யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/17

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை... சாம்சங் நிறுவனத்துடன் கைகோத்த எடப்பாடி அரசு!-- அஷ்வினி சிவலிங்கம்

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் பள்ளிக் கல்வித்
துறை திட்டங்களைப் பற்றிய அறிவிப்பை ஜூன் மாதம் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HitechLabs) ஏற்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தில் அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் அறிவிப்பைத் தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சாம்சங் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி 20 மேல்நிலை பள்ளிகள் மற்றும் 8 நடுநிலை பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் முதன்முறையாக யோகா ஆசிரியர் தகுதித் தேர்வு-ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறுகிறது.

உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு

ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்:



அரசு ஊழியர்களும்ஆசிரியர்களும்ஒன்றிணைந்திருக்கும்இம்மாபெரும் வரலாற்றைநாங்கள் மெய்சிலிர்ப்போடுபார்க்கிறோம்.

மிக நம்பிக்கையாகஉணர்கிறோம்.


அரசின் கவனம் இப்போதே ஜாக்டோ ஜியோ-  வைநோக்கி திரும்பி இருக்கிறது.



அரசு இதையும் அலட்சியம்காட்டினால்

தமிழ்நாட்டின் அரசுஅலுவல்கள்ஒட்டுமொத்தமாய்முடங்கிப்போய் தமிழ்நாடேஅல்லோலகல்லோலப்படவிருக்கிறது.

இதுவெல்லாம் ஜாக்டோஜியோ- வின் கடந்த காலசாதனைகளை வைத்துநிச்சயம் நடக்கும் எனநம்பலாம். இம்மாபெரும் அமைப்பான.

ஜாக்டோ ஜியோமுத்தாய்ப்பான மூன்றுகோரிக்கைகளை முன்வைக்கிறது.


1) பழைய பென்ஷனைஅமல்படுத்த வேண்டும்.


2) உடனடியாக ஏழாவதுஊதிய குழுவைஅமல்படுத்துவது

( தமிழ்கத்தில் எட்டாவது)


3) 20 சதவீதம் இடைக்காலநிவாரணம்


அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் அடிப்படைவாழ்வாதாரத் தேவைகளாககருதி

இம்மூன்றுகோரிக்கைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்துமுன் வைத்திருக்கிறது.

இந்த முத்தாய்ப்புகோரிக்கைகளுக்கு மிகப்பெரிய சலியூட்டை
 ஜாக்டோ- ஜியோ விற்கு ஆசிரியர்கள் சார்பாகவைக்கிறோம்.

இன்னுமொருகோரிக்கையை மிக சங்கடத்தோடு  மன்றாடிகெஞ்சி ஜாக்டோஜியோவிடம் கேட்கிறோம்.


இம்மூன்று கோரிக்கைகளை அரசு உறுதி செய்தி விட்டால்தயவுசெய்து

இடைநிலை ஆசிரியர்கள் 8ஆண்டுகளாக புலம்பிக்கொண்டிருக்கும் ஒரேகோரிக்கையான ஊதியமுரண்பாடு கலைதல் ( 2006 பிறகான இடைநிலைஆசிரியர்களுக்கு மாதம் 13000 இழப்பு)

என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்..


* ஆசிரியர்கள் என்றும் நன்றி மறவாமல் இருப்போம்..*




நம்பிக்கையோடும்ஏக்கத்தோடும் இடைநிலைஆசிரியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சலுகை தொகை ரத்து: மத்திய அரசு அதிரடி!!!

புதுடெல்லி: குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும்

சலுகைப்படியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நிதி ஆணையத்தின் 7வது ஊதிய அறிக்கையை ஆய்வு செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை திருத்தி அமைப்பதற்காக நிதித்துறை செயலாளர் அசோக் லவசா தலைமையில் சலுகைகள் கமிட்டியை (சிஓஏ) அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேற்படி  கமிட்டியினர், 196 சலுகைகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ல் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதில், மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த ‘அளவான, குடும்பம், திட்டமிட்ட குடும்பம்’ எனும் மத்திய அரசின் கொள்கை நிறைவேறி இருப்பதால், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகையை ரத்து செய்து விடலாம் எனவும் சிஓஏ பரிந்துரை செய்திருந்தது. சிஓஏ பரிந்துரைகள் மீது விவாதங்கள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஜூன் மாதம் 28ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. 6ம் தேதி அன்று அரசு முறைப்படியான அறிவிக்கை வெளியானது. அறிவிக்கைப்படி, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு, பணி அந்தஸ்துக்கு ஏற்றபடி வழங்கப்பட்டு வந்த ரூ.210 முதல் ரூ.1,000 வரையிலான சலுகை ரத்து செய்யப்படுகிறது.

கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறை!!!

தற்போதைய நடைமுறையில் மாநிலங்கள் ஒவ்வொன்றும் கீழ்க்கோர்ட்டு
களுக்கான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகளுக்கு அளித்து உள்ளன.

இந்த நிலையில் மத்திய நீதித்துறை கடந்த ஏப்ரல் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், கீழ்க்கோர்ட்டுகளுக்கு மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை என்ற புதிய நடைமுறை மூலம் நீதிபதிகளை நியமிப்பது பற்றி உத்தேசித்து வருவதாக கடிதம் அனுப்பியது.

இந்த கடிதம் கிடைத்ததும் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து, இதை ஒரு வழக்காக பதிவு செய்து, இது குறித்து விசாரிப்பதற்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை நியமித்தது.
கடந்த மே 9–ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின் போது, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு கோரி அனைத்து மாநில அரசுகள் மற்றும் ஐகோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதுவரை 3 மாநிலங்கள் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், 21 ஐகோர்ட்டுகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.
காஷ்மீர், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டுகள் சிறிது கால அவகாசம் கோரி உள்ளதாக தெரிவித்த அவர், குஜராத், கேரளா, ஆந்திர பிரதேச ஐகோர்ட்டுகள் இந்த யோசனைக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். இந்த ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் இது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், மையப்படுத்தப்பட்ட இந்த புதிய நடைமுறையை அறிமுகம் செய்யும் நோக்கில் மட்டுமே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும், கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மாநிலங்களில் தற்போது உள்ள வழிமுறைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும், இட ஒதுக்கீடு தொடர்பான கொள்கையிலும் தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
வருங்காலங்களில் கீழ்க்கோர்ட்டுகளில் நீதிபதிகளின் நியமனம் சீரான முறையில் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கே மையப்படுத்தப்பட்ட தேர்வு நடைமுறையை அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றும் அப்போது அவர்கள் கூறினார்கள்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 28–ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

மத்திய அரசு ஊழியர்களின் சிறப்பு படி ரத்தாகிறது!!!

மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற
சிறப்பு படிகளை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று, இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையில், அவர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு படிகள் குறித்தும் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. இதில், படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த பரிந்துரைகளில் சில ஏற்கப்பட்டுள்ளன; சில நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கேபினட் செயலர் மற்றும் அதற்கு இணையான அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும், 10 ஆயிரம் ரூபாய் கேளிக்கை படியை நிறுத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அரசு ஊழியர்களுக்கு தற்போது சிறப்பு படி வழங்கப்படுகிறது; இதை ரத்து செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பிட்ட துறை ஊழியர்களுக்கு மட்டும், முடி திருத்தம் செய்வதற்கான படி நீட்டிக்கப்படும். அதே போல், அரசின் முக்கிய ரகசிய ஆவணங்களை கையாளும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு படி, இனி வழங்கப்படாது. ரயில்வே மற்றும் தபால் ஊழியர்களுக்கு, மாதம், 90 ரூபாய் சைக்கிள் படி வழங்கப்படுகிறது. இதை நிறுத்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. அந்த படி, இனி, மாதம், 180 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இது போல், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், 196 படிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் சில நீக்கப்பட்டுள்ளன; சில படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

இலவச சாப்பாட்டுக்கு ஆசைப்பட்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோதனை

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, இலவச உணவுக்கு ஆசைப்ப
ட்டு, பர்கர் சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுடன், திரவ உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு, ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள ஒரு உணவகம், 'சில்லி பர்கர்' எனப்படும், மிளகாய் பர்கரை சாப்பிடும் போட்டியை நடத்தியது. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு, அடுத்த ஒரு மாதத்திற்கு இலவச உணவு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.இந்தப் போட்டியில், டில்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கவுரவ் குப்தா, அதிக பர்கர்களை சாப்பிட்டு வெற்றி பெற்றார். அடுத்த நாள், கவுரவ், ரத்த வாந்தி எடுத்ததால், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர் தீப் கோயல், அதிக காரம் காரணமாக, வயிற்றின் உட்புறச் சுவர் கிழிந்து இருப்பதாகவும், கிழிந்த பகுதியை உடனே அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து, கவுரவின் வயிற்றில் கிழிந்த பகுதிகள் அகற்றப்பட்டன. தொடர் சிகிச்சையுடன், திரவ உணவு மட்டும் எடுத்துக் கொள்ளும்படி டாக்டர் அறிவுறுத்தினார்

