யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/2/18

தமிழகத்தின் "ஸ்லெட்" தகுதி தேர்வில் லஞ்சம்

No automatic alt text available.

CM CELL REPLY-Govt Servants and Teachers who are under probation are eligible for 12 days casual leave and Restricted Holidays (3 days) during probation

க்குள் புதிய பாட புத்தகம் : செங்கோட்டையன் அறிவிப்பு

புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில்
முடியும்; அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.


இதுகுறித்து, தலைமை செயலகத்தில், அவர் கூறியதாவது:


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 318 பள்ளிகளுக்கு, இணையதளம் வழியே, 'வை - பை' வசதியை, தனியார் நிறுவனம், இலவசமாக செய்து கொடுத்துள்ளது. பூமிக்கு கீழே கேபிள் பதிக்கப்பட்டு, இவ்வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


இது, கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களை, மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிந்து விடும்; அந்த மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் முதல் வாரத்திற்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கும் மேலான, பாடத்திட்டம் உருவாக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


இந்தஆண்டு, ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பிளஸ்1 வகுப்பிற்கு பாடத்திட்டம் மாற்றப்படும். அதற்கடுத்த ஆண்டு, அனைத்து வகுப்புகளுக்கும், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்.மாணவர்களுக்கான உதவி மையத்திற்கான பிரத்யேக எண் துவக்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு வாரம் எவ்வாறு செயல்படுகிறது என, பார்த்த பின், இந்த சேவையை, முதல்வர் துவக்கி வைப்பார்.


திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்று, மாணவர்களுக்கு, 'ரோபோ' பயிற்சி அளிக்கிறது; அறிவியல் ஆய்வகத்தில், பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அதே போல, 96 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம், எதிர்காலத்தில், 500 பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.a

Pedagogy pilot schools book details.....

Pedagogy pilot schools book details*
👍 *முதல் வகுப்பு*
🌹தமிழ் பாடப்புத்தகம்
🌹பயிற்சிப் புத்தகம்
🌹English book with work book
🌹English book
🌹English work book.
*தமிழ் வழி*
🌹கணக்கு புத்தகம்
🌹கணக்கு பயிற்சிப் புத்தகம்
🌹சூழ்நிலையியல் புத்தகம்
🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்.
👍 *English medium*
🌹Mathematics book
🌹Work book
🌹EVS book
🌹EVS work book
🌹முதல் வகுப்பு ஆசிரியர் கையேடு.
🌹English medium
Teacher hand book

*இரண்டாம்வகுப்பு* 🌹தமிழ் பாடப்புத்தகம்
🌹பயிற்சிப் புத்தகம்
🌹English book with work book
🌹Enlish book
🌹English work book

*தமிழ் வழி*
🌹கணக்கு புத்தகம்
🌹பயிற்சிப் புத்தகம்
🌹சூழ்நிலையியல் புத்தகம்
🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்

*English medium*
🌹Mathematics book
🌹Mathematics work book
🌹EVS book
🌹EVS work book
இரண்டாம்வகுப்பு ஆசிரியர் கையேடு
English medium Teacher hand book

🌹 மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கையேடு
🌹English medium Teacher hand book

👍 *1&2 வகுப்புக்குரியது*

🙏 *New pedagogy pilot school இல் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பின் கீழ்காணும் முறையில் வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெறுதல் வேண்டும்*

🌷 *9.30 to 11. 00 - 90 நிமிடங்கள் முதல் பாடவேளை*

🌷 *9.30 to 10.00 - 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள்*

🌷 *10.00 to 10.30 - 30 நிமிடங்கள் இணைச்செயல் பாடுகள்*

🌷 *10.30 to 11.00 - 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள்*

🌷 *இது போன்றே முதல் 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள் அடுத்த 30 நிமிடங்கள் குழுச் செயல்பாடுகள், அடுத்த 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள் என வகுப்பறை யில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று பாடவேளை யும் நடைபெற வேண்டும்*

🌷 *11.10 to 12.40*
*இரண்டாம் பாடவேளை*

🌷 *2.00 to 3.30 மூன்றாம் பாடவேளை*

🙏 *ஒரு நாளைக்கு 3 பாடவேளை என 5 நாட்களுக்கு 15 பாடவேளை*

🌷 *தமிழ் 4 ஆங்கிலம் 4 கணக்கு 4 சூழ்நிலையியல் 3*
a

இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவற்றுக்கு சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது -நிதித்துறையின் விளக்கக்கடிதம்



அரசு பள்ளி கட்ட ரூ.4 கோடி நிலம் தானம்:முன்னாள் தலைமை ஆசிரியை தாராளம்

பவானி, அரசுப்பள்ளி கட்டடம் கட்ட நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாக தந்த முன்னாள் பெண் தலைமை ஆசிரியைக்கு
பாராட்டு விழா நடந்தது.ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.தற்போது ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை, 486 மாணவியர் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 2 வகுப்பு துவங்கவுள்ளது.

ஆனால்,போதிய இடவசதியில்லை.இந்நிலையில் சித்தோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பொன்மணிதேவி, 80, தன் சொந்த நிலம்ஒரு ஏக்கரை தானமாக வழங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு நான்கு கோடி ரூபாய்.இவர், 1964 முதல் ஆசிரியையாக பணிபுரிந்தார்.கோபி, மொடச்சூர் பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் 1996ல் ஓய்வு பெற்றார்.இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். ஒரே மகன் மயூரா கார்த்திகேயன் டாக்டருக்கு படித்தார். அவரும் எதிர்பாராதவிதமாக இறந்தார்.இதனால் தன்சகோதரி மாரத்தாள்அவரின் மகன்கள்அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.கடந்த 2006ல் பிற்
படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியருக்கு விடுதி கட்டடம் கட்ட 25 சென்ட் நிலம் வழங்கினார்.தற்போது சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகஅளித்துள்ளார்.இவருக்கு நேற்று பாராட்டு விழாநடந்தது. விழாவில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிலத்தை தானம் செய்வதற்கான பத்திரத்தை பொன்மணி தேவி வழங்கினார்.

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள்உருவாக்கப்படும் என்று பள்ளி
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளதாக நாமக்கல்லில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

DEE - தொடக்கக் கல்வித் துறையில் 31.08.2017-ன் படி நிரப்பத் தகுந்த ஆசிரியர் பணியிடங்கள் விவரம் | ஒன்றியம் வாரியாக...