யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/18

School Morning Prayer Activities - 12.12.2018


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:


திருக்குறள் : 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

உரை:

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

பழமொழி:

Every ass loves his bray

காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு

பொன்மொழி:

நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.

- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


1) பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
இங்கிலாந்து

2) டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
அமெரிக்கா, மலேசியா

நீதிக்கதை :


நான் கத்தவே இல்லை

கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.

எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்! என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.

“”எப்போது?” என்று கேட்டார் விமானி.

“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!” என்றான் கஞ்சன்.


மயங்கி விழுந்தார் விமானி.


இன்றைய செய்தி துளிகள் : 


1.புகைப்படம் எடுத்து, மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் திட்டத்தை சென்னையில், அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

2.'கஜா' புயலால், 303 அரசு பள்ளிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

3.ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்

4.மத்திய, தெற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு செல்ல வேண்டாம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை

5.முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. 

அரையாண்டுத் தேர்வு (1-5 வகுப்புகளுக்கு)



தொடக்க/ நடுநிலை பள்ளிகள் - இரண்டாம் பருவத்தேர்வு 

>17.12.2018- தமிழ்
>18.12.2018- ஆங்கிலம்
>19.12.2018- கணக்கு
>20.12.2018- அறிவியல்
>21.12.2018- சமூகவியல்

>22.12.2018 
சனி பள்ளி வேலை நாள்.

👉🏼23.12.2018 முதல்
01.01.2019 வரை அரையாண்டு விடுமுறை..

👉🏼02.01.2019
பள்ளி மீண்டும் திறப்பு

12th Standard - Half Yearly Exam 2018 Collection




📍  12th Computer Science - Half Yearly Exam 2018 - Time Table
https://goo.gl/V3sA7B


📍 12th Computer Science - Half Yearly Exam 2018 -  Syllabus
https://goo.gl/nMGCFR


📍 12th Computer Science - Half Yearly Exam 2018 - Original Question Papers & Answer Keys Download
https://goo.gl/i4DxQb


📍 12th Computer Science - Half Yearly Exam - Previous 7 Year Question Collection
https://goo.gl/qe7x7y


📍 12th Computer Science - Public Exam - Previous 10 Year Questions Collection
https://goo.gl/fm9Esh


📍 12th Computer Science - Official Model Questions
https://goo.gl/yues4d


📍 12th Computer Science - Padasalai's Special - Centum Questions
https://goo.gl/4g5nLv


📍 12th Computer Science - Half Yearly Exam 2018 - Model Questions
https://goo.gl/dDTnc3


📍 12th Computer Science - Unit Wise - Creative Questions Collection
https://goo.gl/SQo9Q1


📍 12th Computer Science - Free Online Tests ( English Medium)
https://goo.gl/DQPWsx


📍 12th Computer Science - Free Online Tests (Tamil Medium)
https://goo.gl/1cSLb2


📍 12th Computer Science - Study Materials (Tamil Medium & English Medium)
https://goo.gl/gfdBF9


📳 Android Apps for 12th Study Materials
https://goo.gl/CMUY2r


📳 Android App for 12th Public Questions
https://goo.gl/qXNyPm

10th English - Half Yearly Exam 2018 - Time Table

10th English - Half Yearly Exam 2018 - Time Table
https://goo.gl/VAq1FB


🔰 10th English - Half Yearly Exam 2018 - Syllabus
https://goo.gl/N7GZMW


🔰 10th English - Half Yearly Exam 2018 - Original Questions & Answer Keys Download
https://goo.gl/NwygfC


🔰 10th English  - Half Yearly Exam 2018 - Model Questions
https://goo.gl/Xb7uFu


🔰 10th English - Centum Coaching Team Questions
https://goo.gl/vXtDGM


🔰 10th English - Creative Questions
https://goo.gl/4fgXAe


🔰 10th English - Study Materials
https://goo.gl/ywQuhL


🔰 10th English - One Marks Free Online Tests (Tamil Medium)
https://goo.gl/fYx1Ta


🔰 10th English -  One Marks Free Online Tests (English Medium)
https://goo.gl/WPofQh


📳 10th Quiz - Android App
https://goo.gl/RtWJmC


📳 10th English - Study Materials - Android App
https://goo.gl/tQJ3mE


📳 10th English - Public Exams Question Papers - Android App
https://goo.gl/PpFW8t

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட அரசுக்குத் தயக்கம் ஏன்?இன்றைய தமிழ் இந்துவில்...

