யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/17

பள்ளி முதல்வர் அறையாக மாறிய கழிப்பறை!!!

ம.பி., மாநிலத்தில், அரசு உயர்நிலை பள்ளி கழிப்பறையில், பள்ளி முதல்வர் 
அறை செயல்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

300 பேர் படிக்கும் பள்ளி

ம.பி., மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. சியோனி மாவட்டம், கான்சோர் தாலுகா, பஹாரி கிராமத்தில், அரசு உயர் நிலை பள்ளி உள்ளது. இங்கு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் 300 பேர் படிக்கின்றனர். இந்த பள்ளியின் மாணவர்கள் கழிப்பறையில் தான் பள்ளி முதல்வர் அறை செயல்படுகிறது. மாணவர்கள் சிறுநீர் கழிக்க, பள்ளிக்கு வெளியே சென்று திறந்த வெளி பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். சியோன் மாவட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை இணை அமைச்சர் பாகன் சிங் குலஸ்தேவின் மாண்ட்லா லோக்சபா தொகுதிக்குள் உள்ளது.

பள்ளி முதல்வர் பேட்டி

இதுகுறித்து பள்ளி முதல்வர் மணிஷ் மிஸ்ரா கூறியதாவது:ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கு தலா இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. ஆனால், மூன்று வகுப்பறைகள் தான் உள்ளன. எனவே, பள்ளி முதல்வர் அறையை வகுப்பறையாக மாற்றி விட்டோம். அத்துடன் ஆய்வு கூடத்தில் தான் நூலகமும், ஆசிரியர்கள் ஓய்வறையும் செயல்படுகின்றன. போதிய இட வசதி இல்லாததால் தான் மாணவர்கள் கழிப்பறையை எனது அறையாக பயன்படுத்தி வருகிறேன். எனினும், மாணவியருக்கு தனி கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளி முதல்வர் கூறினார்.

மத்திய அமைச்சர் கோபம்

இப்பிரச்னை குறித்து மத்திய இணை அமைச்சர் குலஸ்தேயிடம் கேட்ட போது,'' பள்ளி முதல்வர் தான் இப்பிரச்னையை முறையாக கையாண்டு இருக்க வேண்டும். அவர் ஒரு முட்டாள் நபர். அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக