யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/7/17

உயர்நிலைத் தரம் உயர்வு : விருப்ப அடிப்படையில் வட்டார அளவில் பட்டதாரிகளை ஈர்க்க கோரிக்கை

Flash News:பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 28.07.2017 அன்று இணையதளம் வழியாக நடத்துதல் சார்ந்து - இயக்கநரின் செயல்முறைகள்



Jactto - Geo சார்பில் முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்!!

05.08.2017 CRC ரத்து செய்ய கோரி பள்ளிக்கல்வி துறை செயலாளர் அவர்களுக்கு JACTTO -GEO கடிதம்

தனியார் பள்ளிக்கு நிகராக மாறிய பூம்புகார் அரசு பள்ளி

பூம்புகாரில், கிராம மக்களின் முயற்சியால், அரசு நடுநிலைப் பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக, தரம் உயர்த்தப்பட்டுள்ளது.நாகை மாவட்டம்,
பூம்புகாரில், 1949ல், ஆரம்பிக்கப்பட்ட துவக்க பள்ளி, 2004ல் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அருகில் உள்ள ஊர்களில், தனியார் பள்ளிகள் துவக்கப்பட்டதால், அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைய துவங்கியது. கடந்தாண்டு, மூன்று மாணவர்கள் மட்டுமே, புதிதாக சேர்ந்தனர்.

இதனால், நடுநிலை பள்ளி என்ற அந்தஸ்தை இழக்கும் சூழல் உருவானது. தலைமையாசிரியர் அன்பழகன் முயற்சியில், பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார் சார்பில், கல்விக்குழு உருவாக்கப்பட்டு, பள்ளியின் முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளை போல, யோகா, கராத்தே உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள், ஆங்கிலப் பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறை, சுத்தமான கழிப்பறை, சுற்றுச்சுவர், குழந்தைகளை வீடுகளில் இருந்து அழைத்து வர வாகன வசதி என, கிராம பொது நிதியிலிருந்து, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், பள்ளி நவீனமாக மாற்றி அமைக்கப்பட்டது.அது மட்டுமின்றி, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 4,000 ரூபாய் கல்வி உதவித் தொகை, கிராமம் சார்பில் வழங்கப்படுகிறது.

அரசைமட்டும் நம்பியிராமல், பொதுமக்கள் இணைந்து, மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, இந்தாண்டு, 57 பேராக அதிகரித்து, மொத்த மாணவர்களின்

எண்ணிக்கை, 145 ஆகியுள்ளது.

உடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை : போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

அரசு பள்ளிகளில், விளையாட்டு பிரிவுக்கான உடற்கல்வி பாடத்திட்டம், புத்தகம், சீருடை என, அனைத்தும் புறக்கணிக்கப்படுவதால், வரும், 29ல்,
போராட்டம் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்
அரசுபள்ளிகளின் முன்னேற்றத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், உடற்கல்வி பிரிவுக்கு, எந்தவித முன்னேற்ற பணிகளும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளிலும், உடற்கல்வி பயிற்சி நடக்கும் நாளில், சிறப்பு சீருடை, 'கேன்வாஸ், சாக்ஸ்' அணிய வேண்டும்.

ஆனால், தமிழகத்தில், இலவச சீருடையில், விளையாட்டு பிரிவுக்கு என, தனியாக சீருடை வழங்கவில்லை. அரசு பள்ளிகளில் விளையாட்டு பிரிவுக்கு உபகரணங்கள் வாங்க, நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை, உபகரணம் வாங்க பயன்படுத்துவதில்லை என, பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. விளையாட்டு பிரிவுக்கு தனி இணை இயக்குனர், மாவட்ட அளவில் தலைமை உடற்கல்வி ஆய்வாளர் போன்ற பதவிகள், பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.

மேலும், உடற்கல்விக்கான பாடத்திட்டம் வழங்கி, 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. உடற்கல்விக்கு புத்தகம் தயாரித்தும், அதை வழங்கவில்லை. 6 - 9ம் வகுப்பு வரை, உடற்கல்விக்கு கட்டாய தேர்வு உள்ளது. ஆனால், பாடத்திட்டமும், புத்தகமும் இல்லாமல், தேர்வு நடத்தியது போல், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவதாக, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இந்தகுளறுபடிகளை போக்கவும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளை நிறுத்தாமல் வழங்கவும் கோரி, வரும், 29ல், உடற்கல்வி ஆசிரியர்கள், சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், போராட்டம் நடத்த உள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு?

நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவை, மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.
இதனால், மருத்துவ படிப்புகளில், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85
சதவீதமும், இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு, 15 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை பிறப்பித்தது.இதற்கு சென்னை உயர் நீதிமன்றம்தடை விதித்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், 'நீட்' தேர்வில் விலக்கு கோரும் சட்டத்துக்கு ஒப்புதல் பெற, முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

நிரந்தர விலக்கு அளிக்கும், தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. எனினும், மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசு முன் வந்துஉள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிய தாவது: 'இந்தாண்டு மட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க, சட்டத்தில்வாய்ப் புள்ளதா என, பரிசீலிக்கப்படும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.


இதற்காக, சட்ட நிபுணர்களுடன், தமிழக அதிகாரிகள், ஆலோசித்து வருகின்றனர். அத்துடன், குறைந்தது இரண்டு ஆண்டுகள் விலக்கு பெறும் முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!

படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற
உத்தரவைப் பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும்.
பொறியியல் பட்டம்

"இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது" என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள்.

"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000 கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால் போதும். இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக கவனமும் செலுத்த முடியும்" என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

'பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக உயர்கல்வி துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் 'பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது' என்கிறார்கள் உயர்கல்வி துறையினர்.

இந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் எனத் தெரிகிறிது.பொறியியல் சுனில் பாலிவால்

"இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் தனி அமைப்புகள் நிறுவ ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம்.

இதன்மூலம் துணைவேந்தர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியும். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள் கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்" என்கிறார் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால்.

Posted Date : 21:34 (26/07/2017) Last updated : 21:34 (26/07/2017)
அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!
ஞா. சக்திவேல் முருகன் ஞா. சக்திவேல் முருகன்

படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப் பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும்.

பொறியியல் பட்டம்

"இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது" என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள்.

"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர் தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத் தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000 கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால் போதும். இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக கவனமும் செலுத்த முடியும்" என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்.

'பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக உயர்கல்வி துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் 'பொறியியல் பாடப்பிரிவில் படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது' என்கிறார்கள் உயர்கல்வி துறையினர்.

இந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடப்படும் எனத் தெரிகிறிது.பொறியியல் சுனில் பாலிவால்

"இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் தனி அமைப்புகள் நிறுவ ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம் துணைவேந்தர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியும். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும். மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள் கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்" என்கிறார் உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால்.



இதுவரை பள்ளிக் கல்வித்துறையில் மட்டுமே மாற்றங்கள் குறித்த செய்தியை அறிந்த கல்வியாளர்கள், முதல்முறையாக உயர்கல்வி துறையில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.

கலாம் நினைவகத்திற்குள் என்ன இருக்கிறது

ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல்கலாம் தேசிய நினைவகம், நான்கு புறமும் 50க்கு 50 மீட்டர் அளவில் சதுர வடிவில் அமைந்துள்ளது. நினைவகத்தை சுற்றி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து கொண்டு வரப்பட்ட அழகு செடிகள்,
நிழல் தரும் மரக்கன்றுகள் ஊன்றி அழகுபடுத்தி உள்ளனர்.

நினைவகத்தின் பின்புறத்தில் கலாம் கண்டு பிடித்த அக்னி ஏவுகணை, எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரி வைக்கப்பட்டும், நினைவகத்திற்குள் நான்கு பக்கங்களிலும் மின் ஒளியில் கலாமின் ஓவியங்கள், சிலைகள் உள்ளன. ஒரு மூலையில் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், கலாம் நிற்பது, எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரியை கலாம் அறிமுகப்படுத்துவது, ராணுவ வீரர்கள் அணிவகுப்பை கலாம் ஏற்பது போன்ற தத்ரூபமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.மற்றொரு புறத்தில் கலாம் ஐ.நா., சபையில் பேசுவது, ஜனாதிபதி மாளிகையில் கலாம் நிற்பது, குழந்தைகளிடம் கலாம் கைகொடுத்து சிரித்து பேசுவது போல் ஓவியங்களை தத்ரூபமாக வரைந்துள்ளனர்.

95 ஓவிய படங்கள் : கலாம் குழந்தை பருவம் முதல் ஜனாதிபதி வரை பல முகபாவனையுடன் கூடிய 95 ஓவியம் 4 முதல் 15 அடி உயரமும், ஜனாதிபதியாக கலாம் அமர்ந்திருப்பது போல் சிலிக்கானில் உருவான கலாம் சிலையும் உள்ளது.


மேலும் கலாமின் 700 புகைப்படங்கள் உள்ளன. கலாம் சமாதி முன் சுவரில் 15 அடி உயரத்தில் சிறுவயதில் கலாம் பேப்பர் விற்பது, கோயில், கடற்கரை, படகுகள் நிறைந்த அழகிய ஓவியம் இடம் பெற்றுள்ளது. நினைவகம் மேற்கூரையில் புகழ் பெற்ற ராஜஸ்தான் ஓவியம் வரைந்து, கலாம் நினைவகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நீ.. நீயாக இரு...! இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் - வாழ்க்கை வரலாறு

Image result for apj abdul kalam thoughts in tamilஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும்
அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

பிறப்பு: அக்டோபர் 15, 1931

மரணம்: ஜூலை 27, 2015

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

��இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:   

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம்ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:   

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.


 விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2020எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.


உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தொடக்கக்கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துக்கொள்வது தொடர்பாக இயக்குநர் அவர்களின் புதிய அறிவிப்பு

உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்துக்கொள்வதை விரும்பாத நிலை ஏற்படுமானால் அந்த ஒன்றியத்தில் உள்ள மற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் அவர்களை
ஈர்த்துக்கொள்ள  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் உத்தரவினை அனுப்பியுள்ளார்கள். ஒரு பணியிடத்திற்கு பலர் விரும்பினால் பணிமூப்பு அடிப்படையில் பணியில் மூத்தோரை ஈர்த்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள்.

Syllabus of Special Teachers

பிஇ படிப்பில் இந்தாண்டு புதிய பாடத்திட்டம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வி மன்றக்குழுக் கூட்டம், உயர்கல்வித்துறை செயலர் சுனில்பாலிவால் தலைமையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது. கல்வி மன்றக் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்த
கூட்டத்தில் 2017-2018ம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் திருத்தி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், முதலாம் ஆண்டு பிஇ படிப்பவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அண்ணா பல்கலைக் கழக கல்வி மன்ற இயக்குநர் மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வருமான கீதா கூறியதாவது:
அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் இளநிலைப் பட்டப் படிப்பில் 41 பிரிவுக்கும், முதுநிலைப் பட்டப் படிப்பில் 57 பாடப்பிரிவுக்கும் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு புதிய பாடத்திட்ட குழு தயாரித்துள்ள புதிய பாடத்திட்டம் இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்டது. மேலும், கலைத் திட்டம், அடிப்படை அறிவியல், பொறியியல் அறிவியல், தொழில் கல்வி தொடர்பான பாடங்கள், தற்போது பிஇ, பிடெக் பட்டப்படிப்புடன் கலை அறிவியல் பிரிவுகளை எடுத்து படிக்கும் மானவர்கள் தொழில்நுட்ப பாடங் களைவிருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம்.
அதேப்போல் பிடெக் படிப்பவர்கள் கலை அறிவியல் பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம். இதனால் மாணவர்களுக்கு வேலைத் திறன் பெற வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண் அளிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு பாடத்தில் தோல்வியுற்றால், அது மதிப்பெண் பட்டியலில் தோல்வி என்று இடம் பெறாது. ஆனால் அவர்கள் தோல்வி அடைந்த அந்த பாடத்தை அடுத்த முறை எழுதும் போது அகமதிப்பீடு மற்றும் எழுத்து தேர்வும் சேர்த்து எழுத வேண்டும். மாணவர்–்கள் படிக்கும் போது இடையில் விட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பட்டப் படிப்பை செமஸ்டர் முறையில் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒருபட்டப் படிப்பை முடிப்பதற்கான காலக் கெடு முடிந்த பிறகும் அடுத்த 3 ஆண்டுக்குள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள 14 செமஸ்டர்கள் கொண்ட படிப்பை அதற்கு பிறகு 3 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். பிற்சேர்க்கை திட்டத்தில்(Lateral Entry) 12 செமஸ்டர்கள் கொண்ட படிப்பில் சேர்வோருக்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்