யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/11/16

OLD 500,1000 EXCHANGE SLIP ANNEX 5 FORM

TNTET Supreme Court Judgement copy (09.11.2016)

சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நாக் ஜெயந்தி விடுமுறை ரத்து வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்வங்கிகள் இயங்கும் & திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நாக் ஜெயந்தி விடுமுறை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 500 மற்றும்
ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக ரிசர்வ்வங்கி இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது

புதுடெல்லி,நாடு முழுவதும் உள்ளசுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி நள்ளிரவுவரையில் கட்டணம் கிடையாது என்றுஅறிவிக்கப்பட்டு
உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில்சுங்கக் கட்டணம் வசூலை 11 தேதிநள்ளிரவு வரையில் வசூலிப்பதை ரத்துசெய்ய முடிவுசெய்யப்பட்டு உள்ளது என்று மத்தியகப்பல் மற்றும் சாலை போக்குவரத்துதுறை மந்திரி நிதின் கட்காரிஅறிவித்து உள்ளார். வாகன போக்குவரத்து தடையின்றிநடக்க ஏதுவாக தற்காலிகமாக சுங்கக்கட்டணம்ரத்து செய்ய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார் நிதின் கட்காரி.இன்று முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்றுபிரதமர் மோடி அறிவித்தார். புதியதாகபுதுவடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், 72 மணிநேரத்துக்கு, அதாவது, 11-ந் தேதி நள்ளிரவுவரையில் சில இடங்களில் இந்நோட்டுகளைபயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டது.* மருத்துவமனைகள்*

மருந்துகடைகள் * பெட்ரோல் விற்பனை நிலையங்கள் * ரெயில்நிலைய முன்பதிவு கவுண்ட்டர்கள் * பஸ் நிலையங்கள் * விமானநிலையங்கள் * உடல் எரியூட்டும் இடம்* கூட்டுறவு சங்கங்கள்* மாநில அரசு நடத்தும்பால் நிலையங்கள் ஆகிய இடங்களில் ரூ. 500, 1000 நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ரூபாய்நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்றுஅறிவித்ததை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம்வசூலிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. மேலும் வாக்குவதாங்களும் நேரிட்டது. இந்நிலையில் மத்திய அரசு இந்தஅறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

TNPSC -Group -1-Notification

FLASH NEWS:-வருமானத்துக்கு அதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்

வருமானத்துக்குஅதிகமாக வங்கிகணக்கில் டெபாசிட் செய்தால் 200% அபராதம் விதிக்கப்படும்..வருமானத்துக்குபொருந்தாத தொகையை
டெபாசிட் செய்தால்அபராதம்..
வருவாய்துறை செயலாளர்..

TET-NEWS-ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும்

TRB- TNTET : போலி சான்றிதழ் - 2012 & 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்று வந்த TET ஆசிரியர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு - செயல்முறைகள்



ரிசர்வ் வங்கி பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு அளித்துள்ள விளக்கம்:

1. பழையநோட்டுகளை மாற்றினால் முழுத்தொகையும் கிடைக்குமா?

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைவங்கிகள்/ தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில்கொடுத்து அதற்கான முழு மதிப்பிலானதொகையையும் பெறலாம்.

2 .ரொக்கமாகஎவ்வளவு பெற முடியும்?

இப்போதைக்குதனிநபருக்கு ரூ.4000 வரை வங்கிகளில்பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெறலாம். அதற்கு மேலான
தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

3. நான்ஏன் எனது அனைத்து பழையநோட்டுகளுக்கும் புதிய நோட்டுகளை பெறமுடியாது?

இப்பொதைக்குமத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை. எனவே தற்போதைய இந்தத் திட்டம் ரூ.4000 வரை மாற்றி கொள்ள அனுமதிவழங்கியுள்ளது.

4. எனக்குரூ.4,000 போதவில்லை நான் என்ன செய்வது?

ரூ.4000 ரொக்கத்தொகை போக மீதித் தொகையைவங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம், அதனை காசோலை மற்றும் பிறஎலக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை மூலம் உங்கள் தேவைக்குபயன்படுத்தலாம்.

5. என்னிடம்வங்கிக் கணக்கு இல்லை எனில்?

