யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/5/18

கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்

ஒரு மாதமாய்  மௌனம் காத்த பள்ளிப்பூங்கா நாளை முதல் பேசப்போகிறது

கரும்பலகைகள் முகம்கழுவி தயாராய் இருக்கும் வண்ணப்பொட்டு இட்டுக்கொள்ள

வகுப்பறைகள் உங்களை சுவாசிக்க காத்திருக்கும் 
விளையாட்டு மைதானமோ பசுமை போர்த்தி துள்ளி குதிக்கும்..

கல்வி அரும்புகளே
கட்டிக்கரும்புகளே
உங்கள் புன்னகைக்கூடம் நாளை முதல் இந்த பள்ளிக்கூடம்

ஒருபடி முன்னேற்றம் கண்ட உங்களுக்கு வெற்றிப்பூங்கொத்து..
தவறிய உள்ளங்களுக்கு தாங்கி தைரியம் சொல்லும் நம் பள்ளி உண்மையில் செம கெத்து

யாவும் உண்டு இங்கு
கல்வியோடு ஒழுக்கம் அறி
எதிர்கால வாழ்வுக்கு அது ஒன்றே சரி
அனைவரிடமும் அன்பு காட்டு 
உலகம் உய்ய அதுவே உயர்நெறி

ஆசான்களே
புதுமைகளின் விளைநிலங்களே
ஓய்வறியா சூரியன்களே
அறிவால் அகிலமாள கற்பிக்கிற கற்பக தருக்களே

சிலையைத் துடைத்து பொலிவாக்குவதல்ல உமது பணி
உடைந்த கல்லையும் கலையாக்குவதே கல்விப்பணி

நேரம் தாண்டி உழைப்பதை உலகம் பெரிதனப்  பேசாது
நேரம் தவறி பள்ளி வந்தால் விமர்சிக்கும் வாய்கள் கூசாது

காலம் அறிவோம்
கடமை உணர்வோம்
மாணவர்களின் கதாநாயகர்கள் நீங்கள்
உங்களிலிருந்தே
உயர் எண்ணச் சிறகுகளை மாணவர்கள் ஏந்தி பறப்பர்..

உங்கள் உள்ளங்களின் ஏழைகளின் வலியை ஏற்றி அவர்களுக்கு எதிர்காலத்திற்கான நல்வழிதனைக் காட்டுங்கள்..

இவ்வாண்டு
பயணம் புதிது பாடதிட்டமும் புதிது
பழமைகளை புறந்தள்ளி புதுமைகளை படைக்க காத்திருக்கும் உங்களுக்கும் என் நெஞ்சம்நிறை வாழ்த்துகள்..

இயந்திர உலகில் இதயங்களோடு பேசுகிற நீங்களே பாக்கியவான்கள் 
புதிய உலகம் பிறக்கட்டும் உங்களில் இருந்து..

இனிய கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்

நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்- ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் - Important Points Highlights

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல்
தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!

4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்
 ஒன்றியத்திற்குள்

 (புதிய) கல்வி மாவட்டத்திற்குள்

 மாவட்டத்திற்குள் (கல்வி மாவட்டங்களிடையே)

 மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதல் வழங்கும் அதிகாரம்

 ஒன்றியம் & கல்வி மாவட்டத்திற்குள் : மாவட்டக் கல்வி அலுவலர்

 மாவட்டத்திற்குள் : முதன்மைக்கல்வி அலுவலர்

 மாவட்டம் விட்டு மாவட்டம் : இயக்குநர்.
சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு

 50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)

 50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)

 1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (V)

 5 வருடங்களுக்குக் கீழ் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (VIII)

 1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது *5 ஆண்டுகள் / அதற்கும்மேல்* பணிபுரிந்தோர் (X)
பிறமுக்கிய கூறுகள்

 1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.

 1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.

 மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும்.

 2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.

 2018-19 முதல் முன்னுரிமை விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.

 இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 மலைச் சுழற்சி நடைபெற வேண்டும்.

 அலகு விட்டு அலகு இல்லை.

 மாநிலச் சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, மாறுதல் & பதவி உயர்வில் வெளிமாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.

 ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை.
வழக்கத்திற்கான மாற்றம்

 நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.

அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்ற வல்லுநர் குழு அமைப்பு

அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுத்திட மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் முன் வைக்கப்பட்ட பள்ளி கல்வி துறை கொள்கை விளக்கு குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு பொது பாடத்தின்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மாநில பள்ளிக்கல்வி பொதுப்பாட சட்டம் 2010-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 6 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கட்டணத்தை கல்வி கட்டணக் குழு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பள்ளியால் நிர்ணயிக்கப்ட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த ரூ.63,86,290 ரூபாயை மாணவர்களிடம் திரும்ப வழங்க கட்டண நிர்ணய குழு ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது

பள்ளிக்கல்வித்துறை 2018 - 2019 ஆம் கல்வியாண்டு வாராந்திர செயல்திட்டம் வெளியீடு

NMMS தேர்வில் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

பள்ளி ஆய்வின் போது CEO, DEO, BEO, EDC, SSA APO, BEO, BRC SUPERVISOR, BRTE, DI, DPEI, ECO ஆகிய கல்வித்துறை அதிகாரிகளின் பணிகள் என்ன? - செயல்முறைகள்

ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, உக்க் - உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

மொழி பாடங்கள் தாள் 1,  தாள்2 என்ற முறையை மாற்றி‌ ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.

*முதல்வரின் உத்தரவுபடி அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு ரூ.9 கோடியில் பயோமெட்ரிக் முறை திட்டம் நிறைவேற்றப்படும்*


*ரூபாய் 9 கோடி செலவில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் இல்லாமல் அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கப்படும்

*அரசு பள்ளிகளில் LKG, UKG  வகுப்புகளை துவக்க நடவடிக்கை.

*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில்  காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.
  
*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.

*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில்  வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

*கன்னிமாரா நூலகம் புதுப்பிக்கப்படும்

சட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். 

சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. 

உத்தரவு : ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா? - மக்கள் நீதி மய்யத்தின் கேள்வி

சட்டசபையில் இன்று பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதையொட்டி அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா?
என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.சட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் கேள்விகள் வருமாறு:-

* அரசு பள்ளிகளின் தர நிர்ணயத்தை ஆய்வு செய்து அவற்றை கண்காணிக்கக்கூடிய தன்னிச்சையான ஆணையம் அமைப்பதற்கு அரசு முயற்சி எடுக்குமா?

* 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த கணினி வழிக்கல்வி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றனவா?

* மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் 31 ஆயிரத்து 322 பள்ளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பிலான சிறுவர் நாளிதழ்கள், இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன?

* குழந்தைகளுக்கான வகுப்புகளை அரசு பள்ளிகளில் உடனடியாக தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து பள்ளி கல்வித்துறை எப்போது முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும்?

சட்ட திருத்தம்

* துணை வேந்தர்களின் மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் கல்வித்துறையின் மீதான நம்பிக்கையை குறைத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு தன்னிச்சையான அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவருமா?

* பட்டதாரி மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்பு இன்றி கிடைக்கின்ற வேலை செய்யும் நிலையை போக்குவதற்கு, திறன் மேம்பாடு கல்வி திட்டத்துக்கு என்ன வகையான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது?

இவை அனைத்தையும் ஆராய்ந்து சட்டங்கள், மசோதாக்கள், மானியக் கோரிக்கைகள் போன்றவற்றை பரிசீலிக்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்ட 18 பள்ளிகள் மூடல்; பட்டியல் இணைப்பு

பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED