யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/11/16

பழைய ரூ.500 நோட்டுகளை பயன்படுத்தி டிச.15 வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்.புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு நவ.8-ஆம் தேதி அறிவித்தது.
அதனையடுத்து மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களில் பழைய நோட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மின்கட்டணம், குடிநீர் வரி உள்ளிட்டவற்றுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன.இந்நிலையில் பழைய ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. ஆனால் ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே மாற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிப்பு: எனவே, மின்சார கட்டணத்தையும் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தி டிசம்பர் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது:டிசம்பர் 15-ஆம் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் மின்கட்டணம் வசூலிக்கும் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால் மின் கட்டணத்துக்காக ரூ.1,000 நோட்டுகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பெறப்படாது என்று தெரிவித்தனர்.

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு!!

பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும்வகையில், அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. 
தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார்.இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் மூலம், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறை தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?

வங்கியில் பணம் இல்லை.பெரும்பாலான ஏ.டி.எம்-கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை என்பதே அன்றாட குரலாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. நாட்டில் பெரும்பாலான மக்கள் அன்றையபொழுதை வங்கிகளிலேயே செலவழிக்கத் தொடங்கிவிட்டனர். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும்.நாட்டில் இன்னும் நிலைமை சீரடையவில்லை.
வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அல்லாடி வருகின்றனர்.செல்லாது என்று அறிவித்தநாளில் இருந்து வங்கிகள் நாளுக்கொரு அறிவிப்பும் பொழுதொரு விதிமுறைகளையும் கடைபிடிக்கச் சொல்லி ரிசர்வ் வங்கி கூறி வருகிறது.முதல் நாள் அறிவிப்பை நாளிதழிலோ அல்லது ஊடகங்களிலோ அறிந்து கொள்ளும் பொதுமக்கள் மறுநாள் வங்கி செல்லும்போது வேறு ஒரு புதிய அறிவிப்பு அவர்களை வரவேற்கிறது. அந்த அறிவிப்பு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இதனால் வங்கி ஊழியர்களுடன் பொதுமக்கள்சண்டைபோட்டுக் கொள்கின்றனர். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் இல்லாத நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து கூட அத்தியாவசியச் செலவுகளுக்குப் பணம் எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். அன்றாடம் மாறும் ஆர்.பி.ஐ-யின் புதிய உத்தரவுகளால் திணறுகின்றனர். வங்கிகளுக்குச் செல்வதற்கு முன்  சில தகவல்களையாவது தெரிந்துகொண்டு சென்றால் ஓரளவு குழப்பத்தில் இருந்து தப்பிக்கலாம். வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் இன்று முதல் தெரிந்துகொள்ளவேண்டிய10 விஷயங்கள் என்ன?

 1. 25.11.2016  முதல் வங்கிகளில் 500 ரூபாய் 1000ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது.

2. அடுத்த மாதம்  டிசம்பர் 30-ம் தேதி வரை தங்களுடைய வங்கி கணக்குகளில் தங்களிடம் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம்.

3. ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கமுடியும்.

4. ஒரு முறைக்கு 24 ஆயிரம் ரூபாய் எடுத்தால் அதற்கு அடுத்த வாரம் தான் உங்கள் கணக்கில் இருந்து நீங்கள் பணம் எடுக்க முடியும்

5. ஏ.டி.எம்-களில் 2000 ரூபாய் மட்டுமே ஒரு நாளைக்கு எடுக்க முடியும்.

6. பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், பால் விற்பனையகங்கள், ரயில் முன்பதிவு மையங்கள் மற்றும் அரசு சேவைகளுக்குப் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் நவம்பர் 14 -ம் தேதி வரை ஏற்பார்கள். 1000 ரூபாய் தாள்களை எங்குமே செலுத்த முடியாது. வங்கிக் கணக்கில்மட்டுமே போட முடியும்

7.வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டுப் பணத்தை வாரத்துக்கு 5 ஆயிரம் என்கிற நிலையில் மாற்றிக் கொள்ளலாம் . வெளிநாட்டவர்கள் பணம் மாற்றும் போது அவர்களது விவரம் அவர்களுடைய பாஸ்போர்ட் தகவலுடன் பதிவு செய்யப்படுகிறது.

8. 2000 ரூபாய் தாளில் வெள்ளைப் பகுதியில் எழுதப்பட்டால் சொல்லாது என்ற தகவல் உண்மையல்ல.

9. உங்கள் கணக்கில் இருந்து  ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதிக்க மறுத்தால் அது குறித்து நீங்கள் ரிசர்வ் வங்கிக்குப்புகார் தெரிவிக்கலாம்.

10.புதிதாக வந்துள்ள 500 ரூபாய் தாளில் சில தவறுகள்உள்ளது என்றும், எனினும் அது செல்லும் என்றும் வங்கிகள் தரப்பில் கூறுகின்றனர்.   அதேபோன்று வாடிக்கையாளர்கள்  தங்களுக்குச் சொந்தமான பணத்தை மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தலாம். சந்தேகம் ஏற்பட்டால் வங்கி ஊழியர்கள் பணத்தை ஏற்க மாட்டார்கள்.

இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுவருமானவரித்துறை விசாரணை நடத்தும்.

730 BT/PG POST NOV- 2016 PAY AUTHORIZATION ORDER



பணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ஏழைகளுக்கு மானியத்துடன் 'ஸ்மார்ட் போன்'

பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் நோக்கில், 'சர்காரி' என்ற பெயரில், 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்த, 'ஆப்'பை பயன்படுத்த, மானிய விலையில், ஏழைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கவும், அரசு திட்டமிட்டு உள்ளது.


'பழைய ரூபாய் நோட்டு செல்லாது' என, 8ம் தேதி, மத்திய அரசு அறிவித்தது. இதனால், பணப்புழக்கம் குறைந்து, அன்றாட செலவுக்கே மக்கள் தவிக்கும் சூழல் நிலவுகிறது. எனினும், 'டெபிட் கார்டு' அல்லது 'மொபைல் போன்' மூலம் பணம் செலுத்தும் வசதியுள்ளோர், தங்கள் தேவைக்கு அதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும், பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, மத்திய அரசு முனைந்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, பெட்ரோல் பங்க்குகள், பால் விற் பனை நிலையங் கள், கல்வி நிறுவனங்கள், ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள் என, அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும் வகை யில், 'சர்காரி' என்ற பெயரில், மின்னணு முறை யில் பணம் செலுத்தும், 'மொபைல் ஆப்' உருவாக்கப்படுகிறது.

அதன் மூலம், சிறிய தேவைகளுக்கு கூட, கையில் பணமின்றி, மின்னணு முறையில் பணம் செலுத்த முடியும். இதை பயன்படுத்த, 'ஸ்மார்ட் மொபைல் போன்' தேவை; எனவே,
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, மானிய விலையில் ஸ்மார்ட் மொபைல் போன் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையும், நிதியமைச்சகமும் இணைந்து நட
வடிக்கை எடுத்து வருகின்றன. இதுபற்றிய அறிவிப்புகள்,விரைவில் வெளியாகலாம் என, தெரிகிறது.

டாக்டர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு : அமைச்சர் தகவல்

தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும் ஜனவரியில் நடைபெறும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 
புதுக்கோட்டையில், 249 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவக் கல்லுாரி கட்டடம் கட்டப் பட்டு வருகிறது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்தாண்டு, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதலை பெற்று திறக்கப்படும். வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது.
தமிழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்களின் பணியிடங்கள், அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.உடன் இருந்த, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு, மத்திய குழு, ஐந்து இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளது. இந்த இடங்களில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில், மத்திய சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாக, தமிழக அரசிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

8ம் வகுப்பு தனி தேர்வருக்குஜன., 4ல் தேர்வு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, ஜன., 4ல், பொதுத் தேர்வு துவங்குகிறது.எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, 2017 ஜன., 4 முதல், 9 வரை, பொதுத் தேர்வு நடக்க உள்ளது; 8ம் தேதி விடுமுறை. 
இதன் விபரங்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

ஆதார்' விபரம் பதியாதவர்கள் ரேஷன் கார்டு ரத்து?