நீங்கள்வங்கிக் கணக்கு ஒன்றை அதற்கானஅடையாள ஆவணங்களுடன் சமர்ப்பித்து தொடங்குவது அவசியம்.

6. என்னிடம்ஜன்தன் யோஜனா திட்டப்படி தொடங்கப்பட்டகணக்குதான் உள்ளது என்றால்?

ஜன் தன் கணக்கு வைத்திருப்போர்அதற்கான விதிமுறைகளுடன் பணத்தை பரிமாற்றம் செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

7. பரிமாற்றத்திற்குநான் எங்கு செல்ல வேண்டும்?

அனைத்துவர்த்தக வங்கிகள், ஆர்ஆர்பி.க்கள், அரசு கூட்டுறவுவங்கிகள், அல்லது எந்த ஒருதலைமை மற்றும் துணை தபால்அலுவலகங்களிலும் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

8. நான்கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமா?

ரூ.4,000 வரை மாற்றி கொள்ள எந்தஒரு வங்கிக்கும் முறையான அடையாள அட்டையுடன்சென்று மாற்றிக் கொள்ளலாம்.
ரூ.4,000த்துக்கும் கூடுதலான தொகைக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும்வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின்கிளைகளுக்கும் சென்று கணக்கில் வரவுவைத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்குரிய அடையாளஅட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். மெலும் எலெக்ட்ரானிக் முறையின் பணத்தை வங்கிக் கணக்கில்மாற்றம் செய்வதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும்கொண்டு செல்லவும்.

9. நான்கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளைக்கும் செல்லலாமா?

ஆம். உங்கள் வங்கியின் எந்தஒரு கிளைக்கும் செல்லலாம்.

10. எந்தஒரு வங்கியின் எந்த ஒரு கிளைக்கும்செல்லலாமா?

ஆம். செல்லலாம், ஆனால் பணப்பரிமாற்றத்துக்கு தேவையான அடையாளஅட்டை, ஆவணத்தை சமர்ப்பிப்பது அவசியம். ரூ.4,000த்துக்கும் அதிகமான தொகைக்கு எலெக்ட்ரானிக்நிதி பரிமாற்றத்துக்குத் தேவையான அடையாள அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பதுஅவசியம்.

11. எனக்குவங்கிக் கணக்கு இல்லை.. ஆனால்என் நண்பர் அல்லது உறவினர்வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் நான்பரிமாற்றி கொள்ளும் தொகையை வரவு வைத்துக்கொள்ளலாமா?

செய்யலாம், மற்றவர்களது விருப்பத்தின் பேரில், அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைக்கலாம். அப்போது உங்கள் அடையாள அட்டையைவங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கி வாடிக்கையாளரின் ஒப்புதல் சான்றும் அவசியம்.

12. பணத்தைஎடுத்துக் கொண்டு கணக்கு வைத்திருப்பவர்தான்நேரில் செல்ல வேண்டுமா, அல்லதுபிரதிநிதியை அனுப்பலாமா?

நேரடியாகசெல்வது விரும்பத்தக்கது. உங்களால் நேரடியாக செல்ல முடியாதபட்சத்தில் உங்கள்பிரதிநிதியிடம் உங்கள் கைப்பட எழுதியஅனுமதி கடிதம் அவசியம். அவரதுஅடையாள அட்டையும் அவசியம்.

13. ஏடிஎம்.இலிருந்து நான் பணம் எடுக்கமுடியுமா?

18 நவம்பர்2016 வரை நீங்கள் ரூ.2,000 வரைநாளொன்றுக்கு எடுக்க முடியும், அதன்பிறகு 19-ம் தேதியிலிருந்து இதன்வரம்பு ரூ.4000 ஆக அதிகரிக்கப்படும்.

14. காசோலைமூலம் பணம் எடுத்துக் கொள்ளலாமா?

இம்மாதம்24ம் தேதி வரை வித்ட்ராயல்ஸ்லிப் அல்லது காசோலை மூலம்ஒரு நாளைக்கு ரூ.10,000 வரை எடுக்கலாம். வாரம்ஒன்றிற்கு ரூ.20,000 வரையே எடுக்க முடியும்(இதில் ஏ.டி.எம். பண எடுப்புத் தொகையும் அடங்கும்), இதன் பிறகு இந்தத்தொகையை உயர்த்த மறுபரிசீலனை செய்யப்படும்.