அரசுப்பள்ளி மேன்மை அடைய அனைத்து வேலையில்லா கணினி ஆசிரியர்களும் சேவை மனப்பாண்மையுடன் பணியாற்றுங்கள்! !!!

770 அரசாணையை கணினி  ஆசிரியர்களுக்கும் , பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மேல்நிலை இரண்டு ஆண்டு அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசாணையை

உருவாக்கி தந்த மாண்புமிகு தமிழக அரசுக்கும் ,தமிழக கல்வி அமைச்சர் மற்றும் மதிப்புமிகு  கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சாரந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


மூன்று மாதம் என்ற குறுகிய காலம் என்று எண்ணாமல் முற்றிலும்    சேவை நோக்கத் தோடு அரசுப்பள்ளியில்  பணிபுரிய வேண்டகிறேன். அரசுப்பள்ளி நமது பள்ளி ஊதியத்தை எதிர் நோக்க வேண்டாம்    அரசுப்பள்ளியில் பயிலும் நமது குழுந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர்களும் பணியற்ற வேண்டுகிறேன்.குறைந்த மாதம் என்றாலும் நல்ல பயிற்சியும் தங்கள் இடைவிடாத முயற்சியினாலும் அரசுப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய வேலையில்லா பட்டதாரிகள் உதவிட வேண்டமாய் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பணியிடங்களை வருகின்ற கல்வியாண்டிலே நிரந்தர பணியிடங்களாக மாற்றி கணினி ஆசிரியர்களுக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித்தர மாண்புமிகு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு ..
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, 'டிஜிட்டல்' சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, 'டிஜிட்டல்' சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., 
 அறிவித்துள்ளது.மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில்செயல்படும் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிய, மத்தியஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.



நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு, நேற்று முன்தினம், நாடு முழுவதும்நடந்தது.தேர்வுக்காக, 92 நகரங்களில், 3,000க்கும் மேற்பட்ட மையங்கள்அமைக்கப்பட்டன. தேர்வுக்கு, 10 லட்சம் பெண்கள் உட்பட, 17 லட்சம் பேர்அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கான விடை திருத்தம் முடிந்து, இரண்டுமாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, டிஜிட்டல் சான்றிதழ் மட்டுமேவழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது.


சி.பி.எஸ்.இ., செயலரும், ஆசிரியர் தகுதி தேர்வின் இயக்குனருமான, அனுராக் திரிபாதி, இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்விபரம்:மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மத்திய அரசின், 'டிஜி லாக்கர்' வழியாக, டிஜிட்டல் சான்றிதழ்வழங்கப்படும். இந்த சான்றிதழில், கியூ.ஆர்., கோடு இருக்கும். இதைபயன்படுத்தி, நாட்டிலுள்ள எந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புநிறுவனமும், சான்றிதழின் உண்மை தன்மையை அறிந்துகொள்ளலாம்; தேர்வரின் விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.



தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகள், இணையதளத்திலும், 'மொபைல் ஆப்' வழியாகவும், சான்றிதழ்களை பதிவிறக்கம்செய்யலாம். இந்த முறையால், போலி சான்றிதழ்கள் தடுக்கப்படும். சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள, நீண்டகாலம் தேவைப்படாது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், காகித பயன்பாடும் தவிர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நீதிக்கதை---சிந்தனை கதைகள்



துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்..

பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்..

இளைஞன் ஒருவன் வந்தான் *_சாமி எனக்கு ஒரு சந்தேகம்.._* *உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்..*
*_ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..??_* என்று கேட்டான்..

துறவி  அவனிடம் சொன்னார்..
*தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..*

_*ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை..*_
*_நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்.._*

*தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு* _என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.._

_மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.._

_அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.._

_இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.._

_அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி.._
*தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..??* என்று கேட்டார்..

_அதற்கு அவன்,_
*என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?*

_*திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா..?*_

_இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்_ *தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில்..*

*நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்..*

இளைஞன் கேட்டான்.. *சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன..?*

_அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார்,_

_பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்.._
*இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?*

*ஆகாது சாமி..* என்றான்..

