யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/6/17

How to link your Aadhaar with PAN by sending an sms in Tamil?

ஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக
எப்படி இணைப்பது?


ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் விதமாக வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

அதற்கு முக்கியமாகப் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் போன்றவற்றைக் கையில் வைத்து இருக்க வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?
எஸ்எம்எஸ் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க ‘UIDPAN space 12 digit Aadhaar Space 10 digit PAN' வடிவத்தில் தகவலை உருவாக்கி 567678 அல்லது 56161 எண்ணிற்கு அனுப்புவதன் மூலமாக எளிதாக இணைத்துவிடலாம்.

முக்கியக் குறிப்பு:
எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் போது ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயர்கள் இரண்டும் சரியாகப் பொருந்த வேண்டும். இல்லை என்றால் இணைப்புச் செய்ய முடியாது.

 இணையதளம்:
இணையதளம் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கப் புதிய இரண்டு இணைப்புகளை வருமான வரி இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருத்தம்:
ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தித் திருத்தவும் செய்யலாம்.

 சரிபார்ப்பு:
இணைப்பிற்கான படிகளைச் செய்த பிறகு உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் குறுந்தகவலுக்கு Y என்று பதில் அளிப்பதன் மூலம் எளிதாக இணைப்பைச் சரிபார்க்க முடியும்.

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதி, கீழிருப்பு ஊராட்சியில், நுாலகம் அமைக்கும் திட்டம் உள்ளதா?

அமைச்சர் செங்கோட்டையன்: தற்போது இல்லை.

சபா.ராஜேந்திரன்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட, நுாலக கட்டடம் உள்ளது. எனவே, அங்கு நுாலகம் அமைக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

தி.மு.க., - ஆடலரசன்: திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நுாலகம் திறக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டடத்தில், வவ்வால்கள் உள்ளன.

அவற்றை வெளியேற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல நுால்களை, நுாலகங்களுக்கு வழங்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - ரங்கநாதன்: வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலை மாற, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் நுாலகம் அமைக்க வேண்டும். நல்ல புதிய நுால்களை வழங்க
வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தேவையான நுால்களை வாங்கி வைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., - தென்னரசு: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நுாலகங்களுக்கு கட்டடம் கட்ட, நிதி ஒதுக்க அனுமதி வழங்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: நிதி ஒதுக்கலாம்.

அ.தி.மு.க., - கதிர்காமு: கல்வித் துறையில், அமைச்சர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தேனி நகரில், ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. மாணவர் நலன் கருதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, தனித்தனி பள்ளி அமைக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

INSPIRE AWRD - பதிவு செய்யும் முறை!

இனி வாட்ஸ்அப் மூலமே மெயில் அனுப்பலாம்: இது லேட்டஸ்ட் அப்டேட்!

இன்றைய காலத்தில் வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களையோ அல்லது நபர்களையோ காண்பது அரிது. உலகளவில் தற்போது புதிய டிரெண்டாக
உருவெடுக்கும் வாட்ஸ்அப் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள எமோஜி, பயனாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது.


இதன்காரணமாக பயனாளர்களை மேலும் கவர வாட்ஸ்அப் பல்வேறு எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை முதற்கட்டமாக பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இமெயில் உள்ளிட்ட பல கோப்புகளை வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பும் வசதியையும் இதனுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.


வாட்ஸ்அப்-இல் எந்த மாதிரியான எமோஜி வேண்டுமோ அதனை டைப் செய்தால் அந்த எமோஜி தோன்றும். அதாவது, ஃபோன் என்ற எமோஜி வேண்டுமேனில், ஃபோன் (Phone) என்று டைப் செய்தால் நமக்கு போன் வகைகள் தோன்றும், அதில் நமக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதி பீட்டா (beta) 2.17.238 வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அனைத்து வெர்ஷன்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.



முன்னதாக, வாட்ஸ்அப்-இல் எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.



கம்ப்யூட்டரை பார்க்காமலேயே வெளியேறும் பள்ளி மாணவர்கள்

சிவகங்கை: மேல்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் காலாவதியானதால் செய்முறை கல்வி பயிலாமலேயே பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு
மாணவர்கள் வெளியேறி
வருகின்றனர்.

தமிழகத்தில் 3,560 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 2,600 பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. செய்முறை கல்வி கற்பிக்க, ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப யூ.பி.எஸ். வசதியுடன் 8 முதல் 12 கம்ப்யூட்டர்கள் வரை வழங்கப்பட்டன.ஏற்கனவே 1,400 பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. அதேபோல் பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர்களும் செயல்படாமல் உள்ளன. இதனால் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை கல்வி பயிற்றுவிப்பதில்லை. 'தியரி' மட்டும் கற்பிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் கம்ப்யூட்டர் ஆய்வகம் பார்க்காமலேயே வெளியேறி வருகின்றனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் கூறியதாவது: 'எல்காட்' மூலம் 10 ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர்கள் வழங்கப்
பட்டன. வழங்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே யு.பி.எஸ்.,கள் பழுதடைந்தன. அடுத்த சில ஆண்டுகளிலேயே கம்ப்யூட்டர்களும் பழுதடைந்துவிட்டன. இதனால் மாணவர்களுக்கு செய்முறை கல்வி பயிற்றுவிக்க முடியவில்லை. இதுகுறித்து கல்வித்துறை யிடம் பலமுறை தெரிவித்துவிட்டோம். இந்தபட்ஜெட்டிலும் அதற்கான அறிவிப்பு இல்லை, என்றார்

20 ஆண்டிற்குப் பின் விடியலை நோக்கி காத்திருக்கும் 5000 ஆசிரியர்கள்*

1997 ல் பின்னடைவு காலிப் பணியிடத்தில் பணியேற்ற SC/ST ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, அவர்களின் மீதான நிபந்தனைகள் அனைத்தையும் ரத்து செய்து பணியேற்ற நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக ஏற்று ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி காத்திருக்கும் 5000ஆசிரியர்களுக்கு தற்போது கல்வித்துறையில் புரட்சி செய்து வரும் 
பள்ளிக்கல்வி முதன்மை செயலர் அவர்களை 5/06/2017 அன்று சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கனிவுடன் கோரிக்கையை கேட்ட செயலர் அவர்கள் இது குறித்து நல்லதொரு அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார். இக்கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வில் பிற ஆசிரியர்களுடன் உள்ள ஏற்றத்தாழ்வினை அகற்றி சமத்துவம் நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்...இவண் *ஆசிரியர்களில் கடைக் கோடியில் தனித்து விடப்பட்ட 1997 முதல் 2002 வரை பணியேற்ற ஆசிரியன்*..

ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Image may contain: text

ரேஷன் கடை முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை... நுகர்வோர்கள் புகார் அளிக்க தமிழக அரசின் ஆப்!

ரேஷன் கடைகள் முதல் பேருந்து பயணங்களின் போது உணவருந்தும் மோட்டல்கள் வரை, ஒவ்வோர் இடங்களிலும் நுகர்வோர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இதுதான் எடை, இவ்வளவுதான் விலை என அனைத்துப் பொருள்களுக்கும் சட்டப்படி அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு பொருள்களின்
மீது
அச்சடிக்கப்பட்டிருந்தாலும், தரம், விலை, அளவு என ஏதாவதொரு விதத்தில் நுகர்வோர்கள் ஏமாற்றுப்பட்டுக் கொண்டே வருகின்றனர். இவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது தமிழக அரசின் TN-LMCTS மொபைல் ஆப். இதனை மொபைலில் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். எந்தப் புகார்களையும் சில நிமிடங்களில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல முடியும். தமிழக அரசின் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் சட்டமுறை எடை, அளவு பிரிவுதான் இந்த மொபைல் ஆப்-ஐ நிர்வகிக்கிறது.
TN-LMCTS நுகர்வோர் ஆப்
TN-LMCTS நுகர்வோர் ஆப்
எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் போனில் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அவற்றைக் கொடுத்த பின்னர் உங்களுடைய அலைபேசி எண் OTP மூலம் சோதிக்கப்படும். சோதனை முடிந்துவிட்டால், புகார்களுக்கு உங்கள் ஆப் தயார். உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து எப்போது வேண்டுமானாலும் லாக்-இன் செய்ய முடியும். ஆப் முழுவதுமே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. அதேசமயம் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது.

நீங்கள் செய்த புகார்களின் பட்டியல், புதிய புகார்களுக்கான ஆப்ஷன், விரைவான புகார்கள் என மூன்று மெனுக்கள் இருக்கின்றன. விரைவான புகார்களுக்கு என்ன புகார், எந்த இடம் என்பதை மட்டும் தெளிவாகக் குறிப்பிட்டு அதற்கான சாட்சிகளாகப் புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை உடன் இணைக்க வேண்டும். புதிய புகார்கள் என்ற மெனுவில், புகார் பற்றிய குறிப்பு, புகைப்படங்கள் / வீடியோ/ ஆடியோ இணைப்பு, எது தொடர்பான புகார் என்ற விவரம், கடையின் முழு முகவரி போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் புகாரினைப் பதிவு செய்துவிட்டால், அதற்கு புகார் எண் கொடுக்கப்பட்டு உங்கள் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். நீங்கள் கொடுத்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களும் ஆப்-ல் காட்டப்படுகின்றன.
TN-LMCTS ஆப்
TN-LMCTS ஆப்


பொருள் வாங்கியதற்கான ரசீது, கடையின் போட்டோ, பொருள் வாங்கிய வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் போன்ற ஆதாரங்களை அனுப்புவது எளிதாக இருக்கிறது. தாமதமின்றி உடனே புகார்களைப் பதிவு செய்துவிடவும் முடிகிறது. ஆனால் புதிய புகார்களைப் பதிவு செய்யும் போது, கடைகளின் தன்மை, முகவரி போன்றவற்றைக் குறிப்பிடும் போது நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்க்க தமிழ் மொழியையும் இதில் இணைக்கலாம்.  ஆப் மட்டுமின்றி, இணையம் மூலமாகவும் உங்களுடைய புகார்களைப் பதிவு செய்யமுடியும்.  http://tnlegalmetrology.in/ என்ற முகவரியில் உங்கள் ஆப்பில் கொடுத்த மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றைக் கொடுத்து லாக்-இன் செய்யலாம். எனவே மக்கள் தங்கள் புகார்களை இணையம் மற்றும் மொபைல் மூலமாகப் பதிவு செய்யவும், நிர்வகிக்கவும் முடியும்.
ஆப் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்: 

https://play.google.com/store/apps/details?id=com.mslabs.lmctspublic&hl=en

இந்த ஆப்- உருவாக்கிசெயல்படுத்திவரும் தமிழகதொழிலாளர்துறையின் செயலாளர் அமுதா ..எஸ்இதுபற்றிக் கூறும்போது,"மார்ச் மாதம் இந்த ஆப் அறிமுகம்செய்யப்பட்டதுஇணையம் மற்றும் ஆப் இரண்டின்மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத்தெரிவிப்பதற்காகத்தான் இந்தச் சேவை அறிமுகம்செய்யப்பட்டுள்ளதுஇதில் புகார் தெரிவித்தால்அடுத்த 48 மணிநேரத்திற்குள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்எடை அளவுசட்டம் மற்றும் பொட்டலப் பொருள்களுக்கான விதிகள் எனஇரண்டு சட்டங்கள் இருக்கின்றனஅவற்றின் கீழ் வரும்புகார்கள் இதன் மூலம் பதிவு செய்யப்படும்
கடைகளில் நீங்கள் வாங்கும் பொருள்களின் எடைஅளவுபோன்றவற்றில் தவறு இருந்தாலோ அல்லது MRP விலையைவிடவும் அதிகமாக விற்றாலோ இதில் புகார் செய்யலாம்.பொட்டலப் பொருள்களுக்கான விதிகளைப் பொறுத்தவரை,ஒரு பொருள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டால் அந்தப் பாக்கெட்டின் மீதுயார்அதைப் பாக்கெட்டில் அடைத்தார்யார் அதைத் தயாரித்தார்,யார் அதை இறக்குமதி செய்தார்எப்போது பேக் செய்யப்பட்டது,அதன் எடை எவ்வளவுஅதன் அதிகபட்ச விலைநுகர்வோர்புகார் செய்வதற்கான எண்கள் என விவரங்கள் அனைத்தும்இருக்க வேண்டும்ஒரு நுகர்வோர் பாக்கெட்டில்அடைக்கப்பட்ட பொருள் ஒன்றை வாங்கும்போதுஅதனைப்பிரித்துப்பார்த்து வாங்குவது இல்லைஎனவே அந்தப்பாக்கெட்டிற்குள் என்ன இருக்கிறது என்பது குறித்த தெளிவானவிளக்கங்கள் பாக்கெட்டில் இருக்க வேண்டும்இதில் ஏதேனும்ஒரு விஷயம் இல்லை என்றாலோ அல்லது அதில்குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு மாற்றாக விற்பனைசெய்யப்பட்டாலோ அது சட்டப்படி குற்றம்அதுமாதிரியானசமயங்களில் நுகர்வோர்கள் புகார் செய்ய வேண்டும். 
அப்படி மக்கள் பாதிக்கப்படும் போது ஆடியோவீடியோ,எழுத்துரசீதுகள் என ஏதாவதொரு வகையில் இந்த ஆப் மூலம்புகார் செய்யலாம்தகுந்த ஆதாரங்களையும் உடன்இணைக்கலாம்ஒருவேளை ஆதாரங்கள் எதுவும் இல்லைஎன்றால் கூட பிரச்னை இல்லைநுகர்வோர் தங்கள்குறைகளைத் தெளிவாகப் பதிவு செய்தால் கூட போதும்;நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்இந்த ஆப் மூலம் பதிவுசெய்யப்படும் அனைத்து புகார்களும் அந்தந்த ஏரியாவின் எடை,அளவு சட்ட அதிகாரிகளுக்குச் சென்று சேர்ந்துவிடும்.தமிழகத்தில் மொத்தம் 433 எடைஅளவு சட்ட அதிகாரிகள்இருக்கிறார்கள்அவர்கள் உடனே அடுத்த 48 மணிநேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுப்பார்கள்அதேபோல புகார்கொடுத்தவரின் விவரங்கள் எதுவுமேஅதிகாரிகளுக்குத் தெரியாதுஎனவே புகார் கொடுப்பவர்களின்விவரங்கள் எதுவும் வெளியே தெரியாதுஅதே சமயம் புகார்அளித்தவர்களுக்குபுகார் பதிவான எண்எப்போதுநடவடிக்கை எடுப்பார்கள்அதன் மீது எடுக்கப்பட்டநடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் அனைத்தும்எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும்இதுவரை இந்த ஆப் மூலம்வந்த அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதுதற்போது இதுபற்றிய விழிப்புஉணர்வுகுறைவாக உள்ளதால்குறைவான புகார்களே வருகிறது.எனவே வருகின்ற ஒவ்வொரு புகார்களையும் தீவிரமாகக்கவனித்து வருகிறோம்உதாரணமாக ஒரு மார்க்கெட்டில்இருக்கும் ஒரு கடையில் விலை அதிகமாக வைக்கப்பட்டுபொருள்கள் விற்கப்படுகிறது எனப் புகார் வந்தால்அந்த ஒருகடை மட்டுமின்றி அந்த மார்க்கெட்டில் இருக்கும் மற்றகடைகளையும் சோதனை செய்கிறோம்நேரடியாக சென்றுசோதனை செய்வதால்குற்றங்கள் குறைகின்றனசிலநாள்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும்மோட்டல்கள் குறித்து புகார்கள் வந்தனஉடனே தமிழகம்முழுவதும் இருக்கும் அனைத்து மோட்டல்களும் சோதனைசெய்யப்பட்டுகுற்றம் செய்தவர்களுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டதுஒரு கடையில் முதலில் தவறுகண்டுபிடிக்கப்பட்டால் உடனே சட்டப்படி அபராதம்விதிக்கப்படும்அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் அதேகடையில் தவறு நடப்பது கண்டறியப்பட்டால்குற்றம்செய்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்குஅனுப்பப்படுவார்.
TN-LMCTS நுகர்வோர் புகார் அளிப்பதற்கான ஆப்
இந்தஆப்பின் இன்னொரு சிறப்பம்சம், இதன் மூலம் ஆன்லைனில் பொருள் வாங்கினாலும் கூட புகார் செய்யலாம். எடை அளவு சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம். எனவே வெளிமாநிலங்களில் பொருள்கள் வாங்கியிருந்தாலும் கூட, அந்தந்த மாநிலங்களைத் தொடர்பு கொண்டு, விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள், ரேஷன் கடைகள், மோட்டல்கள் போன்ற அனைத்திற்கும் இந்த ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்" என்றார்.

ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.

தி.மு.க., - ரகுபதி: தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில், இடம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி கட்டணத்தை மட்டும், அரசு வழங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், இலவச பொருட்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை; அதை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் செங்கோட்டையன்: அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு இன்னமும் நிதி வழங்கவில்லை. எனினும், மாநில அரசு, 176 கோடி ரூபாய் ஒதுக்கி, கல்விக் கட்டணம் வழங்கி உள்ளது. இலவசப் பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை.

தி.மு.க., - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. ஒரு மாணவனுக்கு, இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலை உள்ளது. இப்பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் செங்கோட்டையன்: நீங்கள் கூறியது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள், கிராமம் கிராமமாகச் சென்று, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாது. இந்தியாவே திரும்பி பார்க்கும் விதமாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்

திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப்
பள்ளியில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

திருக்கழுக்குன்றம் அடுத்த, மாம்பாக்கம் ஊராட்சி, முடையூர் கிராமத்தில், அரசு உதவி பெறும், ஜார்ஜ் வேணுகோபால் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி, 1950ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக ஏற்படுத்தப்பட்டு, 1954ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

எண்ணிக்கை குறைவு

இப்பள்ளியில் வழுவதுார், காட்டூர், கிளாப்பாக்கம், தத்தளூர், நரப்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்தனர். தற்போது அந்த கிராமங்களில், புதிய தொடக்கப்பள்ளிகள் வந்துள்ளதால், இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

வரவேற்பு
இப்பள்ளியின் மாணவர்களை தக்க வைக்கும் விதத்தில், தலைமையாசிரியர் தலைமையில், ஆசிரியர்கள் அனைவரும், வீடு வீடாக சென்று, பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி, துண்டு பிரசுரம் கொடுத்தனர்.ஒரு வழியாக, 45 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களை தங்கள் பள்ளியில் தக்க வைக்க, பள்ளி வந்து செல்ல, வாகன வசதியை ஏற்படுத்த முடிவு செய்தனர்.