ஆர்.டி.ஐ.,யில் தவறான தகவல் : 5 கிலோ 'பேப்பர் வேஸ்ட்

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல்,


தவறான ஆவணங்களை அனுப்பி, ஐந்து கிலோ பேப்பரை, உணவு பாதுகாப்புத்துறை வீணாக்கி உள்ளது. சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் காசிமயன். இவர், 2016 ஜூலையில், உணவு பாதுகாப்பு துறையில், ஏழு தகவல்கள் கேட்டிருந்தார். அவர் அனுப்பிய கடிதம், பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு, சமீபத்தில் அவருக்கு பதில் வந்துள்ளது. அதில், மூன்று கேள்விகளுக்கு மட்டுமே பதில் தரப்பட்டுள்ளது. மற்ற நான்கு கேள்விகளுக்கு, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, துறைகளுக்கிடையில் நடந்த கடித பரிமாற்றங்களின் நகல்களை அனுப்பி உள்ளனர். நகல்களின் எடை, ஐந்து கிலோ. மனுதாரரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை, ஐந்து கிலோ பேப்பரை வீணடித்ததுடன், பொது மக்களின் பணத்தையும் விரயம் செய்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் இந்த அலட்சிய போக்கு, ஆர்.டி.ஐ., ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

கொசு மருந்து அடிச்சு வெகு நாளாச்சு... எங்கெங்கு காணினும் டெங்கு; யாருக்கு பெரும் பங்கு? கோவையில் பலி எண்ணிக்கை ஏழாச்சு

கோவையில் 'டெங்கு' வேகமாகப் பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை 
மேற்கொள்வதில், அரசுத்துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதே, முக்கியக் காரணமாகவுள்ளது. பொறுப்புகளை அதிகாரிகள் தட்டிக் கழிப்பதால், மாவட்டத்தில் 'டெங்கு' பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.பருவமழைக் காலங்களில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், நோய்கள் பாதிப்பு வருவது வழக்கம்; கடந்த சில ஆண்டுகளாக, தென்மேற்கு பருவமழை காலத்தில், 'டெங்கு' பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்த ஆண்டில், ஜூன் 3ல் பருவமழை துவங்கியது. கோவை மாவட்டத்தில், நகர்ப்பகுதியில் பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லாவிட்டாலும், புறநகரில் ஆங்காங்கே விட்டு, விட்டுப் பெய்கிறது.காலங்காத்தாலே கடி!மாநகரம் முழுவதும், காலை மற்றும் மாலை நேரங்களில், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இரவில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் சீரான வெப்பநிலை பதிவாகிறது. மாறுபட்ட பருவநிலை காணப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், உடல் நல பாதிப்புக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது. அதையும் விட, இந்த சீதோஷ்ண நிலையால், கொசுக்கள் உற்பத்தி, பல மடங்கு பெருகியுள்ளது.குறிப்பாக, 'டெங்கு' பரப்பும் 'டைகர்' கொசுக்கள், நகரில் லட்சக்கணக்கில் உற்பத்தியாகியுள்ளன. முன்பெல்லாம், காலை 11:00 மணியிலிருந்து மாலை 3:00 மணிக்குள் மட்டுமே, வலம் வரும் இந்த கொசுக்கள், சமீபகாலமாக காலையிலேயே வீடுகளுக்குள் படையெடுத்து விடுகின்றன. கலெக்டர் பங்களாவும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகமும் உள்ள பந்தயச்சாலையில், கொசுத்தொல்லை அதிகம்.குடிநீர் வினியோகம், மாதமிருமுறை, மூன்று முறை என குறைந்துள்ளதால், பெரும்பாலான வீடுகளில் குடிநீரை தொட்டிகளில் சேமித்து வைத்து, பயன்படுத்துகின்றனர். இதுவே, கொசுக்கள் உற்பத்தியாக, முக்கிய காரணமாகி உள்ளது. மாவட்டத்தில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், 'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்; இப்போதும் ஏராளமானோர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.நடப்பாண்டில் இதுவரை, ஏழு பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி, ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். கொசு மருந்து அடிப்பது, விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வதில், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை; சுகாதாரத் துறை சுத்தமாக முடங்கிக் கிடப்பதாகத் தெரிகிறது. நகரில், கொசு மருந்து அடித்தே, பல மாதங்களாகி விட்டது.களப்பணியே அவசியம்!'டெங்கு' பாதிப்பு, மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது; கமிஷனர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். துணை கமிஷனர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.கொசுப்புழு ஒழிப்பு, மருந்து அடிப்பது, தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பழைய பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளுடன், டெங்கு பாதித்த இடங்களில் கல்லுாரி மாணவ, மாணவியரை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்கள், வணிக, வளாகங்கள், குடியிருப்புகளில், கொசு உற்பத்தி காரணிகள் இருக்கிறதா என தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.தொட்டிகளில் தண்ணீரை அகற்றி, 'பிளீச்சிங்' பவுடரால் சுத்தம் செய்ய வேண்டும். அதிகமான தண்ணீர் இருந்தால், ஆயில் பால் அல்லது மீன் குஞ்சு விட வேண்டும். கொசுப்புழு உருவாகாமல் தடுக்க, 'அபேட்' மருந்து ஊற்ற வேண்டும். கொசுப்புகை மருந்து அடிக்க வேண்டும். பணிகளில் சுணக்கம் காட்டினாலோ அல்லது டெங்கு பாதிப்பு இருந்தாலோ, சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டது.'டெங்கு' ஒழிப்பு பற்றி, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்ததுடன், களம் இறங்கிப்பணியாற்றினால் பாராட்டலாம்; இதேபோல, மாவட்ட நிர்வாகம், மற்ற உள்ளாட்சி அமைப்புகளையும், சுகாதாரத்துறையையும் ஒருங்கிணைத்து, 'டெங்கு' தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம். இதைச் செய்யாதபட்சத்தில், இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அதிகாரிகள் பொறுப்பு ஏற்காமல் இருக்கலாம்; அரசு பொறுப்பேற்றே தீர வேண்டும்