துறவி  கூறினார்.. *உன் கேள்விக்கு இதான் பதில்..*

*நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்..*

*இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்..* _*என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,*_  *அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும்,*

 *_அன்று வரை மனிதனை நன்னெறி படுத்த வேண்டும் என்றார்,”

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் :

இந்தியாவில் முதன்முறையாக பேஸ் ரீடிங் எனப்படும் மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு முறையை சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்த 4 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்வானதற்கு அவசர கோலத்தில் பயிற்சி அளித்ததே காரணம் என்று கூறியுள்ளார். வரும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 500 மாணவர்களாவது தேர்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தற்போது 413 நீட் தேர்வு பயிற்சி மையங்களில் 26,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என அவர் தகவல் அளித்துள்ளார். அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் 4 வகையான வண்ண சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகிறது என்றும், அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறினார்.
இதனை தொடர்ந்து பாலிதீன் பொருட்களை பயன்படுத்த கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் அரையாண்டு வினாத்தாள் எதுவும் திருப்படவில்லை என்று கூறிய அவர், கதவை உடைத்த மாணவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் அளித்துள்ளார். 33 அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவர்கள்கூட இல்லை, 1324 அரசுப்பள்ளிகளில் ஒன்பதுக்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர் என்றும், பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வழக்குகளை முடித்து கொடுத்தால் உடனடியாக பணியிடங்களை நிரப்ப தயாராக இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

வலுவாகுது, 'பெய்ட்டி' புயல் சின்னம் சென்னை சுற்றி மழை கொட்டும் :

சென்னை : 'வங்க கடலில் உருவாகியுள்ள, 'பெய்ட்டி' புயல் சின்னம், ஆந்திரா மற்றும் தமிழக கடற்பகுதி இடையே கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வலுவாகுது,பெய்ட்டி,புயல் சின்னம்,சென்னை,மழை,கொட்டும்
புயல் சின்னத்தால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, மிக கனமழை பெய்யும் என, தெரிகிறது.தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை, நவ., 1ல் துவங்கியது. முதலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு, சென்னை முதல், தென் மாவட்டங்கள் வரை, பரவலாக மழையை கொடுத்தது.

பின், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 'கஜா' புயலாக மாறி, டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்தது. இதை தொடர்ந்து, ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, வட மாவட்டங்களில் மழையை
கொட்டியது. டிச.,6 முதல், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது.
இந்நிலையில், இந்திய பெருங்கடலை யொட்டி, வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இன்று நள்ளிரவுக்கு பின், புயல் சின்னமான, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மண்டலம், நாளை மறுநாள் புயலாக மாறி, வட மேற்கு திசையில் நகரும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு, தாய்லாந்து வழங்கியுள்ள, பெய்ட்டி என்ற பெயர், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த புயல், அந்தமானுக்கு மேற்கு பகுதி வழியே சுழன்று, தமிழக கடற்பகுதியை நெருங்க உள்ளது.


கொட்டும் மழை :
இதனால், தமிழகத்தின் பாம்பன் முதல், ஆந்திராவின் நெல்லுார் வரை, கன மழையை கொடுக்கும். குறிப்பாக, நாகை, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில், கனமழையை கொட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புயல் சின்னம் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
2 நாட்களுக்கு வறண்ட வானிலை:
வங்க கடலில் புயல் சின்னம் உருவாவதால், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்காது என, வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் கூறியதாவது: இந்திய பெருங்கடலை ஒட்டி, வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதுவரை, இன்னும் இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தில் குறிப்பிடும் படியாக மழை இருக்காது; வறண்ட வானிலை நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களை பொறுத்தவரை, வரும், 13ம் தேதி வரை, வங்க கடலின் தெற்கு, தென் மேற்கு, தென் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அந்த பகுதிகளில் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். கடல் அலைகள் கொந்தளிப்பாகவும், மோசமான வானிலையும் இருக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

பென்ஷன்' திட்டத்தில் மத்திய அரசு சலுகை :

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களின் நலனை மனதில் வைத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த திட்டத்துக்கு, அரசு தரப்பில் இருந்தும், ஊழியர்கள் தரப்பில் இருந்தும், 10 சதவீதம் பங்களிப்பு அளிக்கப்பட்டு வந்தது.இதில், அரசு தரப்பு பங்களிப்பை, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு பெற்ற பின் எடுக்கப்படும்,60 சதவீத தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.