இதற்காக ஆசிரியர்கள் தங்கள் வருமானத்தில், 10 சதவீதத்தை ஒதுக்கி, மாருதி வேன் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்; பாதுகாப்பாக திரும்ப வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.மாணவர்களை பள்ளியில் தக்க வைக்க, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பு உள்ளது.பழைய விலைக்கு, மாருதி வேனை, விலை கொடுத்து வாங்கியுள்ள தலைமையாசிரியர், அதற்கான, டீசல் மற்றும் பராமரிப்பு செலவை, ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு

கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள்
பரிதவிக்கின்றனர். அரசின் மானியமும் குறைக்கப்பட்டதால் குறைந்த ஊதியத்தில் சிரமப்படுகின்றனர்.

 மாநிலத்தில் சர்வ சிக் ஷா அபியான்' திட்டத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள், மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. இதில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர், கண்காணிப்பாளர் தவிர்த்து, வட்டார கணக்காளர், பள்ளி கணக்காளர், கணினி 'புரோகிராமர்', கணிணி பயிற்றுனர், கட்டட பொறியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 1,500 பேர் பணிபுரிகின்றனர்.

இவர்கள் தங்களின் ஊதிய தொகையை, திட்டப் பணிகளுக்கான 100 சதவீத மானியத்தில் இருந்து பெற்று வந்தனர். ஆனால் சமீபகாலமாக திட்டத்திற்காக மத்திய அரசு, மாநில அரசு பங்களிப்பு தொகை மானியம் குறைத்து வழங்கப்படுவதால், இவர்களுக்கான ஊதியமும் சொற்பமாகவே கிடைக்கிறது. இதனால், அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தங்களை பணி அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அனைவருக்கும் கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர் கூட்டமைப்பு சார்பில் அரசு, பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

சங்கத்தின் மதுரை மண்டல நிர்வாகி ராஜா கூறியதாவது:மாநிலத்தில் 1,500 பேர் வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இழந்து நிரந்தரமின்றி பணிபுரிந்து வருகிறோம். ஏற்கனவே நடக்கும் திட்டப்

பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. எனவே அரசு அனைவருக்கும் கல்வித்திட்ட பணியாளர்களை நிரந்தரமாக்க முன் வர வேண்டும்,' என்றார்.

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட
விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


 'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.

சிலபகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், ஓ.எம்.ஆர்., படிவம் மற்றும் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்ற விபரங்கள் கொண்ட புத்தகம் கடந்தாண்டுக்கு உரியவை.வயது தகுதியாக, 'டிச.,31, 2017ன்படி 17 வயது பூர்த்தியானவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் மாணவர் பிறந்த தேதியை குறிப்பிட கட்டங்களை கறுப்பு நிறத்தில் நிரப்பும்போதும் ஆண்டு குறிப்பிடும் இடத்தில், 2000 மற்றும் அதற்கு மேல் பிறந்தவர் ஆண்டை குறிப்பிட முடியவில்லை. 1999 வரை பிறந்தவர் மட்டுமே குறிப்பிடும் வகையில் கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. '2', '0' ஆகிய எண்களை குறிப்பிட வழி இல்லை.
அதேபோல், விண்ணப்பத்தில் 10 இலக்கம் கொண்ட பதிவு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், படிவத்தில் 'ரெஜிஸ்டர்/ரோல் நம்பர்' என குறிப்பிட்டு எட்டு இலக்கம் எழுதுவதற்கு மட்டும் இடம் உள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு மருத்துவ படிப்பு, மாணவர்களுக்கு கடும் சோதனையாக மாறிவிட்டது. 'நீட்' தேர்வு குறித்த தமிழக அரசு நிலைப்பாட்டால் கடைசி வரை குழப்பம் தான் ஏற்பட்டது. கணினி நடைமுறை மூலம் தான் விண்ணப்பம் ஏற்கப்படும்.

அப்போது ஓ.எம்.ஆர்., படிவத்தில் சிறு பிழை இருந்தாலும் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பிரச்னை குறித்து சுகாதாரத்துறை செயலர் கவனிக்க வேண்டும். சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்களும், தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


 பிளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே, அவர்களின் உயர்கல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறை பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளில், பல மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது. அவர்களது மதிப்பெண் பிழைகளை சரி செய்ய, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

இதில், பிளஸ் 2வுக்கு, 5,000 பேரும், 10ம் வகுப்பில், 2,000 பேரும், பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு சென்னையில் நடந்தது. இதன் முடிவில், பிளஸ் 2வில், 2,070 பேருக்கும், 10ம் வகுப்பில், 821 பேருக்கும், பிழைகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின், அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, திருத்திய விடைத்தாள் வழங்கப்பட்டது.


இந்நிலையில், விடை திருத்தத்தில் குளறுபடி செய்த விடை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையிடுவோர், மதிப்பெண் கண்காணிப்பாளர் என, 3,000பேரின் பட்டியல் தயாராகி உள்ளது. இவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பள்ளிக்கல்வி செயலக உத்தரவின் பேரில், ஆசிரியர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அசத்தும் அறிவிப்புகள் - குவியும் கோரிக்கைகள்

இந்தவார நக்கீரன் இதழில் ஜீன் 28-30 பக்கம் 27ல் பகுதிநேர ஆசிரியர்கள் செய்தி வந்துள்ளது.

பி.எட் விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்

தமிழகம் முழுவதும் இரண்டு ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள 1777 இடங்களுக்கான ஒற்றை சாளர முறையிலான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
2017-18 நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப விற்பனை ஜூன் 21ம் தேதி தொடங்கியது. அதில் 5737 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விண்ணப்ப விற்பனை இன்று நிறைவடைகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கைக்காக சமர்பிக்க வேண்டும். இதுதொடர்பான செயல் வழிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போகிறது? ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு

தமிழ்நாட்டில் 584 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான
கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இவர்களுக்கு ரேண்டம் எண்ணும், ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டன.
கலந்தாய்வு கடந்த 27-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொடங்கவில்லை. சில மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் என இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவத்தில் இடம் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் என்ஜினீயரிங் சேருவார்கள். எனவே எப்போதுமே மருத்துவ கலந்தாய்வு தொடங்கிய பின்னர்தான் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்குவது வழக்கம்.