நம்பிக்கை ஓட்டெடுப்பு வழக்கு: ஆக.,9க்கு ஒத்திவைப்பு

புதுடில்லி:முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு வழக்கு ஆகஸ்ட் 
9க்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், சுப்ரீம் கோர்ட்டிற்கு சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மாபா.பாண்டியராஜன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சட்ட உதவி வழங்குமாறு அட்டர்னி ஜெனரலை சுப்ரீம் கோர்ட் கேட்டு கொண்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியலமைப்பு சட்டத்தின், 212வது பிரிவின் கீழ், சட்டசபை தொடர்பான விவகாரத்தில் கோர்ட் தலையிடக்கூடாது என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சட்ட உதவி செய்ய மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நியமிக்கப்பட்டார். அவர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கு ஆகஸ்ட் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் !

தமிழக அரசு இயந்திரமே ஸ்தம்பித்து கிடக்கிறது. எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாம
,துரு பிடிச்சு கிடக்கு" என்ற விமர்சனம் அனைத்து கட்சிகளாலும் முன் வைக்கப்படுகிறது. ஆனால்,அவர்களே கூட மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு தமிழக அரசின் ஒரே ஒரு துறை மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. அது பள்ளிக் கல்வித்துறை. பல்வேறு அதிரடி,முன்மாதிரி திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து, பள்ளிக் கல்வித்துறை வண்டியை முன்னேற்ற பாதையில் உருள வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம்,அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையனும்,அந்த துறையின் செயலாளர் ப.உதயச்சந்திரனும்தான்.
உதயச்சந்திரனின் அட்ராசக்கை ரக திட்டங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பேதும் சொல்லாமல்,ஒ.கே சொல்ல, அந்த துறையில் பல அதிரடி மாற்றங்கள் கடைப்பரப்பப்படுகிறது.
இதோ, அடுத்ததாக தமிழக அளவில் உள்ள மூவாயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, தன்னார்வத்தில் தமிழகம் முழுக்க ஸ்பான்ஸ்கர்கள் மூலமாக நிதி திரட்டி அத்தகைய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும், 25 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை நேற்று தலைமைச் செயலகத்திற்கு அழைத்த ப,உதயச்சந்திரனை வைத்து தமிழ்நாடு முழுக்க மூவாயிரம் அரசு பள்ளிகளை ரெஃபர் பண்ண சொல்லி அறிவுறுத்தி, அனுப்பி இருக்கிறார்.
'ப.உதயசந்திரன், தலைமை ஆசிரியர்கள்' சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்று வந்த நமக்கு தெரிந்த தலைமை ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம்.
"கடந்த வாரமே தமிழ்நாடு முழுக்க தன்னார்வத்தில் தங்கள் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களை சிறப்பாக செய்து வரும் 25 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை 8 ம் தேதி சென்னைக்கு வர சொல்லி சர்க்குலர் வந்தது. நாங்களும் ஆர்வமா நேற்று போனோம். அப்போது, எங்க ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து,பாராட்டிய ப,உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்,'உங்க செயல்பாடுகள் உண்மையில் போற்றத்தக்கது. அரசு செய்ய வேண்டிய பணிகளை நீங்களே செய்வதற்கு,உங்களுக்கு இயல்பிலேயே பெரிய அர்ப்பணிப்பு திறன் இருக்க வேண்டும். அந்தத் திறன் உங்களுக்கு அமைந்ததை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் தனிபட்ட முறையில் உங்கள் பள்ளிகளில் செயல்படுத்திய ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் ஏற்பாட்டை இப்போது அரசே செய்யப் போகிறது. தமிழகம் முழுக்க மூவாயிரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முதல்கட்டமா அமைக்க போறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட இருக்கு. உங்களை அழைத்ததற்கு காரணம், உங்க மூலமாகதான் அந்த மூவாயிரம் பள்ளிகளை செலக்ட் செய்ய போறோம்.