இனி, முழுவதுமாக வரி விலக்கு அளிக்கப்படும்.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும், அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும், இந்த வரி விலக்கு, பொருந்தும். இதனால், 2019 - 20 நிதி ஆண்டில், அரசுக்கு, 2,840 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளியில் தண்ணீரின் தரம் இணையதளத்தில் பதிவேற்றம் :

மத்திய அரசின் இணையதளத்தில், 15 அரசுப்பள்ளிகள், தண்ணீரின் தர அளவீட்டை, பதிவேற்றம் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் நினைவாக, மத்திய அரசு, தண்ணீர் பரிசோதிக்கும் புதிய திட்டத்தை அறிவித்தது.பள்ளி அறிவியல் புத்தகத்தில், துாய தண்ணீரை அடையாளம்காண்பதற்கான, சோதனை முறைகள் உள்ளன.

இதை செயல்வழியில் மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை,மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில், பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.கோவையில், ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில், இத்திட்டத்துக்கான செயல்விளக்கம் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. தண்ணீரின் தரத்தை மாணவர்களை கொண்டு பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நுரை மிதப்பு முறை, தண்ணீரின் பி.எச்., தன்மை, உப்பு தன்மை ஆகிய மூன்று முறைகளில், சோதித்து கிடைக்கும் முடிவுகள், பதிவேற்றப்பட்டுள்ளன.இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ள, ஆலோசனை நடப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருகை பதிவுக்கு புதிய தொழில்நுட்பம் :

செயற்கை நுண்ணறிவு என்னும் ஆன்ட்ராய்டு ஆப் மூலம் மாணவர்கள் வருகையை பதிவு செய்யும் புதிய தொழில் நுட்பத்தை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்வு சென்னை, அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. புதிய தொழில் நுட்ப வருகைப் பதிவை தொடங்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: மாணவ மாணவியரின் முகத்தை அடையாளமாக வைத்து வருகைப் பதிவு செய்ய செல்போனில் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் ஒருமுறை மாணவர்களின் போட்டோவை தனியாக படம் பிடித்து, அவர்களின் விவரங்கள் சேமித்து வைக்கப்படும். அதேபோல ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவ மாணவியரின் போட்டோக்கள் அதில் சேமிக்கப்படும். அதற்கு பிறகு, தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் மாணவ மாணவியரை குழுவாக படம் பிடிப்பார்கள். வகுப்புக்கு வந்துள்ள மாணவர்கள், வராதவர்கள் குறித்த விவரங்களை செல்போனில் உள்ள செயலி காட்டிக் கொடுத்துவிடும்.

நெல்லை, குமரியை சேர்ந்த 80 இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் டிச.24ல் தொடக்கம் நாகர்கோவிலில் 15 நாள் நடக்கிறது :

நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் வரும் டிசம்பர் 24 முதல் 15 பதினைந்து நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் துறையில் மேம்பாடு அளிப்பதற்காக இளம் மாணவர் அறிவியல் திட்ட விஞ்ஞானிகள் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மாணவர்களுக்காக வருகின்ற டிசம்பர் 24ம் தேதி தொடங்கி 15 நாட்கள் முகாம் தொடர்ந்து நடைபெற உள்ளது. பயிற்சிக்கு பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் கலந்து கொள்ள தகுதி உடையவர் ஆவர். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழியல் போன்றவற்றில் தரமிக்க வல்லுநர்களால் பயிற்சிகள் நடத்தப்படும். மேலும் மாணவ, மாணவியர் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ராஜாக்கமங்கலம் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திற்கும் அழைத்துச் செல்லப்படுவர்.

பயிற்சி நிறைவு நாட்களில் மாணவ மாணவியர் சுயமாக தயாரித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாதிரிகளைக் கொண்டு அறிவியல் கண்காட்சி நடைபெறும். பயிற்சியில் கலந்துக்கொள்ள விரும்பும் மாணவ மாணவியர் இந்துக் கல்லூரி அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்று இம்மாதம் 19ம் தேதிக்கு முன்னர் பூர்த்தி செய்து அளித்தல் வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் பட்டியல் 20ம் தேதி வெளியிடப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த 80 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். எனவே, முதலில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். கலந்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சான்றிதழ் வழங்க உள்ளது.

