யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/15

TNTET தகுதி தேர்வில் 2013 ஆண்டு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு...

வருகின்ற 01.12.2015 அன்று உண்ணாவிரத கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு
நாள் : 01.12.2015. செவ்வாய்கிழமை ,


இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும்  குறுஞ்செய்திமூலமாகவோ whatsapp  மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்

தொடர்புக்கு:

திருமதி பாரதி : 94426 91704,  திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150,  திரு.பரந்தாமன் : 94432 64239,  திரு.சக்தி : 97512 68580,  திரு.லெனின் ராஜ் : 80125 32233.

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.....

தலைமை ஆசிரியர் மீது, கல்வித் துறை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில், ஒழுங்கீனமாக செயல்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது, கல்வித் துறை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், தென்குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னேகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, பள்ளியை அடிக்கடி பூட்டி செல்வதாகவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தலைமை ஆசிரியரின் செயல்பாடால், தற்போது, 15 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். கடந்த, 17ம் தேதி வந்த மாணவர்கள், பள்ளி பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மற்றொரு ஆசிரியர் விடுமுறையில் இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் வராததால், மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர். தகவலறிந்த, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதி, நேரடியாக பள்ளியில் ஆய்வு நடத்தி, அங்குள்ள மக்களிடம், பிரச்னை குறித்து கேட்டறிந்தார். பின், கஞ்சம்பட்டி பள்ளியிலிருந்து, ஒரு ஆசிரியரை வரவழைத்து, தற்காலிகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ''உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று, அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, காந்திமதி தெரிவித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமியை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி, தெற்கு ஒன்றிய உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசப் கருணாகரன் கூறுகையில், ''பள்ளி தலைமையாசிரியர் ஜெயலட்சுமி, முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்ததுடன், பள்ளியை பூட்டிச் சென்றார்; 'சஸ்பெண்ட்' உத்தரவை, தலைமையாசிரியர் பெற மறுத்ததால், ஊராட்சி நிர்வாகங்கள் முன்னிலையில், பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்பட்டது; அவருக்கு, தபால் மூலமும் சஸ்பெண்ட் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி உதவியாசிரியர் மூலமாக, பள்ளி தொடர்ந்து இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, '' என்றார்.

இதே போல், ஆனைமலை ஒன்றியம், கன்னியம்மன் கோவில் காலனியில் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமையாசிரியர் தர்மராஜ், மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள், இவரை பணியிலிருந்து இடை நீக்கம் செய்தனர்.
பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'தவறு செய்த ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது' என்றனர்.

7 PAY COMMISSION PAY BAND DETAILS


RATIONALISATION APPLIED IN THE PRESENT PAY STRUCTURE

மத்திய அரசில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மத்திய அரசு நிறுவனங்களுக்கான 122 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப். இவை தொழில்நுட்பம் சாராதவை. 
காலியிடங்கள்: 122 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2015 மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை

சென்னை: 'அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வால், தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மீண்டும் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த மழை பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள கன மழை எச்சரிக்கையால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.


வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றுஅழுத்த தாழ்வு மண்டலத்தால், நேற்றுடன் முடிந்த, ஒரு வாரத்தில், சென்னையில் மிக அதிகபட்சமாக, 44 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், 25 மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதல் மழை பெய்தது.சென்னை, கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கிய மழைநீர் நேற்று வரை வடிந்து வருகிறது. இந்நிலையில், அரபிக் கடலில் லட்சத் தீவு அருகே, புதிதாக காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர் மழை:

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலில் உருவான காற்று மேலடுக்கு சுழற்சி இடம் பெயர்ந்து, அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில், லட்சத் தீவு அருகே, புதிய காற்றுஅழுத்த தாழ்வு பகுதியாக, நேற்று காலை உருவாகி உள்ளது. இது தீவிரமடைந்து, கேரளா, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இதனால், நவ., 23 வரை, நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். நாளை முதல், திங்கள்கிழமை வரை, கடலோர பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனவே, இந்த வார இறுதி வரை கடலோர பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததுஅமெரிக்க வானிலை கணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நவ., 25ல், வங்க கடலில், அந்தமான் தீவு பகுதியில் உருவாகும் காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில்கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என தெரிவித்துள்ளது. இதை, இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.எனவே, இம்மாத இறுதி வரை கன மழை தொடரும் என, கணிக்கப்பட்டுள்ளது

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், (primary HM)ஊதியம் எவ்வளவு உயரும்?