அதாவது, அரசு இவ்வளவு செலவு பண்ணி ஸ்மார்ட் கிளாஸ்ரூம்கள் அமைத்து கொடுத்தாலும், அதை பயன்படுத்தாமல் பல பள்ளிகளில் வீணடித்துவிட கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அதோடு, பல பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கும் அளவிற்கு அடிப்படை கட்டமைப்பும் இருக்காது. நாங்களே தமிழகம் முழுக்க போய் மூவாயிரம் பள்ளிகளை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்படகூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதோடு,எங்கள் துறையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பள்ளிகள் தேர்வு செய்யும் விசயத்தில் விருப்பு வெறுப்போடு செயல்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அதனால், உண்மையான அக்கறையோடு கல்வி போதிக்கும் விசயத்தில் செயல்படும் உங்க மூலமா அந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்க மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும், கல்வி போதிப்பதில் அர்ப்பணிப்போடு செயல்படும், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அற்ற மூவாயிரம் பள்ளிகளை தேர்ந்தெடுத்து பதினைந்து நாள்களுக்குள் எனக்கு தெரிவியுங்கள். அரசு பள்ளிகளை நாம் அனைவரும் சேர்ந்து அடுத்த லெவலுக்கு கொண்டு போவோம்'ன்னு சொல்ல,எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கலை. 'கண்டிப்பா தேர்ந்தெடுத்து சொல்றோம் சார். எங்களுக்கு ஸ்பான்ஸர்ஸ் கிடைச்சதால, எங்களால் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்க முடிஞ்சது. ஆனால், எங்களை போலவே ஆர்வமா செயல்பட மனமிருந்தும் நிதியுதவி கிடைக்காமல் பல பள்ளி ஆசிரியர்கள் தமிழகம் முழுக்க கைகளை பிசைஞ்சுகிட்டு நிற்கிறாங்க சார். அவங்களுக்கு இப்படி அரசே ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைச்சு கொடுத்தா, தங்கள் பள்ளியை சிறப்பாக்குவாங்க சார். தகுதியான பள்ளிகளை தேர்ந்தெடுத்து சொல்றோம் சார்' என்று சொல்லிவிட்டு வந்தோம்" என்றார்கள்.
இதுசம்மந்தமான, பிராசஸ் நடந்த திட்ட அப்ரூவலுக்காக அரசின் பார்வைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் ஒ.கே செய்தால், தமிழகம் முழுக்க மூவாயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்பட்ட

உலகின் மிகச்சிறிய குட்டி நாடு - மக்கள் தொகை 11 பேர்

உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய


ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா.

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான்.

ராஜாவின் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர். சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.

180வது நிறுவன தினத்தை கொண்டாடும் தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால் அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாக தோன்றலாம். ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்.

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.

உலகின் எந்தவொரு நாடும் தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர். உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.

தவலோராவின் அரசர் கேட்கிறார் "சிறிய நாடாக இருந்தாலும், எங்கள் முன் விரிந்திருக்கும் மிகப்பெரிய கடல் சாம்ராஜ்ஜியத்தின் கோட்டையாக தவோலாரா திகழ்கிறது. இதைவிடப் பெரிய பேறு வேறென்ன இருக்கமுடியும்?"

''படிப்பது 4 பேர்; பணியாற்றுவதோ 5 பேர்'

தமிழக அரசு கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் இக்காலத்தில்


அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதால் அரசு நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் நகரில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் 4 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில் அவர்களுக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என மூவர் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழக அரசு தற்போது கல்வித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறது.
மேலும், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகளவில் இருக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரக்கோணம் வட்டாரத்தில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. மேலும், பல பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கையே இல்லாத நிலையும் காணப்படுகிறது.
அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையில் எம்எல்ஏ அலுவலகத்துக்கு பின்புறம் நகராட்சித் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த காலங்களில் ஆலமரப் பள்ளி என அப்பகுதி பொதுமக்களால் அழைக்கப்பட்ட இப்பள்ளியில் அதிகபட்சமாக 250 மாணவர்கள் படித்த காலமும் உண்டு. 36, 35, 34 ஆகிய வார்டுகள், வெங்கடேசபுரம், சாயிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொடக்க நிலை மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், இப்பள்ளியில் தற்போது 4 மாணவர்கள் மட்டுமே படிக்கும் அவலநிலை உள்ளது.
இப்பள்ளிக்கென இரு வகுப்பறைகள் கொண்ட மூன்று கட்டடங்கள் இருந்தன. தற்போது தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்காக இரு கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள ஒரு கட்டடத்தின் ஒரு வகுப்பறையில் நகராட்சித் தொடக்கப் பள்ளியும் மற்றொரு அறையில் நகராட்சி உருது பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நகராட்சித் தொடக்கப் பள்ளியில் வருகை பதிவேட்டில் 1 முதல் 5 வரை 10 மாணவர்கள் படிப்பதாகத் தெரிவித்திருந்தாலும் பள்ளிக்கு தினமும் வருவது 4 மாணவர்கள் மட்டுமே. இவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இரு ஆசிரியர்களும், சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர் என மூன்று பேரும் என 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளியில் நூற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் 1 முதல் 8- ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை 50- க்கு மேல் உள்ளது. ஆனால் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுவது ஏன்? என்ற சந்தேகம் உள்ளது.
இதுகுறித்து நகராட்சித் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராஜிடம் கேட்டபோது, இப்பள்ளிக்கென 34, 35, 36 என 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் இருக்கும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை இதே வார்டில் உள்ள பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும் என அரசாணையே உள்ளது. ஆனால், அதையும் மீறி மற்ற வார்டுகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த 3 வார்டுகளில் மாணவர்கள் இருந்தும் இப்பள்ளியில் சேராமல் இருப்பதற்கு நாங்கள் காரணமல்ல என்றார்.
இதுகுறித்து அரக்கோணம் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பால்ராஜிடம் கேட்டபோது, அரக்கோணம் வட்டாரத்தில் கடந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5,327 மாணவர்கள் படித்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 5,071 மாணவர்களே உள்ளனர்.
மாணவர் எண்ணிக்கை மற்றும் மாணவர் சேர்க்கை தற்போது பல பள்ளிகளில் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. மேலும் பல ஆங்கிலப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன.
குறிப்பிட்ட அரசு நகராட்சி பள்ளிக்கு அருகிலேயே ஆதிதிராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளி இருப்பதால் மாணவர்கள் இரு இடத்தில் சேர்க்கப்படுகின்றனர். இதனாலேயே நகராட்சித் தொடக்கப் பள்ளியில் சேர்க்கை குறைவாக இருக்கிறது. சேர்க்கை முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அருகருகே இரு பள்ளிகள் இருப்பதே சேர்க்கை குறைவுக்கு காரணம் என கல்வி அலுவலர் தெரிவிக்கையில், கல்வித் துறை உடனடி நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

தண் தணா தண் பேக் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைகளை தொடர என்ன செய்ய வேண்டும் !!

ரிலையன்ஸ் ஜியோ தண் தணா தண் சலுகை இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜியோ தண் தணா தண் சலுகைகளை மாற்றியமைத்து புதிய விலையை ஜியோ அறிவித்துள்ளது*

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகள் டிராய் அறிவுறுத்தலின் படி ஜியோ திரும்பப் பெற்றது. எனினும் வாடிக்கையாளர்களுக்கு தண் தணா தண் எனும் சலுகையை அறிவித்தது. தண் தணா தண் சலுகையின் கீழ் வழங்கப்பட்ட 84 நாள் வேலிடிட்டி இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.


ஏப்ரல் மாதம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட தண் தணா தண் சலுகைகள் ரூ.309-க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தண் தணா தண் பேக் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைகளை தொடர மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

அதன்படி ரூ.309 விலையில் தண் தணா தண் சலுகையில் 84-நாள் வேலிடிட்டி வழங்கப்பட்டது, இதன் வேலிடிட்டி 56-நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் விலை ரூ.399-ஆக மாற்றப்பட்டுள்ளது.


தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ரூ.509 திட்டத்தின் வேலிடிட்டி 84-நாட்களில் இருந்து 56-நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு அதிக டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.149 மற்றும் இதர துவக்க திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் வேலிடிட்டி மற்றும் டேட்டா நீட்டிக்கப்பட்டுள்ளது.

 ரூ.399 திட்டத்தில் மூன்று மாதங்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

 இவை அனைத்திற்கும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
நன்றி..மாலைமலா்

பள்ளி முதல்வர் அறையாக மாறிய கழிப்பறை!!!