TNPSC DEO Exam 2018 - தேர்வு அறிவிப்பு

பள்ளி கல்வியில், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான போட்டி தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்விலும்; 50 சதவீதம், நேரடி போட்டி தேர்வு வழியாகவும் நியமிக்கப்படுகின்றனர்.இதன்படி, தற்போது காலியாக உள்ள, 18 டி.இ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, மார்ச், 2ல் முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. இந்த தேர்வின் வழியாக, நேரடியாக, 14 பேரும், அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், நான்கு பேரும் தேர்வு செய்யப்படுவர் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

JACTTO-GEO வழக்கு வதந்திகள்! உண்மை நிலவரம் உரைக்கும் - திண்டுக்கல்.எங்கெல்ஸ் :

ஜாக்டோ-ஜியோ வழக்கின் நேற்றைய (10.12.2018) விசாரணையின் நடவடிக்கைகளை 21 மாத நிலுவையை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர்களை பிளவுக்குட்படுத்தி மதிமயக்கும் செயலில் ஈடுபட்டு வரும் சில நபர்கள் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
🔥
🛡 இவர்களின் நோக்கம், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியமல்ல. மாறாக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான பிளவுகள் மட்டுமே.


🛡 இறுதியாக நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பங்கெடுக்க விடாது தடுத்தோர், வேலைநிறுத்தத்தில் தங்களின் ஒற்றைக் கோரிக்கைக்காக மட்டும் போராடுவதாக கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அளிக்க பரப்புரை செய்தோர் இன்று ஜாக்டோ-ஜியோவை விமர்சிப்பது வேடிக்கையே.
🔥

🛡 இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருப்பின் ஊதியம் & ஓய்வூதியக் கோரிக்கையையும் வலியுறுத்தியிருப்பர். அப்படி கூறியிருப்பின் பிளவுபடுத்த இயலாது ஓய்வூதியக் கோரிக்கையால் மற்றவர்களுடன் பொதுமைப்படுத்தப்பட்டுவிடுவோம் என்பதாலேயே ஓய்வுக்கால வாழ்வாதாரக் கோரிக்கைக்காக குரல் எழுப்பாது மீறி எழுப்பும் குரல்களையும் ஒழித்து வருகின்றனர்.
🔥
🛡 இவர்களின் இத்தகைய போக்கு ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடும் என்று கருதியும், இடைநிலை ஆசிரியர்களுக்குள் பரப்பப்பட்டுள்ள மிகத்தவறான பதிவுகளின் *உண்மை நிலையை உரைக்கும் நோக்கிலும், இடைநிலை ஆசிரியரும் CPS நீக்கம் குறித்த விழிப்புணர்வுப் பணிகளில் தொடர்ந்து களத்தில் நிற்பவருமான தோழர்.பிரடெரிக் எங்கல்ஸ்* சமூக வலைதளத்தில் பின்வரும் விளக்கத்தை அளித்துள்ளார்.
🔥
🔮 *"நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.*
🔥

🔮 *நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைக் காணாமல் தனது கற்பனை திறத்தால் நினைத்ததைத் தயவுசெய்து பொதுக்கருத்தாக பகிர வேண்டாம்.*
🔥
🔮 *21 மாத நிலுவை தொகையை மட்டும் ஜாக்டோ ஜியோ வலியுறுத்தவில்லை.*
🔥
🔮 *சித்திக் குழுவின் காலத்தை காலநீட்டிப்பு செய்யவும் ஜாக்டோ ஜியோ கேட்கவில்லை.*
🔥
🔮 *20.12.2018 அடுத்த கட்ட விசாரணை என்றும் அதற்குள் குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்ட போது அதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்பிறகே வழக்கு விசாரணை 07.01.2019 மாற்றம் செய்யப்பட்டது.*
🔥
🔮 *ஊதிய குறைதீர் குழுவினர் தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தான் அதில் யாருக்கு என்ன செய்யப்பட்டது என்பது தெரியவரும்.*
🔥
🔮 *சித்திக் குழு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய குறையை மட்டும் தீர்க்க அமைக்கப்படவில்லை.*
🔥
🔮 *CPS குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும்முன் தமிழக முதலமைச்சர் சேலம் கூட்டத்தில் பேசிய கருத்தும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.*

