யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/6/17

நீட் தேர்வு வழக்கு - சிபிஎஸ்இயை திணறடித்த உயர்நீதிமன்றத்தின் அதிரடி கேள்விகள்!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கபட்டதின் காரணம் என்ன எனவும், பிளஸ் டூ முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தப்படாதது ஏன்? எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக, மே 7ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. சிபிஎஸ்இ நடத்திய தேர்வுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இதுகுறித்து நீதிமன்றங்களில் வழக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன்படி நீட் மதிப்பெண்ணுடன்  2மதிப்பெண்ணை சேர்க்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கபட்டதின் காரணம் என்ன?
எனவும், பிளஸ் டூ முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தப்படாததற்கு காரணம் என்ன? எனவும் சிபிஎஸ்இ க்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது.
மேலும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி? கல்வித்தரம் இல்லாத நிலையில் நீட்தேர்வை அனைவரும் எதிர்கொள்வது எப்படி? எனவும் கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து நீட் மதிப்பெண்ணுடன்  2 மதிப்பெண்ணை சேர்க்க கோரிய வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தவதாக உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

ரஷியாவில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க.. சென்னையில் கல்வி கண்காட்சி இன்று(ஜூன் 10) மற்றும் நாளை(ஜூன் 11).!

தென்னிந்திய ரஷிய கூட்டமைப்பின் துணை தூதரகம் மற்றும் ரஷிய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான நிறுவனமான ஸ்டடி அப்ராட் ஆகியவை இணைந்து சென்னை ஆழ்வார்ப்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரஷிய கல்வி கண்காட்சி நடத்துகிறது.
இதில் மருத்துவம், என்ஜீனியரிங் மற்றும் ஏவியேஷன் கல்வியை கற்பிக்கும் முன்னணி ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த இலவச கண்காட்சி 10, 11ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ரஷியாவின் பல்வேறு மருத்துவ கல்வி நிலையங்கள் 500 மருத்துவ படிப்பிற்கான இடங்களை இந்திய மாணவர்களுக்கு 30 சதவீதம் வரை சலுகை கட்டணங்களில் வழங்க உள்ளன.இந்த கண்காட்சி குறித்து ரஷிய கலாசார மையத்தின் இயக்குனர் மைக்கேல் இயக்குனர் மைக்கேல் ஜே. கோர்படோவ் கூறுகையில் பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ்களை சமர்பிக்கும் மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை கடிதம் இக்கண்காட்சியிலேயே வழங்கப்படும். ரஷிய கல்வி நிறுவனங்களில் அதிக சலுகை கட்டணங்களில் அளிக்கப்படும் படிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த கண்காட்சியின் நோக்கம் என்றார்.
நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் இந்த கல்வி கண்காட்சி இந்திய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில வழிவகுக்கும் அரிய வாய்ப்பாக அமையும் என்று ஸ்டடி அப்ராட் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் திருத்திய சம்பளம்

நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து, 18 மாதங்கள் முடியும் நிலையில், டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம் முதல் கிடைக்கும்.நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 51 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டது. கடும் அதிருப்தி : 'கடந்த, 2016, ஜனவரி மாதத்தில் இருந்து இது வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம், 16 சதவீதம், இதர படிகள், 63 சதவீதம் என, மொத்தம், 23.55 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது.பென்ஷன், 23.6 சதவீதம் உயர்த்தப்பட்டது.அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டாலும், டி.ஏ., மற்றும் எச்.ஆர்.ஏ., எனப்படும் வீட்டு வாடகைப் படி ஆகியவை குறைந்தது. இது, ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.அதனால், படிகள் தொடர்பாக ஆய்வு செய்ய, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் லாவாசா தலைமையிலான ஒரு குழு அமைக்கப்|பட்டது. இந்தக் குழு தன் பரிந்துரையை, இந்த ஆண்டு, ஏப்ரல், 27ல் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் குறித்து, மத்திய கேபினட் செயலர் தலைமையிலான, அரசு செயலர்கள் அடங்கிய உயர் அதிகாரக் குழு ஆய்வு செய்து, தன் இறுதி பரிந்துரையை அளித்து உள்ளது.