ம.பி., மாநிலத்தில், அரசு உயர்நிலை பள்ளி கழிப்பறையில், பள்ளி முதல்வர் 
அறை செயல்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

300 பேர் படிக்கும் பள்ளி

ம.பி., மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. சியோனி மாவட்டம், கான்சோர் தாலுகா, பஹாரி கிராமத்தில், அரசு உயர் நிலை பள்ளி உள்ளது. இங்கு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் 300 பேர் படிக்கின்றனர். இந்த பள்ளியின் மாணவர்கள் கழிப்பறையில் தான் பள்ளி முதல்வர் அறை செயல்படுகிறது. மாணவர்கள் சிறுநீர் கழிக்க, பள்ளிக்கு வெளியே சென்று திறந்த வெளி பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். சியோன் மாவட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை இணை அமைச்சர் பாகன் சிங் குலஸ்தேவின் மாண்ட்லா லோக்சபா தொகுதிக்குள் உள்ளது.

பள்ளி முதல்வர் பேட்டி

இதுகுறித்து பள்ளி முதல்வர் மணிஷ் மிஸ்ரா கூறியதாவது:ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கு தலா இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. ஆனால், மூன்று வகுப்பறைகள் தான் உள்ளன. எனவே, பள்ளி முதல்வர் அறையை வகுப்பறையாக மாற்றி விட்டோம். அத்துடன் ஆய்வு கூடத்தில் தான் நூலகமும், ஆசிரியர்கள் ஓய்வறையும் செயல்படுகின்றன. போதிய இட வசதி இல்லாததால் தான் மாணவர்கள் கழிப்பறையை எனது அறையாக பயன்படுத்தி வருகிறேன். எனினும், மாணவியருக்கு தனி கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளி முதல்வர் கூறினார்.

மத்திய அமைச்சர் கோபம்

இப்பிரச்னை குறித்து மத்திய இணை அமைச்சர் குலஸ்தேயிடம் கேட்ட போது,'' பள்ளி முதல்வர் தான் இப்பிரச்னையை முறையாக கையாண்டு இருக்க வேண்டும். அவர் ஒரு முட்டாள் நபர். அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்

இன்ஜி., கல்லூரிகளில் யோகா கட்டாய

நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், யோகா
, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.எஸ்., - என்.சி.சி.,

இன்ஜினியரிங் கல்லூரிகளில் முன்பு, என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., மற்றும் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுடன் பழகும் உன்னத் பாரத் அபியான்

போன்ற செயல்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால், பட்டம் பெறுவதற்கு இவை கட்டாயம் என்ற நிலை இல்லை. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் கட்டுப்பாட்டின் கீழ் 10 ஆயிரம் இன்ஜி கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 18 லட்சம் மாணவ,மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் இனி, யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

வேற்றுகிரகவாசிகள் நடமாட்டம் அச்சம் காரணமாக கிராம மக்கள் வீட்டில் முடக்கம்!!

கர்நாடக மாநிலம் அன்டுர் கிராமத்தில்  ஒரு விவசாயப் பண்ணைக்கு
அருகே திறந்தவெளியில், சுமார் 20-30 பெரிய கால் தடங்கள் இருந்ததைப் பார்த்த கிராமத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இதுவரை இதுபோன்ற கால்தடத்தைப் பார்த்ததில்லை என்றும், எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை என்றும் கூறினர். அது வேற்றுகிரகவாசிகளின் காலதடங்களாக இருக்கலாம் என அச்சம் அடைந்து உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில், ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூற, அந்த சமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும், பிறகு எல்லாமே ஒன்று போல அமைதியாக இருந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

இது பற்றி செய்தி பரவியதால், பல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கால்தடங்களைப் பார்த்துச் செல்கின்றனர்.

கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், இந்த கால்தடங்கள் எந்த உயிரினத்தின் கால்தடங்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்

இதுபோன்ற பீதி பரவுவது இந்த குடகு மாவட்டத்தில் இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் “நாளே பா” என்ற பீதி எழுந்தது. அப்போது மோகினி பேய் அச்சம் காரணமாக, ஏராளமான கிராமத்தினர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கினர். பிறகுதான், அப்பகுதியில் மாபியாக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதும், அவர்கள்தான் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இதுபோன்ற பீதியைக் கிளப்பியதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம்: அமெரிக்க நிறுவனம் ஒப்புதல்

இந்திய
, 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததை, அமெரிக்க நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இப்பிரச்னை குறித்து விசாரிக்கப்படும் என நகாய் அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையமான, 'நகாய்' அதிகாரிகளுக்கு