🔥
🔮 *CPS-ல் ஓய்வு பெற்ற, மரணம் அடைந்துள்ள 10,000 பேரின் நிலை குறித்தும் அரசிடம் கேட்கப்பட்டபோது, செட்டில்மென்ட் பற்றி மட்டும் குறிவிட்டு ஓய்வூதியம் குறித்த நமது வழக்கறிஞரின் கேள்விக்கு மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்ததை அங்கிருந்தோர் அறிவர்.*
🔥
🔮 *மேலும், நீதிபதிகள் தமது உத்தரவு வெளிவந்தால் கூடுதல் விபரங்களை அறியலாம்.*
🔥
🔮 *அதற்கு முன்பு தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.*
🔥
🔮 எனவே, *போர்க்களங்கள் மாறலாம் போர்கள் மாறாது."*
🔥
🛡 இதுகுறித்து, அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, *"சார், நேற்று நீதிமன்றத்தில் இது தான் நடந்தது. நானே நேரில் சென்றிருந்ததால் நடந்ததைக் கூறியுள்ளேன். இனி இதனை நம்புவதா அல்லது கட்டுக்கதைகளை நம்புவதா என்பதை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்."*
🔥
🛡 மேலும், *"CPS வல்லுநர்குழு அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் நாளை நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்தாக வேண்டும் என்பதையும், தமிழத்தில் உள்ள 149 துறைகளுக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட One Man Commission report-ஐ 10 நாள் நீதிமன்ற விடுமுறை கழிந்து வரும் ஜனவரி 7-ற்குள் சமர்ப்பித்தாக வேண்டும் என்பதையும், 21 மாத ஊதிய நிலுவை குறித்த அறிவிப்பையும் ஜாக்டோ-ஜியோ-வின் வேலைநிறுத்த அறிவிப்பிற்குக் கிடைத்த முதல்கட்ட Positive Approach-ஆகவே பார்க்கிறேன்."*
🔥
🛡 *"அறிக்கைகளில் நமது கோரிக்கைகள் தீர்க்கப்படாது போனால் உறுதியான போராட்ட அறிவிப்பை ஜாக்டோ-ஜியோ அறிவிக்கும் எனவும் நம்புகிறேன்."* என்று கூறினார்.

மூன்றாம் பருவ பாடத்திட்ட புத்தகங்களை முறையாக அனைத்து வகுப்புகளுக்கும், உரிய நேரத்தில் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை:

'மாநில கல்வித்திட்டத்தின் கீழ், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய சிலபஸ் அடிப்படையில் புத்தகம் வழங்கப்படுகிறது

மூன்றாம் பருவத்திற்கு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. டிஜிட்டல் முறையில் இதற்கான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஜன.,2ம் தேதி பள்ளி திறக்கும் போது, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, புதிய புத்தகம் வழங்க வேண்டும். இதற்கான ஆயத்த பணிகளில், தமிழ்நாடு பாடநுால் கழகம் ஈடுபட்டு வருகிறது.


கோவை மாவட்டத்தில், ஐந்தாம் வகுப்புக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள், காலாண்டு விடுமுறைக்குப் பின், ஒரு மாதம் கழித்து வினியோகிக்கப்பட்டது. உரிய நேரத்தில் புத்தகம் வினியோகிக்காததால், ஆசிரியர்கள் சிலபஸ் முடிக்க இயலவில்லை.வரும் 17ம் தேதி, தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், தற்போது வரை, வகுப்புகள் எடுக்கப்படுவதால், தேர்வுக்கு தயாரிப்பு பணிகளில் ஈடுபட முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

மூன்றாம் பருவ பாடத்திட்டத்துக்கு, இதேபோன்ற சிக்கல் எழுந்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். முன்கூட்டியே பாடப்புத்தக கொள்முதலுக்கு, திட்டமிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.



தாமதம் கூடாது:

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில்,

''ஐந்தாம் வகுப்புக்கு தாமதமாக புத்தகம் வினியோகித்ததால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதம் நடத்த வேண்டிய பாடத்திட்டம், அவசர அவசரமாக முடிக்கப்பட்டுள்ளது மூன்றாம் பருவத்துக்கு, இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாமல், அனைத்து பள்ளிகளுக்கும், புத்தகம் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்

TET - முடித்தோரை அரசுப்பள்ளிகளில் தற்காலிகமாக நியமனம் : அமைச்சர் செங்கோட்டையன் :

மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளை நடத்துவது குறித்து, அறிக்கை விடும் அரசியல் கட்சி தலைவர்கள், ஆலோசனை தரலாம்,'' என, பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, தரமான கல்வி வழங்குவது, புயல் பாதித்த பகுதிகளில் பள்ளிகளை நடத்துவது, பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சென்னையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுடன், ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பங்கேற்று, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினோம். அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளோம்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிகமாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.