இந்தஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்குகிறது. கடந்த வருடம் மருத்துவ கலந்தாய்வுக்கும், என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கும் இடையே ஒரு வாரம் இடைவெளி இருந்தது. எனவே இந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு, ஜூலை மாதம் 3-வது வாரம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு விரைவில் வருகிறது. என்ஜினீயரிங் கலந்தாய்வு எப்படியும் 28 நாட்களாவது நடக்கும். எனவே என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் தாமதமாக தொடங்கினால் அதற்கான அனுமதியை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில்(ஏ.ஐ.சி.டி.இ.) பெறப்படும். இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிரந்தரம் கேட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள்,
பகுதி நேரமாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 1,380பேர் ராஜினாமா செய்துள்ளனர்; மீதமுள்ள, 15 ஆயிரத்து, 169 பேருக்கு, ஐந்து ஆண்டுகளாக, மாதம், 7,000ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆறுமுதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள், ஓவியம், இசை, கம்ப்யூட்டர் சயின்ஸ், தோட்டக்கலை என, பல்வேறு பாடப்பிரிவுகளில், வகுப்புகள் நடத்துகின்றனர். இவர்களில் பலர், முதுநிலை படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளை முடித்து, பேராசிரியர் பணிக்கும் தகுதியாக உள்ளனர். பலர், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித் தேர்வும் முடித்துள்ளனர். இந்நிலையில், தங்களின் கல்வி தகுதிக்கேற்ப, ஆசிரியர் பணியில் நிரந்தரமாக நியமிக்குமாறு, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அவர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு நடத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஆனால், தற்போது பணி நிரந்தரம் கேட்கும் ஆசிரியர்களை, உடனடியாக இட மாற்றம் செய்யுமாறு, எஸ்.எஸ்.ஏ.,வுக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், 101 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், முதற்கட்டமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள்ளது.

7th PAY COMMISION - ALLOWANCE அதிகரிப்பு - அதிகரிக்கப்படும் ALLOWANCE என்னென்ன?

Image may contain: text

ஆங்கிலவழிக்_கல்வி_வழக்கும்! #அரசுப்பள்ளிக்கு_நேர்ந்த_இழுக்கும்! செல்வ.ரஞ்சித்குமார்

அரசுஉதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கக் கோரிய வழக்கில் உயர் வழக்காடு மன்றத் தீர்ப்பாளர், வாதியின் வாதத்தின் படி அரசுப் பள்ளிகள் & ஆசிரியர்கள் மீது எதிர்மறைக் கேள்விக் எழுப்பியிருந்தார்.
வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் மட்டுமே வழக்கின் கேள்விகளும்,
தீர்ப்புகளும் எழுதப்படும் என்ற நிதர்சனத்தை முதலில் நாம் புரிந்த கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவன் கொலைகாரனே ஆனாலும் சாட்சியம் இல்லை எனில் அவன் குற்றமற்றவனாகவே தீர்க்கப்படுவான். இதனை நீதியளித்ததாக நினைப்பது நமது பிழை. இது தீர்ப்பளிப்பு மட்டுமே.

எனவே, சாட்சியங்களைத் தாண்டி & தவிர்த்து சமுதாய நலனையோ, உண்மையான நீதியையோ தீர்ப்பளிப்பவரே நினைத்தாலும் வழங்க இயலாது என்பதே நமது அமைப்பு முறை.

எனினும், சாட்சியத்தின் படியான தீர்ப்பாளரின் தீர்ப்பு பெற்றுத்தராத நீதியை, உண்மை உணர்ந்து உரிமைக்காக உரத்து குரலெழுப்பும் மக்கள் போராட்டங்கள் பெற்றுத் தந்துள்ளன. இதனடிப்படையில் தீர்ப்பாளரின் கேள்விகளுக்கு அரசின் பதில் எதுவானாலும் அதன் உண்மை நிலையை உணர வேண்டியதும், உணர்த்த வேண்டியதும் கேள்விப் பொருளாக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் கடமை என்பதாலேயே இப்பதிவு.

ஆசிரியரின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை எதன் அடிப்படையில் கட்டாயமாக்க இயலும்? அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை 14 வயது வரை வழங்க வேண்டுமெனக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கொண்டு வந்த பின்னும் 8 வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் 100% இலவசக் கல்வியையோ / 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அரசுடைமை என்பதையோ உறுதி செய்ய இயலாத நிலையில் அரசும், சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய வழக்காடு மன்றங்களும் இருக்கையில், குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டும் அரசுப் பள்ளியில் கட்டாயம் சேர்த்தே ஆகவேண்டும் என்பது எவ்வகையில் சாத்தியமாகும். இப்படியொரு முடிவைக் கல்விக் கூடங்களின் முதலாளிகளான அரசியல்வியாதிகளோ அவர்தம் அன்பர்களோ எடுக்க முன்வருவார்களோ?

கல்வித் தந்தையர்களான கார்ப்ரேட் அரசியல்வியாதி முதல் அப்துல்கலாம் வரை தனியார் பள்ளிகளை மட்டுமே தூக்கிப் பிடிப்பதாலும், உயர் சமூகமாகத் தங்களையும் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற சுய கட்டாயத்தினாலும், அரசுப் பள்ளியில் மதி மட்டுமே வெளிப்படும் என்பதாலும், மனனம் செய்து மதிப்பெண் வாங்கும் மதியீனத்தை மாணவன் பெற்றால் மட்டுமே உயர்கல்வி சாத்தியம் என்பதாலுமே அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் பெற்றோர்கள் தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்.

கல்வியில் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி சமமாக இருக்காது என கவலையுறுவோர் கிராமப்புற மாணவர்களைப் புறக்கணிக்கும் நீட் தேர்வைத் தானே முந்து உடனே தடை செய்திருக்க வேண்டியது தானே. ஆனால், ஊருக்கொரு வினாத்தாள் வடிவமைத்து ஓட்டைச் சல்லடையில் வடிகட்டிய வழக்கில், வடிகட்டியது சிறப்பென முடித்து வைக்கப்பட்டதையும் தீர்ப்பாளர் இதே பார்வையோடு பார்த்து கேள்வி எழுப்பியிருப்பின் நீதியாக இருந்திருக்குமே!

