யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/9/17

FLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது

Image may contain: 10 people, people smiling, people standing and indoor7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து இறுதி அறிக்கை- நிதித்துறை செயலாளர் சண்முகம்
முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினார்.
Image may contain: 1 person, text

FLASH NEWS:- CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தம் தொடங்கியது!!


JACTO GEO CASE -COURT ORDER COPIES - 7th Sep,12th Sep ,15th Sep and 21st Sep

மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

Image may contain: 1 person, textமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில்
புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்
*ஆதார், ஓட்டுநர் உரிமத்தை இணைத்து கல்வி நிலையங்களில் விண்ணப்பித்தால் நகல் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

*எளிமையான முறையில் நகல் சான்றிதழ் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது: அமைச்சர்

JACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்க கூடாது மதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்!





குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சேர்க்கை இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் 10.10.2017 நீட்டிக்கப்பட்டுள்ளது.



தொடக்கக்கல்வி - B.Ed Teaching Practice - அருகாமையில் உள்ள பள்ளியிலும் ஊதிய இழப்பின்றி ஒரு பாடவேளை கற்றல் பயிற்சி மேற்கொள்ளலாம் - இயக்குநர் தெளிவுரை




பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தகவல்

தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும்
நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட தொடக்க கல்வித்துறை சார்பில் 1 - 8 வகுப்புகளை சேர்ந்த 1,28,436 மாணவ, மாணவிகளுக்கு 2,71,697 புத்தகங்கள், 5,49,504 நோட்டுக்கள் வழங்கப்படும் பணிகளை கார்மேகம் ஆய்வு செய்தார். தொடக்க கல்வி அலுவலர் தியாகராஜன் உடன் இருந்தார்.


கார்மேகம் கூறுகையில், "மாநிலம் முழுவதும் செப்., 27க்குள் நோடல் மையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். வினியோக பணியில் தாமதமோ, புகார்களோ எழாமல் தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்," என்றார்

சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக குறைப்பு: பாரத ஸ்டேட் வங்கி

பாரதஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச
தொகை 5000 ரூபாயில் இருந்து  ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள், 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் ஓய்வூதியதார்களுக்கும் குறைந்த பட்ச தொகை வைத்திருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காமராஜரின் நண்பர் தொடங்கிய பள்ளிக்கு நிலம் விற்றது தொடர்பான வழக்கு : 6 வாரங்களுக்குள் விசாரிக்க உத்தரவு !!

முன்னாள் முதல்வர் காமராஜரின் நண்பர் தொடங்கிய பள்ளிக்கு சொந்தமான சொத்துகளை சட்டவிரோதமாக நிலம் விற்றது தொடர்பான புகாரை 6 வாரங்களுக்குள் விசாரிக்க பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காமராஜரின் விருப்பப்படி அவரது
 நண்பர் சங்கு கணேசன் என்பவர் நெல்லை வடக்கன்குளத்தில் பள்ளி ஆரம்பித்தார்.


பள்ளிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வாகி அருள்ராஜன் சட்டவிரோதமாக விற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி சங்கு கணேசனின் பேரன் நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைப்பு !!!

2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
குழுவில் மூத்த மத்திய அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐஐடி பேராசிரியர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது....

எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுக்கு தமிழக டி.ஜி.பி.உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்குமாறு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்குமாறு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

இன்றும், நாளையும் நகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமாண்டோ உள்ளிட்ட அனைத்து சிறப்பு காவல் படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அசாதாரண சூழ்நிலைகளில் பிறப்பிக்கப்படும் இதுபோன்ற உத்தரவு தற்போது திடீரென வெளியாகியுள்ளதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடுப்பில் சென்றுள்ள காவலர்கள் உடனடியாக முகாம்களுக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

CPS COMMUNICATION ADDRESS

01.04.2003 முதல CPS திட்டத்தில் பணியாற்றுபவர் மற்றும் ஓய்வு பெற்றோர் / மரணம் அடைந்தோர் பற்றிய விபரங்களை தெரிவிக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை! !

இரண்டுக்கு மேல் குழந்தைகள்: நீதிபதி பதவி பறிப்பு!!!

மத்தியப் பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றதால் 
இரண்டு நீதிபதிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் சட்டப் பிரிவு 196இல் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், 26 ஜனவரி 2001ஆம் ஆண்டுக்குப் பின் அரசு அதிகாரிகள், நீதித் துறையில் பணியாற்றுவோர் ஆகியோர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, இச்சட்டத்தின் கீழ் 2 பயிற்சி நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார். மற்றொருவர் கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி. இத்தகவலை போபால் உயர் நீதிமன்றப் பதிவாளர் முகமது ஃபாஹிம் அன்வர் நேற்று (செப். 25) தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் சட்டத்தை மீறி 3ஆவது குழந்தை பெற்றதையடுத்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார். பதவியை இழந்த நீதிபதிகள் இருவரும் கடந்த ஆண்டுதான் கூடுதல் மாவட்ட நீதிபதிக்கான தேர்வு எழுதி நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.