49 லட்சம் ஊழியர்கள் : வரும் வாரத்தில், இது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, படிகள் உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வரும், ஜூலை மாதம் முதல், திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய புதிய சம்பளம், நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணா பல்கலை.யில் புதிய பாடத் திட்டம்: இந்தாண்டு நடைமுறைக்கு வருவதில் சிக்கல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக் குழுவே இன்னும் அமைக்கப்படாததால், பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய பாடத் திட்டம் இந்தக் கல்வியாண்டில் அமலுக்கு வருமா என கேள்வி எழுப்புகின்றனர் பேராசிரியர்கள்.
அரசு விதிகளின்படி தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் நிறுவனங்களின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு இது பொருந்தும்.
இந்த விதியின்படி, நடப்பு 2017-18 கல்வியாண்டுக்கு இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய வேண்டும்.பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 523 பொறியியல் கல்லூரிகளிலும் இந்தப் பாடத் திட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும்.
இதற்கென பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பாடத் திட்டக் குழு, புதிய பாடத் திட்டத்தை உருவாக்கும் பணியை ஏற்கெனவே நிறைவு செய்துவிட்டது.
இதில், தொழில் நிறுவனங்களின் இன்றைய தேவைக்கேற்ப பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தொழில் நிறுவனப் பயிற்சி உள்ளிட்டவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள விருப்பப் பாடத் தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.), 2017-18 கல்வியாண்டு முதல் 523 இணைப்புக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்ட இயக்குநர் கீதா கூறியிருந்தார்.
கல்விக் குழு அமைக்கப்பதில் தாமதம்: இந்தப் புதிய பாடத் திட்டத்தை, பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு (Academic Council) ஒப்புதல் பெற்ற பிறகுதான், நடைமுறைக்குக் கொண்டு வர முடியும்.
அதாவது, முதலில் கல்விக் குழுவில் அந்தப் புதிய பாடத் திட்டம் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். பின்னர், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு அதற்கு இறுதி ஒப்புதல் அளிக்கும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை கல்விக் குழுவே அமைக்கப்படவில்லை. ஆட்சிக் குழுவும் முழுமையாக அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
எனவே, புதிய கல்வித் திட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியாது என்பதால், 2017-18 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய பாடத் திட்டம் வருவது சந்தேகம்தான் என்றனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக கல்வித் திட்ட உயர் அதிகாரி கூறியது:
பல்கலைக்கழகத்துக்கு கல்விக் குழு அமைப்பதற்கான பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டன. விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, உடனடியாக புதிய கல்வித் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதனை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட முடியும் என்றார்.

அரசுப் பள்ளியில் படிக்கிறேன்னு சந்தோஷமா சொல்லு!" மகளுக்கு அப்பாவின் நம்பிக்கை!

தனியார் பள்ளியில் அட்மிஷன் கிடைக்கவில்லை, கட்டணம் அதிகமாக இருக்கிறது... எனப் பல காரணங்களால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் சூழல் பெற்றோர்களுக்கு ஏற்படுவதுண்டு. தனியார் பள்ளியில் சேரப்போகிறோம் எனும் ஆசையில் இருக்கும் பிள்ளைகள் அரசுப் பள்ளி என்றதும் சோர்ந்துவிடுவார்கள். அப்படித்தான் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் பூங்குழலியும் சுணக்கமானார். பூங்குழலியின் அப்பா மருதுபாண்டியனுக்கு இது தெரியவந்தது. உடனே அவர் தன் மகளுக்கு புதிய நம்பிக்கையும் கொடுத்தார். அது குறித்து அவரிடம் பேசினோம். (மேலே உள்ள படத்தில்: மருதுபாண்டியன் மற்றும் பூங்குழலி)
"நான் சொந்தமாக பிஸினஸ் பண்ணிட்டு இருக்கேன். நானும் என் மனைவியும் அரசுப் பள்ளியிலதான் படிச்சோம். நல்லாத்தான் இருக்கோம். எங்களோட மூத்த மகள் பூங்குழலி, தனியார் பள்ளியிலதான் படிச்சா. ஸ்கூலுக்குப் போகனும்னா காலையில ஏழு மணிக்கே பஸ் ஸ்டாப்ல ரெடியா இருக்கணும். அப்படின்னா எத்தனை மணிக்கு எழுந்திருச்சி, தயாராகணும்னு பார்த்துக்கோங்க... அதே போல சாயந்தரம் அவ வர்றதுக்கு ஐந்தரை, ஆறு மணியாயிடும். ரொம்ப டயர்டாத்தான் வருவா. அப்பறம் ஹோம் வொர்க்கும் நிறைய தந்திருப்பாங்க. அதையெல்லாம் முடிச்சிட்டு தூங்கத்தான் நேரம் இருக்கும்.
பூங்குழலி மேடையில நல்லா பேசுவா. நிறைய போட்டிகளில் கலந்துப்பா. நாள் முழுக்க பிஸியாகவே இருந்தா கலை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது இல்லையா... அவளுக்கு விருப்பமான விஷயங்களையும் செஞ்சாதானே ஸ்கூலேயும் சந்தோஷமா இருப்பா. அதனாலதான் எங்க ஊரு அரசுப் பள்ளியிலேயே சேர்த்துட்டேன். இந்தப் பள்ளி எங்க வீட்டுலேருந்து நடந்து போற தூரம்தான். அதனால் நிறைய நேரம் கிடைக்கும். அரசுப் பள்ளியில சேர்க்கப்போறதை முதலில் என் மனைவிகிட்ட சொல்லி புரிய வைச்சேன். பிறகு, பூங்குழலியிடம் சொன்னேன். அவ 'ஓகே'னு சொன்னப்பறம்தான் இந்தப் பள்ளியில சேர்த்தேன். எங்களோட இரண்டாவது பொண்ணு கயல்விழி இந்த வருஷம் தனியார் பள்ளியில அஞ்சாவது படிக்கிறா. அவளையும் அடுத்த வருஷம் பூங்குழலி படிக்கிற பள்ளியிலேயே சேர்க்கப்போறேன்.
முதல் நாள் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்த பூங்குழலியிடம் 'ஸ்கூல் எப்படி இருக்கு'னு கேட்டேன். 'நல்லா இருக்குப்பா, ஆனா டாய்லெட்தான் சுத்தமாக இல்லை. மத்தப்படி சூப்பரா இருக்கு'னு சொன்னாள். 'சரி, உனக்கு நிஜமாகவே இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கா'னு கேட்டேன். அவள் தயங்கிட்டே, 'பிடிச்சிருக்குப்பா, ஆனா, யாராவது எங்க படிக்கிறனு கேட்டா, ஃபேமஸான ஸ்கூலில் படிச்சிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேனு சொல்றதுக்கு கூச்சமாக இருக்குப்பா'னு சொன்னாள்.