ரேஷனில், 'ஆதார்' எண் பதியாதவர்களின், ரேஷன் கார்டை ரத்து செய்வதாக வெளியான தகவலை, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. 
அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' எண், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு
செய்யப்படுகின்றன. ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற அலைபேசி , 'ஆப்' மூலமும், அந்த விபரங்களை பதியலாம்.ஆனால், பலர், ஆதார் விபரத்தை பதிவு செய்யாமல், அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது.இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், ஆதார் எண் பதியாத, 1,500 ரேஷன் கார்டுகளை, மாவட்ட உணவு துறை அதிகாரிகள் ரத்து செய்தாக, தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை, உணவு வழங்கல் உயரதிகாரிகள் மறுத்தனர்.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில், பலர், ஆதார் விபரம் பதிவு செய்யாமல் இருப்பதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது உண்மை; அதற்காக, ஆதார் பதியாத ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதாக வெளியாகும் தகவலை, மக்கள் நம்ப வேண்டாம்.
டிச., முதல், ஆதார் பதிவு செய்யாத வீடுகளில், அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை கண்டறிய உள்ளனர். எனவே, இதுவரை ஆதார் பதியாமல் உள்ளவர்கள், விரைவில், அந்த விபரத்தை வழங்கினால், விரைவாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


எத்தனை பேர் (கோடியில்)
ரேஷன் கார்டில் உள்ள

உறுப்பினர்கள் - 7.72
ஆதார் பதிவு
செய்தவர்கள் - 5.27
ஆதார் பதியாதவர்கள் - 2.45
அலைபேசி எண்
பதிவு செய்தவர்கள் - 1.68 

செவ்வாயில் தண்ணீர் 'நாசா' கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழல் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் பணியில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம்(நாசா) தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்து வரும் தகவல்களை ஆய்வு செய்கிறது.
இந்நிலையில், செவ்வாயில் உடோபியா பிளனிசியா பகுதியில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் தடிமனில் மணல் ஈரப்பகுதி உள்ளதாகவும், அது 12,100 கன கி.மீ., பரப்பளவுக்கு உள்ளதாகவும் 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பரப்பளவு அமெரிக்காவின் சுப்பீரியர் ஏரியின் பரப்பளவை விட பெரியது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் செவ்வாய் ஆராய்ச்சிக்கென 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியுள்ளது.

AEEO., அலுவலகங்களில் ஆசிரியர் - அதிகாரிகள் மோதல்

தொடக்க பள்ளிகளில், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், பாடம் நடத்தாமலும், 'ஓபி' அடிப்பதாக, புகார்கள் உள்ளன. பள்ளிக்கு வராத நாட்களிலும், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, முழு ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.
அதனால், ஆசிரியர்களின் பணப்பலன், ஊக்க ஊதிய நிலுவை தொகை போன்றவற்றை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், உடனடியாக அனுமதிப்பதில்லை. சில ஏ.இ.இ.ஓ.,க்கள், தாங்கள் ஆசிரியராக இருந்த போது, எந்த
சங்கத்தில் இருந்தனரோ, அதற்கு சாதகமாக செயல்படுவதும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற விவகாரத்தால், கோவை - சூலுார், புதுக்கோட்டை, அரிமளம், விராலிமலை, பொன்னமராவதி, காங்கேயம் ஆகிய இடங்களில், ஏ.இ.இ.ஓ., அலுவலக பணியாளர்களை, ஆசிரியர் சங்கத்தினர் சிறை பிடித்து, போராட்டம் நடத்தியுள்ளனர். கோவையில் இந்த பிரச்னைக்காக, இரண்டு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுஉள்ளனர். மற்ற மாவட்டங்களில், உயரதிகாரிகளின் விசாரணைக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர், ராஜேந்திர பிரசாத் மற்றும் பொதுச் செயலர், சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:
நிர்வாக பணிகளில், ஏ.இ.இ.ஓ.,க் களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அதை சமாளிக்க முடியாத ஆசிரியர்கள் சிலர், பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
அதனால், அலுவலக ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பிரச்னைக்கு, அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