15. ஏ.டி.எம். மூலம்பணத்தை டெபாசிட் செய்யலாமா?

ஆம். ரூ.500, ரூ.1000 நோட்டுகளைஏ.டி.எம்மூலம் வங்கிக் கணக்கில் டெபாசிட்செய்யலாம்.

16.நெட்பேங்கிங்கில்பணபரிமாற்றம் செய்யலாமா?

என்இஎப்டி/ ஆர்டிஜிஎஸ் / ஐஎம்பிஎஸ் / இன்டர்நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங் மூலம்பணப் பரிமாற்றம் செய்யலாம். எந்த தடையும் இல்லை.

17. நான்தற்போது இந்தியாவில் இல்லை, நான் என்னசெய்ய வேண்டும்?

உங்கள்பிரதிநிதியிடம் உங்கள் கையெழுத்துடன் ஒப்புதல்கடிதம் அளித்து அவரது அடையாளஅட்டையுடன் வங்கிக்கு அவர் சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

18. நான்ஒரு என்.ஆர்.ஐ. என்னிடம் என்.ஆர்.ஓ. கணக்கு உள்ளது பரிமாற்றத் தொகையைஎன் கணக்கில் வரவு வைக்க முடியுமா?

ஆம், செய்யலாம்.

19. சுற்றுலாப்பயணிகள் தங்கள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை என்ன செய்வது?

விமான நிலையங்களில் இருக்கும் பணப்பரிவர்த்தனை மையங்களில் 72 மணி நேரத்திற்குள் கொடுத்துரூ.5,000 வரை மாற்றிக் கொள்ளலாம். ஓ.எச்.டிநோட்டுகளை பெற்றதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும்.

20. செல்லுபடியாகும்அடையாள அட்டைகள் யாவை?


ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், என்.ஆர்.இ.ஜி.ஏ கார்டு, பான்கார்டு, அரசுத்துறை அதன் ஊழியர்களுக்கு அளித்துள்ளஅடையாள அட்டை ஆகியவை.

TNTET:இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர்-விகடன் செய்தி

மத்தியஅரசு 2011ம் ஆண்டு இலவசகட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும்ஒன்றாம் வகுப்பு முதல் 10ம்வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் இடைநிலைபட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் திறமை குறித்து தகுதிதேர்வு நடத்தி
பணியில் அமர்த்தவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.


மேலும்2011ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் பணியில்சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வை எழுதிதேர்ச்சி பெற வேண்டும் என்றுஉத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவைதொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் தகுதிதேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வுசெய்யவும், பணியில் சேர்ந்த ஆசிரியர்களைபணி நிரந்தரம் செய்யவும் முடிவு செய்தது.

அதற்காகதமிழகத்தில் முதன் முதலாக தகுதித்தேர்வைஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த12.7.12ம் தேதி நடத்தியது. 7 லட்சம்பேர் எழுதிய இந்த தேர்வில்துரதிஷ்டவசமாக 2 ஆயிரத்து 448 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். இது ஆசிரியர்களின் தரம்பற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.இதையடுத்துமுதல்வர் ஜெயலலிதா ஆசிரியர்களின்கோரிக்கையை ஏற்று மீண்டும் மற்றொருதகுதி தேர்வை நடத்தும்படி உத்தரவிட்டார். இன்னொரு தகுதித்தேர்வு 14.10.12ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். கடந்த முறையை விட இந்ததேர்வில் 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப்பெற்றார்கள். அடுத்தடுத்து தகுதித்தேர்வை நடத்தும் பணியில் ஆசிரியர் தேர்வுவாரியம் இறங்கியது.

இந்நிலையில்கடினமான இந்த தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மதிப்பெண்களில்சலுகைகள் வழங்க வேண்டும் என்றுபல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது. தமிழக அரசு தகுதித்தேர்வுமதிப்பெண் சலுகை வழங்க முடிவுசெய்தது. 2014ம் ஆண்டு இறுதியில்ஆசிரியர் தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி வழங்கி ஆசிரியர் தேர்வுவாரியம் உத்தரவிட்டது.2014ம் ஆண்டு ஆசிரியர்தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு இந்த சலுகையின் படிஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்என்று தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் 2014ம் ஆண்டுக்கு முன்புநடந்த தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் இதை ஏற்கவில்லை. எங்களுக்கும்5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி ஆசிரியர்வேலை வழங்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர். இதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கவில்லை.