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்: (as a primary HM)
*****************************
அடிப்படை ஊதியம்:18,470
தர ஊதியம் : 4500
மொத்தம் : 22970
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 2.57
22970 x  2.57 = 59,033
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 59,033    
அகவிலைப்படி : இல்லை 
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது. ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)
வீட்டு வாடகைப்படி : 1400 x 2 = 2800
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.)
நகர ஈட்டுப்படி : 720   
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.)   
மருத்துவப்படி : 200  
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)
மொத்தம் : 62, 753
*********************************
ஊதியக்குழு அறிக்கைக்கு முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:18,470
தர ஊதியம் : 4500
மொத்தம் : 22970
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி 125% : 28,713
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 1400
நகர ஈட்டுப்படி :360
மருத்துவப்படி : 100
மொத்தம் : 53,543
********************
வித்தியாசம் : 9,210
********************
தோராய ஊதிய உயர்வு : 17%

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளால், இடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் எவ்வளவு உயரும்?
************************************
இடைநிலை ஆசிரியர் ஒருவரின் 01.01.2016 அன்றைய ஊதியம்:
*****************************
அடிப்படை ஊதியம்: 6600
தர ஊதியம் : 2800
மொத்தம் : 9400
*****************************
ஊதிய நிர்ணயம் : a factor of 2.57
9400 x  2.57 = 24,158
******************************
01.01.2016 இல் புதிய ஊதியம்:
*******************************
அடிப்படை ஊதியம் : 24,158    
அகவிலைப்படி : இல்லை 
(ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி இருக்காது.
ஏனெனில், விலைவாசி உயர்வு அடிப்படையில் தான் ஊதியங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே 01.07.2016 முதல் அகவிலைப்படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்)
வீட்டு வாடகைப்படி : 540 x 2 = 1080
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்) - (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%, 20%, 30% என நகரங்களின் நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது)
மருத்துவப்படி : 200  
(மாநில அரசு இரண்டு மடங்காக வழங்கினால்)
மொத்தம் : 25,438
*********************************
ஊதியக்குழு அறிக்கைக்கு முந்தைய ஊதியம் :
அடிப்படை ஊதியம்:6600
தர ஊதியம் : 2800
மொத்தம் : 9400
************************************
01.01.2016 அன்று அகவிலைப்படி 125% : 21,150
(Expect 6% DA hike from 01.01.2016)
வீட்டு வாடகைப்படி : 540
மருத்துவப்படி : 100
மொத்தம் : 21,790
********************
வித்தியாசம் :3,648
********************
தோராய ஊதிய உயர்வு : 14%

7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளின் முக்கிய அம்சங்கள்

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். இதில், சம்பளம் 16 சதவீதமும், இதர படிகள் 63 சதவீதமும் உயர்த்தப்பட வேண்டும்..

*ஓய்வூதியதாரர்களுக்கு 24 சதவீத ஓய்வூதிய உயர்வு.


*மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீத ஊதிய உயர்வு.குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரம்.

*குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருக்க வேண்டும். தற்போது, ரூ.90 ஆயிரம் சம்பளம் பெற்று வரும் மந்திரிசபை செயலாளர், இனிமேல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்.

*இந்த சிபாரிசுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்.

*பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு. அத்துடன், எப்போதெல்லாம் அகவிலைப்படி 50 சதவீதம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயர வேண்டும்.

*இந்த சம்பள உயர்வால், 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள்ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் பலன் அடைவார்கள்.ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவு 

*சம்பள உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். (இதில், பொது பட்ஜெட்டில் ரூ.73 ஆயிரத்து 650 கோடியும், ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.28 ஆயிரத்து 450 கோடியும் ஏற்றுக் கொள்ளப்படும்.)

*வீட்டுக்கடன் வட்டியுடன் கூடிய வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் கைவிடப்பட வேண்டும்.

*ராணுவத்தினரைப் போலவே, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்.

*ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

*குரூப் இன்சூரன்சு திட்டத்தின் கீழ், மாதாந்திர பிடித்தம் அதிகரிப்பதுடன், காப்பீட்டு தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

*52 படிகள் கைவிடப்பட வேண்டும். மேலும் 36 படிகள், தற்போதைய படிகளுடனோ அல்லது புதிதாக அறிமுகமாகும் படிகளுடனோ இணைக்கப்பட வேண்டும்.

*கிரேடு சம்பளம், ஒட்டுமொத்த சம்பளத்துடன் இணைப்பு.ராணுவ சேவை ஊதியம் 

*ராணுவ பணியின் பல்வேறு அம்சங்களுக்காக இழப்பீடாக வழங்கப்படும் ‘ராணுவ சேவை ஊதியம்’, ராணுவத்தினருக்கு மட்டுமே நீடிக்க வேண்டும். அதன்படி, சர்வீஸ் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்து 500 ஆக உயரும்.நர்சிங் அதிகாரிகளுக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.4 ஆயிரத்து 200–ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 800 ஆக உயரும். போரில் ஈடுபடுத்தப்படாத ராணுவத்தினருக்கான ராணுவ சேவை ஊதியம், ரூ.1,000–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 ஆக உயரும்.

*குறுகிய பணிக்கால அதிகாரிகள், தங்கள் பணிக்காலத்தில் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும்ராணுவத்தை விட்டு வெளியேறலாம்.

இவ்வாறு 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

ஈரோடு: கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்புபட்டியல் வெளியீடு

கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலை ஈரோடுமாவட்ட வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் இன்று வெளியிட்டுள்ள செய்தி:


தமிழகம் முழுவதும் 271 கால்நடை ஆய்வாளர் (பயிற்சி) பணி காலியிடங்கள் உள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் மூலம் மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2014அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட அருந்ததியர், எஸ்சி, எம்பிசி, பிசி, பிசி(முஸ்லீம்) ஆகிய இனத்தவர்கள் 46 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதில் எஸ்சிஏ பிரிவில் உள்ளவர்களில் 27.06.2007 வரை பதிவு செய்துள்ளவர்களும், எஸ்சி பிரிவில் 12.08.1996 வரை பதிவு செய்துள்ளவர்களும், பிசி, எம்பிசியை சேர்ந்தவர்களில் 29.12.1995 வரை பதிவு செய்தவர்களும், பிசி (முஸ்லீம்) பிரிவை சேர்ந்தவர்கள் 20.04.2007 வரை பதிவு செய்தவர்கள் உத்தேச பதிவு மூப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.இதுதவிர முன்னுரிமை உள்ளவர்கள் இன வாரியாக, தேதி வாரியாக பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

அறிவித்துள்ள கல்வி தகுதி உள்ளவர்கள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றுகள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் தற்போதுவரை புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அதன் ஆன்லைன் பிரிண்ட் அவுட் ஆகியவற்றுடன் வரும் நவ.23-ம்தேதி காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சவுதியில் மருத்துவ கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு

சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 50 வயதிற்குட்பட்ட கன்சல்டன்ட்கள்மற்றும் சிறப்பு மருத்துவர்கள் சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் கன்சல்டன்ட் மருத்துவர்களுக்கு ரூ.4,25,000/ முதல் ரூ.5,10,000 வரையிலும், சிறப்பு மருத்துவர்களுக்கு ரூ.2,89,000/ முதல் ரூ.3,91,000/ வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்.மேலும், இலவச விமான டிக்கெட், குடும்ப விசா, இருப்பிடம் மற்றும் சவுதிஅரேபிய அரசின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற ஈ மெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் மற்றும் omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRC: Primary upper primary crc dates announced...

Topic: Remedial Teaching for late Bloomers

Primary CRC

State level
24.11.2015
Dt level
27.11.2015
CRC level
05.12.2015

Upper Primary CRC

State level
25.11.2015
Dt level
30.11.2015
CRC level
12.12.2015

IGNOU:Hall Tickets for December 2015 Term End Examination

520 பொது அறிவு கேள்வி பதில்கள்----தகவல் துளிகள்

Govt school VS Private school---தகவல் துளிகள்,

Heart attack when alone at home---தகவல் துளிகள்

JOBS RELATED GOVERNMENT AND OTHER WEBSITES---தகவல் துளிகள்

Pen drive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்.---தகவல் துளிகள்

TNPSC TET TRB 100 QUESTIONS AND ANSWER

இேதா ஒர கணித விதைத !----தகவல் துளிகள்,

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய ---தகவல் துளிகள்