அவளோட பிரச்னையைப் புரிஞ்சிகிட்டேன். 'நீ நினைக்கிறது தப்பில்ல, ஏன்னா, பிரைவேட் ஸ்கூலில் படிக்கிறதுதான் பெருமையான விஷயம்னு எல்லார் மனசுலேயும் இருக்கு. அதுதான் தப்பு. இப்ப கவர்மென்ட் காலேஜ்ல டாக்டருக்கு படிக்கிறதுக்கு சீட் கிடைச்சா கூச்சப்படுவியா?னு கேட்டேன். அவள் இல்லைனு தலையாட்டினாள். 'சரி, கவர்மெண்ட் ஆபிஸில் வேலை கிடைச்சா அதை மத்தவங்க கிட்ட சொல்லும்போது கூச்சப்படுவியா'னு கேட்டேன். அதற்கு அவள், 'இல்லப்பா சந்தோஷமா சொல்லுவேனு' சொன்னாள். 'அதுபோலத்தான் குழலி இது. கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறதையும் சந்தோஷமா சொல்லு. யாராவது உங்கிட்ட கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறதைப் பத்தி நக்கலாக விசாரிச்சா, உங்களுக்கு கவர்மென்ட் வேலைக் கிடைச்சாலும் இப்படித்தான் நினைப்பீங்களானு தைரியமா கேளு'னு சொன்னேன். அவளும் சிரிச்சிகிட்டே 'சரி'னு சொன்னாள்.  
பிரைவேட் ஸ்கூலில் பீஸ் கட்டலைனா வெளியில நிற்க வெச்சிடுவாங்க. அரசுப் பள்ளியில அப்படி இல்ல, புத்தகம், யூனிஃபார்ம்னு எல்லாம் கிடைக்கும். வசதி இருக்கிறவங்க, இல்லாதவங்கனு எல்லார் வீட்டிலேருந்து பிள்ளைகள் வருவாங்க. நல்லா பழகுவாங்க. நீயும் அவங்களோடு சந்தோஷமாப் பழகு. டீச்சரைப் பார்த்து பயப்படாமல் பேசு. இன்னைக்கு பெரிய வேலையில இருக்கிற தொண்ணூறு சதவீதம் பேர் அரசுப் பள்ளியில படிச்சவங்கதாம். அதனால அரசுப் பள்ளியில படிக்கிறதுல எந்தக் கூச்சமும் படாதே. உங்கூட படிக்கிற புள்ளைங்க யாராவது, அப்படி நினைச்சா நான் சொன்னதையெல்லாம் சொல்லு'னு முடிச்சப்ப, பூங்குழலி தெளிவாகிட்டாள். " என்றார் மருது பாண்டியன்.
புதிதாக சேர்ந்த பள்ளிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த பூங்குழலியிடம் பேசினோம். "இந்த ஸ்கூல் எனக்குப் பிடிச்சிருக்கு அங்கிள். அந்த ஸ்கூலுக்கு போகும்போது காலையில ஆறு மணிக்கு எழுந்திருப்பேன். அவசரம் அவசரமாக கெளம்புவேன். இப்பவும் ஆறு மணிக்குத்தான் எழுந்திருக்கிறேன். மெதுவாக, ரிலாக்ஸா கெளம்பறேன். நானே நடந்து ஸ்கூலுக்குப் போயிடுறேனு சொன்னேன். அப்பாதான் ஒரு வாரம் மட்டும் நானே கொண்டு வந்து விடுறேனு சொன்னாங்க. ரெண்டே நாள்ல நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிட்டாங்க." என உற்சாகமாகச் சொல்கிறார்.
அரசுப் பள்ளி என்பது நமது அரசு நடத்தும் பள்ளி எனும் உணர்வு வந்தாலே இந்தக் கூச்சம் விலகிவிடும். தன் மகளுக்கு மிகச் சரியாக வழிகாட்டும் அப்பாவுக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!