இதையடுத்துதேர்வர்கள் சிலர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சிசலுகையை ரத்து செய்ய வேண்டும்என்றுவழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமதுரை கிளை 5 சதவீதம் மதிப்பெண்தளர்ச்சி உத்தரவு செல்லாது என்றுதீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஆசிரியர்தேர்வு வாரியம் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்குகடந்த 2 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்துவந்தது. இதனால் ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த 2 ஆண்டுகளாக தகுதித்தேர்வைநடத்தவில்லை. ஆயிரக்கணக்கானோர் எப்போது தகுதித்தேர்வு நடக்கும்என்று பெரும் எதிர்பார்ப்பில் நீண்டநாட்களாக காத்திருந்தனர்.

தமிழக அரசின் சார்பில் 2014ம்ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வில்5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகையை தொடர்ந்து வழங்கிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி விவாதித்துவந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கை கடந்தவாரம் விசாரித்த உச்சநீதிமன்றம் இரு தரப்பு இறுதிவாதத்தை கேட்ட பிறகு தேதிகுறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.இந்நிலையில்5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி சலுகை குறித்து உச்சநீதிமன்றம்இன்று காலையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஆசிரியர் தகுதிதேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசு வழங்கிய5 சதவீத மதிப்பெண் சலுகை உத்தரவு செல்லும்என்று தீர்ப்பளித்தது. தங்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்புவழங்கியதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும்தேர்வு எழுதாத ஆசிரியர்கள், பட்டதாரிகள்பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரிஇயக்குனர் ராஜராஜேஸ்வரியை தொடர்பு கொண்டாம்.. அவர்கூறியதாவது:

உச்சநீதிமன்றம்ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களின்அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்றுதீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள்தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 5 சதவீதம் மார்க் தளர்ச்சிசலுகை வழங்கினால் ஏற்கனவே இறுதியாக நடந்ததகுதித்தேர்வை எழுதியவர்களில் 82 முதல் 89 மார்க் வரை பெற்றவர்களின்எண்ணிக்கை 43 ஆயிரத்து 198 பேர் ஆகும். 90 மார்க்கிற்குமேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 518 பேர் ஆகும். உச்சநீதிமன்றத்தின்தீர்ப்பு மூலம் ஆசிரியர் தகுதிதேர்வு நடத்துவதற்கு இருந்த தடை நீங்கிவிட்டது. இனிமேல் ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்ந்து நடக்கும். ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வுமுடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள்ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் வெயிட்டேஜ்முறையும் அமல்படுத்தப்படும்.


பட்டதாரிஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் பிளஸ் 2 வுக்கு 10 மதிப்பெண்கள், பட்டப்படிப்புக்கு 15 மதிப்பெண்கள், பி.எட். படிப்பிற்கு15 மதிப்பெண்கள், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில்வைத்துக்கொள்ளப்படும்.இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ்2வுக்கு 15 மதிப்பெண்கள், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பிற்கு25 மதிப்பெண்கள், தகுதித்தேர்வுமதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். இதுதான் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கெடுக்கும் முறை. இதன் அடிப்படையில்தான்ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. 'இவ்வாறு அவர்கூறினார்

அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் நாளை முதல் புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் எடுக்கலாம் மத்திய அரசு தகவல்

அனைத்துஏ.டி.எம். மையங்களிலும் நாளை(வெள்ளிக்கிழமை) முதல்புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளைஎடுக்கலாம் என்று மத்திய நிதித்துறை
செயலாளர் அசோக் லாவசா தெரிவித்தார்.
மத்தியநிதித்துறை செயலாளர் அசோக் லாவசா டெல்லியில்நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:–
மத்தியஅரசு நடவடிக்கை
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள்சில சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களது சிரமங்களைப் போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்தியஅரசு எடுத்து வருகிறது. குறிப்பாகஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுப்பதற்கும் மற்றும்செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ரூபாய் நோட்டுகளை செல்லாதுஎன மத்திய அரசு அறிவித்ததன்நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், இடையூறுகளை சமாளிப்பதில் மத்திய அரசுக்கு மக்கள்ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்.
நாளை முதல் பணம் எடுக்கலாம்
மக்களின்பண பரிவர்த்தனை தேவைக்காக மாற்று ரூபாய் நோட்டுகள்அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ரூபாய்நோட்டுகள் வினியோகத்தை ரிசர்வ் வங்கி தீவிரமாககண்காணிக்கும். பணப் பரிமாற்றம் என்பதுபல்வேறு வழிகளில் நடக்கலாம். என்றபோதிலும், இதில் ரொக்கம் அல்லாதபரிவர்த்தனையை நோக்கிச் செல்லவே மத்திய அரசுவிரும்புகிறது.
தற்போதுஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதில் உள்ளசிக்கல்கள் புதிய ரூ.500 மற்றும்ரூ.2,000 நோட்டுகளின் வினியோகம் சீரடைந்தவுடன் எளிதாகிவிடும்.
அனைத்துஏ.டி.எம். மையங்களும் வெள்ளிக்கிழமை(நாளை) திறக்கப்பட்டுவிடும். பல ஏ.டி.எம். மையங்கள்வியாழக்கிழமை(இன்று) திறக்கப்படும். இவற்றில்இருந்து புதிய ரூ.500 மற்றும்ரூ.2,000 நோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறுஅவர் கூறினார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம்கூறுகையில், ‘‘இது முக்கியமானதொரு நடவடிக்கை. ஊழல், கள்ளநோட்டு, கருப்பு பணம் ஆகியவற்றுக்குஎதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

பழைய 'கரன்சி' மீது வரி உண்டா? : அருண் ஜெட்லி புது குண்டு

புதுடில்லி: ''மத்திய அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் கரன்சி நோட்டுகளை, வங்கியில் 'டிபாசிட்' செய்கையில், அவை வரி விதிப்பில்இருந்து தப்பாது; அந்த பணத்தின் வருவாய்ஆதாரம்
தொடர்பாக, சட்டம் தன் கடமையைசெய்யும்,'' என, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமானஅருண் ஜெட்லி கூறியுள்ளார்.

பிரதமர்நரேந்திர மோடி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, நேற்று முன்தினம் அறிவித்தார்; அவற்றை, வங்கியில் டிசம்பர், 30க்குள் 'டிபாசிட்' செய்யலாம் என அறிவிக்கப் பட்டது. இந்த பணத்துக்கு வரிவிதிக்கப்படுமா என்பது குறித்து, பொதுமக்கள்மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி துார்தர்ஷன், செய்தி சேனலில் கூறியதாவது: செல்லாதெனஅறிவிக்கப்பட்ட
கரன்சிநோட்டுகள், வரிவிதிப்பில் இருந்து தப்பாது. அவற்றின்வருவாய் ஆதாரம் தொடர்பாக, சட்டம்தன் கடமையை செய்யும். வங்கிகளில், 'டிபாசிட் 'செய்யப்படும் பணம், இதற்கு முன்வங்கியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலோ, சட்டரீதியில் பெறப்பட்டிருந்தாலோ, அது பற்றி கவலைப்படத் தேவையில்லை.

அதேசமயம், சட்டவிரோதமாக சம்பாத்தியம் செய்தி ருந்தால், அந்தபணம் வந்ததற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். அந்தபணம், சட்டவிரோதமாக வோ, லஞ்சம் வாங்கியோபெறப்பட்டிருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டுசெலவினங்களுக்காக வைத்திருக்கும், 25 ஆயிரம் அல்லது 50 ஆயிரம்ரூபாய் போன்ற சிறிய தொகைபற்றி, பொதுமக்கள் கவலைப்படத் தேவை யில்லை. அவற்றை, கவலைப்படாமல் வங்கிகளில், 'டிபாசிட்' செய்யலாம். முதல் இரு வாரங்களில், குறைந்தளவே, புதிய கரன்சி சப்ளைசெய்யப் படும்; எனவே, செல்லாதகரன்சிகளுக்கு பதில், புதிய கரன்சிகளைமாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும். மூன்றுவாரங்களுக்கு பின், அதிகளவில் கரன்சிசப்ளை செய்யப்படுவதால், பிரச்னை இருக்காது.

மத்தியஅரசின் நடவடிக்கையால், மின்னணு வியல் முறையில்பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரிசெலுத்துவோர் அதிகம் உள்ள நாடாகஇந்தியா உருவெடுக்கும். இதன் பின், ஊழல்செய்வோர், லஞ்சம் வாங்கு வோர், குற்ற செயல்களால் பணம் குவிப்போர் சிரமப்படுவர். இதனால், நேர்மை அதிகரிக்கும்.

அரசின்நடவடிக்கையால் முதல் இரு நாட்களுக்கு, பொதுமக்கள் சிரமப்படுவர் என்பது உண்மையே.


அதற்காக, கறுப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும்நடவடிக்கைகளை எடுக்கா மல் இருக்கமுடியாது. இதனால், அரசுக்கு, நேரடிமற்றும் மறைமுக வரி வருவாய்அதிகரிக்கும். இவ்வாறு அருண் ஜெட்லிகூறினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஆசிரியர்தகுதித் தேர்வு முறை தொடர்பாகதமிழக அரசு வெளியிட்டுள்ள இருஅரசாணைகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம்புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் சென்னைஉயர் நீதிமன்றம் அளித்த
தீர்ப்பை உறுதிப்படுத்தியஉச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைகிளை அளித்த தீர்ப்பை ரத்துசெய்துள்ளது.
இரு அரசாணைகள்: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டிஇடி) தகுதிகாண் (வெயிட்டேஜ்) முறையை 2013-ஆம் ஆண்டில் தமிழகஅரசு கொண்டு வந்தது. இதுதொடர்பாக 2014, பிப்ரவரி 6-ஆம் தேதியிட்ட அரசாணை25-இல் "தேர்வெழுதும் அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும்ஐந்து சதவீத மதிப்பெண் விலக்குஅளிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2014, மே 30-ஆம் தேதியிட்ட அரசாணை71-இல் தேர்வெழுதிய ஆசிரியர்களின் பணி நியமனத்தின்போது தகுதிகாண்(வெயிட்டேஜ்) முறை கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில்"தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டியமதிப்பெண் சலுகையை அனைத்து இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கும் வழங்க வகை செய்யும்தமிழக அரசின் அரசாணையால் எங்களுக்குபாதிப்பு ஏற்படும்' என்று சில ஆசிரியர்கள்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தனர். இந்த வழக்கில் தமிழகஅரசின் அரசாணையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் 2014 செப்டம்பர் 22-இல் தீர்ப்பளித்தது. இதேவிவகாரத்தில் மற்றொரு ஆசிரியர் பிரிவினர்சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடுத்தனர். அதில், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறி தமிழகஅரசின் அரசாணைகளை ரத்து செய்து 2014, செப்டம்பர்25-இல் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து"ஒரே விவகாரத்தில் இரு நீதிமன்றங்கள் மாறுபட்டதீர்ப்புகளை அளித்ததால் இந்த விஷயத்தில் தலையிடவேண்டும்' என்று கூறி பாதிக்கப்பட்டஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தனர். தீர்ப்பு: இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதிஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துபுதன்கிழமை அளித்த தீர்ப்பின் முக்கியஅம்சங்கள் வருமாறு: ஆசிரியர் தகுதித் தேர்வு முறைதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டஇரு அரசாணைகள், தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில் வழிமுறைகளின்படி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாநில அரசுக்கு உள்ளஅதிகாரத்தை பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. அத்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பயனாளர்களுக்கு மதிப்பெண் சலுகை அளித்துள்ளது. எனவேதான்தமிழக அரசின் அரசாணைகளை உறுதிப்படுத்திசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில் வழிமுறைகளின் அம்சங்களை கவனத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் நடவடிக்கையைதன்னிச்சையானதாகக் கருதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. எனவே மதுரைக் கிளை அளித்ததீர்ப்பை ரத்து செய்கிறோம். இந்தவிவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம்அளித்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக தேர்வில்வெற்றி பெறாதவர்கள் தாக்கல் செய்த அனைத்துமேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNTET-2016:ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது? -கல்வி அமைச்சர் விளக்கம்

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின்ஆசிரியர் தகுதித்தேர்வு முறை செல்லும் என்றுஇன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை அடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வுநடத்த இனி தடையேதும் இல்லை.

இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர்மஃபா பாண்டியராஜன் கூறியதாவது :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்பானது அரசுக்கு சாதகமான வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது. 

தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும்இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கானஅறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

TNTET Supreme Court Judgement copy (09.11.2016)