கோவா மாநில பணிகள்

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில், சி.டி.எம்., ஸ்மித் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், கோவா மாநிலத்தில், 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, நெடுஞ்சாலை அமைப்பு, ஆய்வு பணி மேற்கொள்வது, குடிநீர் திட்டம் மேற்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெற, நகாய் அதிகாரிக்கு 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க நிதித்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு விசாரித்தது. அப்போது லஞ்சம் கொடுத்ததை சி.டி.எம்., ஸ்மித் நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும், இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளில் முறைகேடாக ஒப்பந்தங்கள் பெற்று லாபம் ஈட்டியதில், 25 கோடி ரூபாயை அமெரிக்க கருவூலத்தில் செலுத்தவும் அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்த பிரச்னை குறித்து விசாரித்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகாய் தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு விற்பனை செய்யலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பி
றப்பித்த அறிவிப்புக்கு, தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய, உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

கால்நடைச் சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து கடந்த மே 23 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த எஸ்.செல்வகோமதி மற்றும் பி.ஆஷிக் இலாஹி பாவா ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இரு வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இதே போல இறைச்சிக் கூடங்களின் உரிமையாளர்கள்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும்  மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர்  தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மனுதாரர்கள் சார்பில் காங்கிரஸின் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகினர்  

அப்பொழுது வேணுகோபால் நீதிமன்றத்தில், 'மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கனவே தடை விதித்த விட்டது. எனவே புதிதாக எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களுக்கு ஏற்ப இந்த அறிவிப்பில் நிறைய மாறுதல்களை செய்து, புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த வாதத்தினை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான் அமர்வானது, உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, வழக்கினை முடித்து வைத்தும் உத்தரவிட்டது

மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு!!!

ஜூலை 17 ல் நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நிறுத்தி வைக்க 
சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, ஜூலை 17 ல் மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது. தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் தற்பாதைய நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது

வேலை உங்களுக்குதான்... மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் வேலை

எஸ்எஸ்ஏ என்ற சர்வசிக்க்ஷா அபியான் திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற 
கொள்கையின் கீழ் ஆரம்பிக்கபட்ட பள்ளிகளில் லோயர் பிரைமரி ஸ்கூல், அப்பர் பிரைமரி ஸ்கூல் பிரைமரி டீச்சர்கள் பணியிடங்கள் என 7 ஆயிரத்து 42 துணை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஆசிரியர்

தகுதி: எஸ்எஸ்ஏ திட்டதின் கீழ் ஆசிரியப்பணி பெற உயர்நிலை வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், இளநிலை பட்டம், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 43க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 200. மற்ற பிரிவினருக்கு ரூபாய் 150 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான முழுமையான விவரங்கள் அறிய http://www.ssaassam.gov.in/AdvertisementAsstteacherJuly2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

அரசை அசைக்க ஜாக்டோ ,ஜீயோ போராட்ட அறிவிப்பு ,அரசு செவிமடுக்கவில்லையென்றால் காலவரையற்ற போராட்டம் !!

முத்தான மூன்று கோரிக்கை..*
                                      

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுக..
ஏழாவது ஊதியக்குழுவை அமூல்படுத்து..
இடைக்கால நிவாரணம் 20%வழங்கிடுக..

*13ம்தேதி மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம்..*


*18ஆம் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்பாட்டம்..*

*ஆகஸ்ட் 5ல் கோட்டை நோக்கி பேரணி..*

*ஜாக்டோ-ஜியோ கூட்டறிக்கை...

பள்ளிப் பைகளின் எடையைக் குறைக்க புதிய திட்டம் - ஜாவடேகர்!!

அடுத்த கல்வி ஆண்டிலிருந்து புதிய மென்பொருள் ஒன்றுடன் ஒரு திரையிடல் கருவி
மற்றும் டிஜிட்டல் பலகை ஒன்றையும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கும் திட்டம் அமலாகும்; இதன் மூலம் பள்ளி மாணவர்களின் புத்தகப்பைகளின் சுமையும் குறையும் என்றார்.

மத்திய பிரதேசத்தில் 20 ஹை-டெக் பள்ளிகளை திறந்து வைத்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

”நாடு முழுதும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 15 லட்சம் பள்ளிகளில் 26 கோடி மாணவர்களுக்கு 70 லட்சம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். இம்மாணவர்களில் 10 கோடி பேர் மதிய உணவு திட்டத்தில் இணைந்துள்ளனர்” என்றார் அமைச்சர்

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது தமிழக அரசு!!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக 
சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும் என்று சமீபத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.

இந்நிலையில் அரசு மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
தமிழக அரசும், சாம்சங் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் 20 மேல்நிலைப்பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது