யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/8/18

பொய் தகவல்களை தடுக்க 'வாட்ஸ் ஆப்'க்கு உத்தரவு

பொய் தகவல்கள் பரப்புவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து,
 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது,'' என, மத்திய தகவல் 
தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர், எஸ்.எஸ். அலுவாலியா கூறினார். 
பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான, அலுவாலியா 

கூறியதாவது: சமூக வலைதளங்களில், மக்கள் பதிவிடும் தகவல்களை 
கட்டுப்படுத்த, அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. எனினும், 
வன்முறை, கலவரத்தை துாண்டும் வகையிலும், பயங்கரவாதத்தை 
ஆதரிக்கும் வகையிலும் வெளியிடப்படும் தகவல்கள் மீது, சட்டப்படி 
நடவடிக்கை எடுக்கப்படும். பொய் தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க
 எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் 
கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், வாட்ஸ் 
ஆப்பில், ஒரு தகவலை, ஐந்து பேருக்கு மேல் அனுப்ப முடியாது என, அந்த 
நிறுவனம், சமீபத்தில் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு, நேற்று 
முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசாணை எண்:166 நாள்:07.08.2018-தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டு தற்காலிக அங்கீகாரம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
தற்காலிக அங்கீகாரத்தை 31.05.2019-ம் ஆண்டு வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் சம்மந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் வாங்க வேண்டும். அந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ளவேண்டும். தொடக்க கல்வித்துறைக்கு கீழே இருக்க கூடிய ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளாக இருந்தால் சம்மந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் பெறவேண்டும். உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகளாக இருந்தால் தனியார் பள்ளி இயக்குநரிடம் அங்கீகாரம் வாங்க வேண்டும். 

ஆனால் தமிழகம் முழுவதும் கட்டிட அங்கீகாரம் வாங்காத 5000 பள்ளிகள் இயங்கி வருகிறது. குறிப்பாக மெட்ரிகுலேஷன் இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 2000 பள்ளிகள், தொடக்க கல்வித்துறைக்கு கீழே உள்ள 2000 பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1000 பள்ளிகள் என 5000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவருகிறது. இந்த பள்ளிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இலவசம் மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் கீழ் எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இல்லாமல் இயங்க கூடாது. அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது சட்டத்திற்கு எதிராது. மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு 5000 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.