தமிழ் மொழியில் பள்ளிக்கல்வி முடித்த வழக்கறிஞர் வழக்காடு மன்றங்களில் கட்டாயத்தின் பேரில் ஆங்கிலத்தில் மட்டுமே தனது வாதத்தை எடுத்து வைக்க முடிகிறபோது, அவர்களுக்கே போதிக்கும் தமிழ் வழி பயின்ற ஆசிரியரால் ஆங்கில வழியில் கற்பிக்க இயலாதா என்ன? அது ஒருபுறமிருக்க, இவ்வழக்கின் முக்கிய நோக்கமான 'ஆங்கிலவழிக் கல்வி'யை ஏன் தொடங்க வேண்டும்? தாய்மொழி வழிக்கல்வியே மாணவர்களின் அறிவை வளர்க்குமென தாய்மொழியில் பயின்று சாதித்துள்ள ஆட்சியர்கள் முதல் அறிவியல் அறிஞர்கள் வரைத் தொடர்ந்து மேடைதோறும் முழங்கி வருவதையும், அதுதொடர்பான உலக அளவிலான ஆய்வு முடிவுகளையும் தீர்ப்பாளர் புறந்தள்ளியிருப்பினும், நாமாவது இனி கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிராமம் & மலைப்பகுதி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக எதன் அடிப்படையில் கூறுகின்றனரோ? எத்தனை மாணவர்கள் பயில்கின்றனர் என்ற தரவே தெரியாதவர்களுக்கு இந்தத் தரவு மட்டும் எப்படி கிடைத்தது? இதில் கிராமம், மலை, நகரம் என்ற பாகுபாடு பார்ப்பதன் உள்நோக்கம் என்ன? அனைத்துப் பகுதி ஆசிரியர்களிலும் சிலர் வேலை முடிந்தபின் பகுதிநேரத்தொழில் செய்வது உண்மையே. இதற்கு வேதனை தெரிவிக்கும் முன் கல்வியே இங்கு தொழிலாக உள்ளதைப் பற்றிய கவலை தீர்பாளருக்கு வராதது வியப்பாகத்தான் உள்ளது.

கற்பித்தலில் காலம் தவறாமை அவசியமே. ஆனால், அதை மெய்ப்பிக்கக் கொண்வரும் தொழில் நுட்பங்கள் ஆசிரியர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி அதன் பாதிப்பை மாணவர் வழியே தான் அறுவடை செய்ய நேரிடும். ஏனெனில், கற்றலும் கற்பித்தலும் 100% உளவியல்சார் நடைமுறையாகும்.

பள்ளிகளில் செல்லிட பேசிகளுக்குத் தடைவிதிப்பது ஒருபுறமென்றால் தடைவிதிக்கும் அந்த அரசு அமைப்பே தனக்கான தரவுகளைப் பெற அதே செல்லிடபேசிகளை நம்பித்தான் காலம் நகர்த்தி வருகிறது. கற்றல் கற்பித்தலுக்காக இணைய உலகிற்குள் சூட்டிகைப் பேசியுடன் அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் இன்று பெருகி வருவதோடு அதன் காலத்தேவையும் நியாயமானதாகவே உள்ளது.
ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடைவிதிக்கக் கூடாது என்றால், இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் 1926-ன் கீழ் 18 வயது நிரம்பிய தொழில் நிலைய ஊழியர்கள் தங்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள தங்களுக்கான சங்கத்தை அமைத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்நாட்டு குடிமக்களான ஆசிரியர் உட்பட அனைத்துவித தொழிலாளர்களுக்கும் வழங்கியுள்ளது. தடை விதிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல். அரசியலமைப்புக் காவலனாகக் காட்டிக் கொள்ளும் வழக்காடு மன்றத் தீர்பாளரே இக்கேள்வியை எழுப்புவது நியாயமோ?

தீர்ப்பாளரின் கவலையின்படி, ஆசிரியர்கள் கடமைகளைச் செய்யாவிடில் மாணவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதால் தான் தீர்ப்பாளர் 'ஏன் தடைவிதிக்கக் கூடாது' என்று சுட்டிக்காட்டும் ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பை அமைத்து புதிய கல்விக் கொள்கையின் பாதகங்களை எதிர்த்துப் போராடி வருகின்றன.

கல்வியை அரசுடைமையாக்கப் போராட வேண்டிய சூழலில், தொண்டு நிறுவனமே ஆயினும் கல்வியில் அவற்றை அனுமதிக்கக் கூடாது. ஆனால், கல்வியைச் சேவையில் (SERVICE) இருந்து வணிகம் (TRADE) என்ற நிலைக்கு மாற்றிய WTO-GATS ஒப்பந்த உடன்பாட்டிற்கு மத்திய அரசு தலையசைத்துள்ளதை வழிமொழியும் விதத்தில் தான் தீர்ப்பாளர் உட்பட அதிகாரத்திலுள்ள பலரின் பார்வை உள்ளதாகவே தோன்றுகிறது.
இந்நிலை தொடருமாயின் அனைத்து அரசுத் துறைகளையும் தனியார் & தனது சுய இலாபத்திற்காகத் தாரைவார்க்கும் அரசியல்வியாதிகளால், நாளை நாம் ஒரே ஒரு அரசுப் பள்ளியையாவது நிறுவுங்கள் என வாதாட, அது கொள்கை முடிவென தீர்ப்பாக, இறுதியில் மீண்டுமொரு (கார்ப்ரேட் நிறுவனங்களிடம்) விடுதலைக்காகப் போராட வேண்டியிருக்கும்.

*அரசுத்துறையை அழிக்கும் அரசாட்சி*
*குடியரசை மலடாக்கும் அசுராட்சி*
*விழிப்புணர்வால் ஏற்படும் புரட்சி,*
*வீழாது வாழவைக்க அத்தாட்சி*

செல்வ.ரஞ்சித்குமார்

ஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா? உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு அவர்களின் கட்டுரை இந்து தமிழ் நாளிதழில் வந்துள்ளது படியுங்கள்.

JULY 2017-DAIRY

No automatic alt text available.

தமிழ்நாடு பற்றிய 1000 தகவல்கள்

2017-2018-ஆம் கல்வியாண்டின் பள்ளி வேலை நாட்கள் & விடுமுறை விவரம் -Single Page

பிஎஸ்என்எல்-ன் 666 பிளான் அறிமுகம்: அளவற்ற அழைப்பு; தினமும் 2ஜிபி டேட்டா!!

ஜியோவுக்கு எதிரான போட்டியில் ஏற்கனவே களமிறங்கி சக்கைப் போடு போடும்
பிஎஸ்என்எல், தற்போது 666 பிளானை அறிமுகம் செய்துள்ளது.

