் காலை மாலை அரை மணி நேரம் இணைய பகிர்வுகளை காணலாம்.
முக்கியமாக ஒரு பாடம் பாதியில் விட்டு விட்டு அடுத்த பாடம் செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக பாடங்களை தொடர்பு படுத்தி படியுங்கள்.

தேர்விற்கான கால இடைவெளி குறைவு . எனவே மற்ற அலுவல்களை தவிர்த்து முழு நேர பயிற்சியில் ஈடுபடுங்கள்.
கோச்சிங் செல்ல வேண்டுமா?
அதுஅவரவர் தனிப்பட்ட திறன் சார்ந்தது.
கோச்சிங் செல்வது அவசியமில்லை. எனினும் மற்றவரை காணும் போது தன்முனைப்பும் உத்வேகமும் உண்டாகும்.
எதிர் நிற்பது இறுதி வாய்ப்பு என நினைத்து முயலுங்கள் ....
முயலும் எந்த ஆமையும் இங்கு தோற்பதில்லை

வாழ்த்துக்களுடன் - பிரதீப் பட்டதாரி ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.