சம்பளத்தைரொக்கமாக வழங்க முடிவு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சம்பளத்தில், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக வழங்க, சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், நாட்டில் பண புழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், மூன்று மற்றும் நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சம்பளத்தில், 10ஆயிரம் ரூபாய் மட்டும், ரொக்கமாக வழங்க, முதல்வர் உத்தரவிட்டார்.

DSR - Image Format



ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை

ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாட்டில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருவள்ளூர் மாவட்ட மாநாடு, பொன்னேரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் நடந்த மாநாட்டில், கதிரவன் முன்னிலை வகித்தார்.

பொன்னேரி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து, மாநாட்டு அரங்கம் வரை நடந்த ஆசிரியர்கள் பேரணியை முன்னாள் மாநில தலைவர் இளங்கோ துவக்கி வைத்தார். திருவள்ளூர் தொகுதி எம்.பி., வேணுகோபால், பொன்னேரி எம்.எல்.ஏ., பலராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர்.

மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆறாவது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை களைய வேண்டும்; புதிய கல்வி கொள்கையை தேவையான மாற்றங்களுடன் அமல்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை

மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதல், தினசரி தேர்வு நடக்கிறது.

வகுப்பு நேரத்தில், பாடவாரியாக தேர்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது. வினாத்தாள் தயாரிக்கும் பணிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் வாயிலாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின், 'இ-மெயில்' முகவரிக்கு, வினாத்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில், வினாத்தாள் பள்ளிக்கு வந்ததால், அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்க, போதிய நிதியில்லை என, ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
வினாத்தாள் அச்சடிப்பு குறித்து, தகவல் இல்லாததால், கல்வித்துறை அதிகாரிகளும் மவுனம் சாதித்தனர். இந்நிலையில், கடந்த, 21 ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து, உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


10 கேள்விகள்
இதில், 'சி.சி.இ., எனும் தினசரி கற்றல் திறனாய்வு தேர்வு வினாத்தாளை, ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டாம். வினாக்களை கரும்பலகையில் எழுதி போட்டு, மாணவர்களின் நோட்டில் விடை எழுதுமாறு அறிவுறுத்தி, மதிப்பிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.
இந்த வினாத்தாளில், பாடவாரி யாக, 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒரே வரியில் சிந்தித்து விடையளிக்கும் படியாக, கேள்விகள் இருப்பதால், பெரும் ஆதரவை பெற்றது. இதற்கு, மாணவர்களுக்கு பிரத்யேக வினாத் தாள் வழங்காமல், கரும்பலகை யில் எழுதி போட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துவதில் நிறைய சிக்கல் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களின் புரிதலுக்காக, வண்ணங்கள் அறிதலுக்கான கேள்விகள் உள்ளன.
இதை, கரும்பலகையில் எழுதி அறிவது சிரமம். மேலும், பொருத்துதல், இணையற்ற படங்களை கண்டறிய, ஓவியம் வரைய வேண்டியுள்ளது. இதை மாணவர்களும், நோட்டில் வரைந்து விடையளிக்க வேண்டும்.
ஓய்வு நேரம் இல்லை
தேர்வு நடத்த, 10 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. தினசரி விடைகளை திருத்தி, மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, செயல்வழி கற்றல் அட்டைகளை நிரப்புவதால், அதிக எழுத்துப்பணியால் திண்டாடுகிறோம்.
இதில், திறனாய்வு தேர்வை நடத்தி, மதிப்பாய்வு செய்தால், ஓய்வு நேரம் கிடைக்க வழியில்லை. இதற்கு பதிலாக, வினாத்தாளிலே விடையளிக்கும் படியாக தேர்வுத்தாள் வடிவமைத்து, பள்ளிகளுக்கு வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிப்பாடல்கள்