1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.
2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
3🕹. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
4🕹. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள். 
5🕹. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல. 
6🕹. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல. 
7🕹. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யங்கள் .
8🕹. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
9🕹. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.
10🕹. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.
11🕹. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)
12🕹. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.
13🕹. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 
14🕹. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
15🕹. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.
16🕹. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள். 
17🕹. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
18🕹. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.
19🕹. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.
20🕹. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
21🕹. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.
22🕹. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.
23🕹. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.
24🕹. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல. 
25🕹. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.
26🕹. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள். 
27🕹. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
28🕹. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
29🕹. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
30🕹. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!

TNPSC Group 2A Exam General Tamil Notes:

ஒருமை, பன்மை பிழை நீக்குதல்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழில் பிழை திருத்தம் என்ற பகுதியில் சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் பிறமொழிச் சொற்களை நீக்குதல் கேட்கப்படுகின்றன.
எது பிழை? எது சரி ?
1. கிருட்டிணன் - கிருட்டினன்
கிருஷ்ணன் என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் கிருட்டினன் என்று எழுதுவதே மரபு. கர்ணன் என்பது தமிழில் கன்னன் என்றே வரும். க்ருஷ்ணவேணி என்பது கிருட்ணவேணி என்று எழுதப்படும்.
2. சுவற்றில் எழுதாதே - சுவரில் எழுதாதே
சுவர் + இல் = சுவரில் - சுவரில் எழுதாதே என்பதே சரியான தொடர். சுவற்றில் என்று எழுதினால் வரண்டு போன இடத்தில் என்பது பொருளாகும்.
3. ஒரு ஆடு - ஓர் ஆடு
ஒன்று என்பது ஒரு எனத் திரிந்துள்ளது. ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்று எழுதுவதே வழாநிலையாம்.

கல்வியியல் பல்கலை.யில் எம்.எட்., படிப்பு தொடக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இந்தஆண்டு முதல் புதிதாக எம்.எட்., படிப்பு தொடங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியி யல் பல்கலைக்கழகம் சென் னையை அடுத்த காரப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.2017-18-ம் கல்வி ஆண்டு முதல் முழுநேர எம்.எட்., படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிஇடிஇ) அனுமதி அளித் திருப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திர நாத் தாகூர் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பில் ஆண்டுக்கு 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் மாணவர் சேர்க்கை தொடர்பானஅறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சிகட்டாயம், யுஜிசி அதிரடி அறிவிப்பு:

TNAU Rank List for Counselling 2017-2018 | www.tnau.ac.in:

வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2017-18ம் கல்வியாண்டில் 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரி மூலம் 13 வேளாண் பட்டப்படிப்பு உள்ளது. வேளாண்ைம, தோட்டக்கலை, வனவியல், இளம் தொழில்நுட்ப படிப்புகளில் உயர் தொழில்நுட்பவியல், உயிர்தகவலியல் உள்பட 13 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் மொத்தம் 2,820 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர மாணவர்கள் மே 12ம் தேதி முதல் ஜூன் 4ம் ேததி வரை ஆன்லைனில் விண்ணப்பித்தனர். மாணவர்கள் 23,065 பேர், மாணவிகள் 29,985 பேர் மற்றும் திருநங்கை 4 பேர் என 53,052 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வேளாண் பட்டப்படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மதிப்பெண் தரவரிசை பட்டியலை இன்று (ஜூன் 10ம் தேதி) துணைவேந்தர் ராமசாமி பல்கலைக்கழக அரங்கில் வெளியிடுகிறார். சிறப்புபிரிவு கலந்தாய்வு ஜூன் 16ம் தேதியும், பொதுப்பிரிவு முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் நடக்கிறது. விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் இல்லை-உச்சநீதிமன்றம்.

ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசு உத்தரவுக்கு உச்சநீதி மன்றம்
இடைக்கால தடை விதித்துள்ளது.

WhatsApp New Updates – தவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம் – அசத்தலான புதிய வசதிகள்!!!!

வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக்கூட இன்றைய தலைமுறையினரால் கடத்திவிட முடியாது. அலுவலகப்பணி காரணமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடவும் வாட்ஸ்அப் தான் அதிகம்
பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 120 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.



வாட்ஸ்அப் – புதிய வசதிகள்

வாட்ஸ்அப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், டெஸ்ட்டர்களுக்கான பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தி சோதிப்பது வழக்கம். அதன்பின் தான் புதிய வசதிகள் அனைத்தும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும். சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Beta Version – 2.17.210), அசத்தலான சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படலாம்.

மெஸேஜை திரும்பப்பெறலாம் :

வாட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெஸேஜை அனுப்பிவிட்டு, அதை நீக்கவோ அல்லது திரும்பப்பெறவோ முடியாமல் சிரமப்பட்டிருப்போம். மெஸேஜை டெலீட் செய்தால் அனுப்பியவரின் சாட்டில் மட்டுமே அது நீக்கப்படும். ஆனால், ரிசீவர் மொபைலில் அந்த மெஸேஜ் அப்படியே இருக்கும். பீட்டா வெர்ஷனில் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது வாட்ஸ்அப். மெஸேஜை திரும்பப்பெற்றுக்கொள்ள ‘Unsend’ என்ற ஆப்ஷன் பீட்டா வெர்ஷனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரும்பப்பெற நினைக்கும் மெஸேஜை செலக்ட் செய்ததும், திரையின் மேலே மெனு ஒன்று தோன்றும். அதில் ‘Unsend’ ஆப்ஷனை கிளிக் செய்தால், உடனடியாக மெஸேஜ் திரும்பப்பெறப்படும். ஆனால், மெஸேஜ் அனுப்பி ஐந்து நிமிடங்களுக்குள் மட்டுமே அதைத் திரும்பப்பெற முடியும். அதற்கு மேல் நேரமாகியிருந்தால் மெஸேஜை திரும்பப்பெற முடியாது. ரிசீவர் மொபைலில் இருந்தும் அந்த மெஸேஜ் உடனடியாக நீக்கப்பட்டு, அன்சென்ட் செய்யப்பட்ட விவரம் மட்டும் தெரிவிக்கப்படும்.

லைவ்லொக்கேசன் :

வாட்ஸ்அப்பில் ஓர் இருப்பிடத்தின் மேப்பை எளிதாகப் பகிர்ந்துகொள்ளக்கூடிய லொக்கேசன் ஆப்ஷன் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த மேப்பில் குறிப்பிட்ட இடம் எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இதே போல, நடமாடும் ஒரு நபரின் அப்போதைய இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் ‘லைவ் லொக்கேசன்’ ஆப்ஷனையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நபர் தனது லைவ் லொக்கேசனை மற்றொரு நபருக்கு அனுப்பினால், அதன் மூலம் அந்நபர் பயணிக்கும் இருப்பிடங்களின் லொக்கேசனை அறிந்துகொள்ள முடியும். பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் லைவ் லொக்கேசனைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் :


வாழ்வின் அத்தனை இனிமையான தருணங்களையும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தான் தற்போதைய ட்ரெண்ட். புகைப்படம், வீடியோ, Gif போன்ற எந்த ஃபார்மட்டிலும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். 24 மணிநேரம் இந்த ஸ்டேட்டஸை மற்றவர்களால் பார்க்க முடியும். இந்த பீட்டா வெர்ஷனில் டெக்ஸ்ட் (Text) வடிவில் கலர் பேக்ரவுண்ட் உடன் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மெஸேஜில் Bold, Italic, Strike Through போன்ற எழுத்துருவின் வடிவங்களை மாற்றிக்கொள்வது போல, டெக்ஸ்ட் ஸ்டேட்டஸிலும் மாற்றிக்கொள்ளலாம்

EMIS - Student Application Form