ப்ரீபெய்ட் திட்டத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரூ.666 திட்டத்தில், எந்தவொரு செல்போன் எண்ணுக்கும் அளவற்ற அழைப்பு மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா வசதியை வழங்குகிறது. அதுவும் இந்த சலுகை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், ரூ.666 திட்டத்தைத் தவிர, ரூ.349, ரூ.333, ரூ.444 என பிற திட்டங்களையும் மாற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கு ஏற்ப, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு சிறந்த திட்டங்களை அறிவித்து வருகிறோம் என்று பிஎஸ்என்எல் வாரிய இயக்குநர் ஆர்.கே. மிட்டல் கூறினார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.786 மற்றும் ரூ.599 என்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதே போல, டேட்டா வசதி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.444 திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் 90 நாட்களுக்கு அளவற்ற டேட்டா வசதி உள்ளது.

துவக்கத்தில் இலவச அழைப்பு,டேட்டா என்ற அறிவிப்போடு அறிமுகமான ஜியோ சிம்களால், உச்சத்தில் இருந்த டேட்டா மற்றும் அழைப்புக் கட்டணங்கள் மளமளவென சரிந்து, போஸ்ட் பெய்டில் ஆயிரம் ரூபாய் என்பதில் இருந்து ரூ.500 முதல் ரூ.600க்குள் அளவற்ற அழைப்பு என்ற வசதி உருவானது.

இதுநாள் வரை சாத்தியமில்லாத ஒன்றாக இருந்த அளவற்ற அழைப்பும், ஒரு நாளைக்கு 1 முதல் 4 ஜிபி டேட்டா என்பதும் இன்று எப்படி சாத்தியமானது, இதுவரை நம்மிடம் இருந்து பெற்ற தொகைக்கு என்ன கணக்கு என்பதும் மக்களின் தொடர் கேள்வியாக உள்ளது

புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்!!!

புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இப்புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் நோட்டு வாபஸ்:

ஊழயை ஒழிக்கும் பொருட்டு ரூ. 500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவ., 8ம் தேதி மத்திய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டது.தொடர்ந்து பண நெருக்கடியை சமாளிக்க, பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.

புதிய ரூ.200:

இந்நிலையில் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கும் நோக்கில், புதிய ரூ.200 நோட்டுகளை அச்சிட முடிவு செய்த ரிசர்வ் வங்கி, அதற்கான பணியை துவக்கியுள்ளது.மேலும் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடனும், கள்ள நோட்டுகள் அச்சிடாதவாறும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் புழக்கத்துக்கு வரும்:

இந்த புதிய ரூபாய் நோட்டுகளின் தர சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ம.பி., மாநிலம் ஹோசங்காபாத்தில் மத்திய அரசு ஆய்வு செய்தது. இதனையடுத்து புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் இடங்களான, கர்நாடக மாநிலம் மைசூரிலும், மேற்குவங்க மாநிலம் சல்போனியிலும் நடைபெற்று வருகிறது விரைவில்இப்புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ படிப்புக்கு 2-வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும்,கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டன.
2-வது நாளாக நேற்றும் விண்ணப்ப வினியோகம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை பதிவிறக்கம் செய்து அனுப்பும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.இந்த ஆண்டு அந்த நடைமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது.

இதனால் நேரடியாக விண்ணப்பங்களை வந்து வாங்குவதற்காக மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. இதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஆன்-லைன் விண்ணப்ப முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் www.tnh-e-a-lth.org என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பத்தைபூர்த்தி செய்து, அதன்பின்னர் அதை பதிவிறக்கம் செய்துஅனுப்பலாம். மருத்துவ படிப்புக்கு முதல் நாளில் 8 ஆயிரத்து 379 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று அரசு கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 597 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆயிரத்து 405 விண்ணப்பங்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 2 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜ் தெரிவித்தார்.வருகிற 7-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் அதிகாரி தகவல்

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

  www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் பாடவாரியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க நிபுணர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது.30-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 821 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி கூறுகையில், “1, 6,9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிறஜனவரி மாதத்துக்குள் தயாராகி விடும். அதன் பின்னர் 2018-19-ம் கல்வி ஆண்டில் இந்த வகுப்புகளுக்கு புதியபாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அதற்காக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளோம்” என்றார்.

40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா?

பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா? எதிர்ப்பார்ப்புகளோடு கணினி ஆசிரியர்கள்.

  தமிழக அரசு ஆதரித்தால்தான் தனியார் பள்ளிகளில் கூட பணிபுரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்கான புதிய வரைமுறையையும், அரசாணையையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும்.தனியார் பள்ளிகளில் கூட கணினி ஆசிரியர்கள் உரிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நீடித்து வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) மூலம் இதுவரை 40 ஆயிரம் பேர் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.இதற்கு காரணம் தமிழக அரசு நடத்தும எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் கூட பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசுதான். மற்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் போன்று கணினி ஆசிரியர்களுக்காக உரிய பணிவரைமுறையை தமிழக அரசு உருவாக்கித் தரவில்லை. அதனால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் வேலைக்கு செல்ல முடியாத அவலநிலைதான் காணப்படுகிறது. கணினி கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து மெத்தன போக்குடன் செயல்பட்டுவருகிறது.தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் என்றால் இளங்கலை பட்டத்துடன், பி.எட் பட்டம் கட்டாயம், முதுகலை ஆசிரியர்கள் என்றால் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் பட்டம் கட்டாயம்.

ஆனால் தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு என முறையான கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு கணினி அறிவியில் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று உரிய பணி வரைமுறைகளையும் அரசாணையையும் உருவாக்கி தந்தால்தான் 40 ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு வாழ்வு கிடைக்கம் என்பதில் ஐயமில்லை.இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கணினிஅறிவியல் பாடம் அரசு பள்ளியில் கட்டாயம். நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பொதுத் தேர்வில் கணினி அறிவியல்பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். தமிழகத்தில் 2011ம் அண்டு 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடப்புத்தகம் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாத நிலையில் உள்ளது.

தற்போது அந்தப் பாடப்புத்தகங்கள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டதாக RTI தகவல் தெரிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனத்தில் குறைந்த கல்வித்தகுதி உடைய (DCA PGDCA other Major) ஆசிரியர்களைக் கொண்டு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளியில் பணிபுரியும் மற்ற பாட ஆசிரியர்களுக்கு அரசு பல ஆண்டு காலமாக பல கோடி ரூபாயை செலவு செய்து பயிற்சி கொடுத்தும் பலன் இல்லை. காலங்கள் மாறி வரும் போது அதற்கேற்ப பாடத்திட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாடங்களுக்கு தகுந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

அந்தந்த பாடங்களுக்குத் தனித்தனியாக பி.எட் பட்டம எதற்காக உருவாக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 40 ஆயிரம் பிஎட் கணினி அறிவியல் ஆசிரியர்களை வேலையின்றி உருவாக்கியுள்ளது. எந்த ஒரு பணிக்கும் தாங்கள் கொடுக்கும் பி.எட் பட்டம் செல்லாக்காசாகத்தான் உள்ளது. தங்களுடைய பி.எட் பட்டத்தினால் தனியார் நிறுவனங்களில் கூட வேலைக்கு செல்ல முடியாத நிலை இன்றளவும் உள்ளது.

இனியாவது தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் முறையான கல்வித் தகுதி பின்பற்ற பட வேண்டும். கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று பணி வரைமுறையை உருவாக்கி அதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும்.

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்
சங்கம் பதிவு எண்:655/2014.

ஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?

                                                          
ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் விதமாக வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.


அதற்கு முக்கியமாகப் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண் போன்றவற்றைக் கையில் வைத்து இருக்க வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது?
எஸ்எம்எஸ் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க ‘UIDPAN space 12 digit Aadhaar Space 10 digit PAN' வடிவத்தில் தகவலை உருவாக்கி 567678 அல்லது 56161 எண்ணிற்கு அனுப்புவதன் மூலமாக எளிதாக இணைத்துவிடலாம்.
  
முக்கியக் குறிப்பு
எஸ்எம்எஸ் மூலமாக இணைக்கும் போது ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயர்கள் இரண்டும் சரியாகப் பொருந்த வேண்டும். இல்லை என்றால் இணைப்புச் செய்ய முடியாது.

இணையதளம்
இணையதளம் மூலமாக ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கப் புதிய இரண்டு இணைப்புகளை வருமான வரி இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  
திருத்தம்
ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தித் திருத்தவும் செய்யலாம்.

   சரிபார்ப்பு
இணைப்பிற்கான படிகளைச் செய்த பிறகு உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் குறுந்தகவலுக்கு Y என்று பதில் அளிப்பதன் மூலம் எளிதாக இணைப்பைச் சரிபார்க்க முடியும்.

மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு.

நீட் அடிப்படையிலான மருத்துவ சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீட்டை வழங்கும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர் தொடுத்த வழக்குக்கு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கை நடைபெற தமிழகத்தில் இந்த ஆண்டு மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதற்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒரு வழியாக தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகின.
  

நீட் தேர்வு முடிவுகளின் தர வரிசை பட்டியலில் ஒரு தமிழக மாணவர் கூட இடம்பெறவில்லை. இந்நிலையில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், சிபிஎஸ்இ திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் வழங்கப்படும் என்றும் கடந்த 22-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

கடந்த 27-ஆம் தேதி முதல் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கின. விண்ணப்பங்களை பெற கடைசி தேதி ஜூலை 7-ஆம் தேதி யாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவ இயக்குநரகத்துக்கு ஜூலை 8-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டு அரசாணையை எதிர்த்து தஞ்சையை சேர்ந்த தார்ணீஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் தமிழக அரசு பிறப்பித்த உள்ஒதுக்கீட்டால் என்னை போன்று நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிபிஎஸ்இ பிரிவு மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில இருந்த எனக்கு இந்த அரசாணையால் இடம் கிடைக்காமல் போய்விடும்.

மேலும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய மட்டும் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாட திட்டம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய அதிகாரம் இல்லை. எனவே தமிழக அரசின் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இதேபோல் குஜராத் மாநிலத்தில் மாநில பாடத்திட்டம் படித்த மாணவர்களுக்கு 60 சதவீதமும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 40 சதவீதம் என்ற அரசாணையை குஜராத் நீதிமன்றம் ரத்து செய்ததை அந்த மாணவர் தனது மனுவில் சுட்டிக் காட்டினார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் தெரிவிக்கையில், அரசு தரப்பு விளக்கம் கேட்காமல் எந்தவித தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

PG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்?

 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 

  இந்த தேர்வானது 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருக்கிறது.தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் செல்ல வேண்டும். தேர்வர்கள் தங்களுடன் கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் ஆளறிச்சான்றிதழ் (ஐடெண்டி கார்டு) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

வேறு எந்த பொருட்களும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் ஒரு பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் அளவு புகைப்படம் எடுத்து செல்ல வேண்டும்.

மேலும் பிற சேர்க்கைப்படிவம் 8-ல் உள்ள படிவத்தினை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றொப்பம் பெற்று எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

110 விதியின் கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி!

சட்டப்பேரவைக் கூட்டத்தில், 110-ம் விதியின்கீழ் எரிசக்தித்துறை, சமூகநலத்துறை, தொழில்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றில், பல்வேறு புதிய திட்டங்களை இன்று அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.


  தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டங்களை அறிவித்தார். எரிசக்தித்துறையில், அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள கணக்கீட்டின்படி
100 யூனிட் வரையிலான மின்சாரம், கட்டணம் இன்றி தொடர்ந்து வழங்கப்படும்.

மேலும், சென்னை பெருநகரின் மின் கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக, கூடுதலாக 31 புதிய  துணை மின் நிலையங்கள்,  இயக்கத்தில் உள்ள 314 உயரழுத்த மின்மாற்றிகளைத் திறன் உயர்த்தும் பணிகள், புதிய 33/11 கிலோ வோல்ட் மின்னூட்டிகள் நிறுவும் பணிகள் மற்றும்  இயக்கத்தில்  உள்ள 33/11  கிலோ வோல்ட் மின்னூட்டிகளை வலுப்படுத்தும் பணிகள் ஆகியன 1,800 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறையைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே மஹாராஷ்ட்ராவை அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி 10 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 20 ஆயிரம் நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், நடைமுறையில் உள்ள 3 சதவிகித இடஒதுக்கீட்டினை, 4 சதவிகிதமாகத் தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்த 4 சதவிகித இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7th Pay Commission - Cabinet approves recommendations of the 7th CPC on allowances - Full Details in (PDF)

BIG NEWS :-மாற்றுத்திறனாளிகள் 50% மானியவிலையில் பெட்ரோல்/டீசல் பெறலாம்.



Flash News:தமிழகத்தில் 7வது ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு