யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/10/15

விவிஐபிக்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: வி.வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கப்படும்வரவேற்பு நிகழ்ச்சியில்மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாதுஎன உயர்நீதிமன்றமதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த விஜயகுமார்என்பவர் உயர்நீதிமன்றமதுரை கிளையில்மனு ஒன்றைதாக்கல் செய்திருந்தார். அதில், ''மதுரைகாமராஜ் பல்கலைக்கழகத்தில்துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரதுபணி நியமனம்செயல்லாது எனஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்குஉச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டுஜூலை 7ஆம்தேதி பல்கலைக்கழகவளாகத்தில் கல்யாணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காகபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபள்ளிகளில் படித்து வரும் 50 மாணவர்களை வெளியிலில்காத்திருந்து, கல்யாணி வந்ததும், அவர் மீதுமலர் தூவிவரவேற்பு அளிக்கவைத்தனர்.
இந்த செயல் குழந்தைகளின்உரிமைகளுக்கு எதிரானது. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்துபள்ளிகளிலும் படித்து வரும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பொது நிகழ்ச்சிகள்மற்றும் வி.வி.ஐ.பி.க்கள்வரவேற்பில் பங்கத்தடை விதிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறைசெயலாளருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(13ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள்ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர்கொண்ட அமர்வு, ''பொது நிகழ்ச்சிகள்மற்றும் வி.வி.ஐ.பி.க்கள்வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாதுஎன தனதுகட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவேண்டும்'' என மதுரை முதன்மைக் கல்விஅலுவலருக்கு உத்தரவிட்டனர். மேலும், அந்த நகலைநாளை (14ஆம்தேதி) நீதிமன்றத்தில்சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் உள்ளபள்ளி மேலாண்மைக்குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள்அவற்றுக்குத் தீர்வு காண
வேண்டும் என, இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட விதிகளில்திருத்தம் செய்துமத்திய அரசுஅறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஆசிரியர்களின் புகார்களுக்குமுன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்கவேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட விதிகளில், பள்ளி அளவிலானகுறைபாடுகளைக் களைய பள்ளி மேலாண்மைக் குழுக்களைஅமைக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் தங்களது குறைகளை இந்தக் குழுக்களில்தெரிவிக்க வேண்டும். வட்டார, மாவட்ட, மாநில அளவிலானகுறைதீர் குழுக்களையும்மாநில அரசுஅமைக்க வேண்டும்என விதிகளில்பொதுவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஒவ்வொருகுழுக்களும் எத்தனை நாள்களில் புகார்களுக்கு தீர்வுகாண வேண்டும், இந்தக் குழுக்களில்யார் இடம்பெறவேண்டும் உள்ளிட்டவைதொடர்பாக மத்தியஅரசு இந்தச்சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
அதேநேரத்தில், பணி தொடர்பானவிவகாரங்கள், கல்வித் துறையால் தாற்காலிகப் பணியிடைநீக்கம், ஒழுங்குநடவடிக்கைக்கு ஆளான விவகாரங்களை இந்தக் குழுக்கள்விசாரிக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகமத்திய அரசுவெளியிட்டுள்ள அறிவிப்பாணையின் விவரம்: பள்ளி மேலாண்மைக்குழுக்கள் பள்ளிகள்அளவிலான முதல்குறைதீர் அமைப்பாகசெயல்படும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களதுபுகார்களை இந்தக்குழுவின் அமைப்பாளர்அல்லது உறுப்பினர்செயலரிடம் தெரிவிக்கவேண்டும். ஆசிரியர்களிடமிருந்துஎழுத்துப்பூர்வமாக புகார் பெறப்பட்ட15 நாள்களுக்குள் அதற்குத் தீர்வு காண வேண்டும். இந்தப் புகார்மீது நடவடிக்கைஇல்லையென்றாலோ அல்லது அதற்கான பதில் திருப்தியளிக்கவில்லைஎன்றாலோ வட்டாரஅளவிலான குறைதீர்குழுவிடம் ஆசிரியர்கள்புகார் தெரிவிக்கலாம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்குறைகளைத் தீர்ப்பதற்காகவட்டார வளர்ச்சிஅலுவலர் தலைமையிலானவட்டார குறைதீர்குழு அமைக்கப்படவேண்டும். வட்டாரகல்வி அதிகாரிஇந்தக் குழுவின்அமைப்பாளர் அல்லது உறுப்பினர் செயலராகச் செயல்படுவார். புகார் பெற்ற30 நாள்களுக்குள் இந்தக் குழு அதற்குத் தீர்வுகாண வேண்டும். இந்தக் குழுதேவையின் அடிப்படையில்கூட வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். மாவட்ட அளவிலானகுழு: மாவட்டஅளவிலான குறைதீர்குழுவின் தலைவராகமாவட்ட ஆட்சியரும், மாவட்ட கல்விஅதிகாரி அமைப்பாளராகவும், உறுப்பினர் செயலராகவும் இருப்பார். நகராட்சிகளின் மூத்தஉறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். இந்தக் குழு3 மாதங்களுக்குள் அந்தப் புகாருக்கு தீர்வு காணவேண்டும்.

மாநில அளவிலான குழு: மாவட்ட அளவிலானகுழுவில் திருப்தியில்லைஎன்றால் ஆசிரியர்கள்மாநில அளவிலானகுறைதீர் குழுவிடம்முறையிடலாம். இந்தக் குழுவுக்கு தொடக்கக் கல்விஇயக்குநர் தலைவராகவும், பள்ளிக் கல்வித்துறைச் செயலர்பரிந்துரை செய்யும்2 பேர் உறுப்பினர்களாகவும்இருப்பர். இந்தக்குழு 90 நாள்களுக்குள்புகார்களுக்குத் தீர்வு காண வேண்டும். குறைந்தது6 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூட வேண்டும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015

தமிழக நிதித்துறை செயலரதுகடித விபரம்:---கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015.

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்குஊதியக்குழு வழங்கிய ஊதிய விகிதத்தை மீண்டும்திருத்தியமைக்க தனிநபராகவும், சங்கங்கள்
மூலமாகவும் பல்வேறுவழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால்-

'ஊதிய முரண்பாடுகள் ஆராய(Examining the Pay anamolies) - ஊதியக்குழுவிற்குமுன்னர் மற்றும்பின்னர் ஊழியர்கள்உள்ள ஊதியக்கட்டுவிவரங்கள்,
குறிப்பிட்ட ஊதியக்கட்டில் துறைவாரியாக உள்ளஊழியர்களது மொத்த எண்ணிக்கை, நிரப்பப்பட்ட இடங்கள், காலியிடங்கள், யார் அதிகார வரம்பிற்குட்பட்ட பதவி, கல்வித்தகுதி, பணி விபரங்கள்& பொறுப்புகள்' கோரி தமிழகநிதித்துறை செயலர் அனைத்து துறை அரசுசெயலர்களுக்கும் - கடிதம் (08.10.2015) எழுதியுள்ளார்.


விரிவான துறை சார்ந்தஊதியக்கட்டு (PAY BAND) தகவல்கள் - '30.11.2015 அல்லது அதற்கு முன்பாகவே (on or before 30.11.2015)' துறை சார்ந்தசெயலர்கள் தவறாதுதொகுத்து அனுப்பிவைக்க கடிதத்தில்கோரப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் 10 அம்ச உறுதிமொழி

1.எனது கல்வி அல்லதுபணியை அர்ப்பணிப்புஉணர்வோடு தொடர்வேன்,அத்துடன்அதில்சிறப்பாவும் செயலாற்றுவேன்.

2.எழுத படிக்க தெரியாதபத்து பேருக்குஇன்று முதல்எழுத படிக்ககற்று
தருவேன். 3.குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு அவைகண்ணும் கருத்துமாகவளரகவனம்செலுத்துவேன்.

4.கிராமங்களுக்கு சென்று மதுபானங்களுக்கும்,சூதாட்டத்திற்கும் அடிமையாகி உள்ள ஐந்துபேரைஅதிலிருந்து விடுவிப்பேன்.

5.கஷ்டப்படும் என் சகோதரர்களின்இன்னல்களை தீர்க்கதொடர்ந்து பாடுபடுவேன். 6.ஜாதி,மதம்,மொழி பாகுபாடிற்குஆதரவு அளிக்கமாட்டேன்.

7.நானும் நேர்மையாக இருந்துஊழலற்ற சமுதாயம்உருவாக பாடுபடுவேன். 8.விழிப்புணர்வுஉள்ள குடிமகனாக உருவாகுவதற்கு உழைப்பேன்,எனது குடும்பம்நியாயமாகஇருக்கவும்பாடுபடுவேன்.

9.உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாய் இருப்பதுடன் அவர்கள்நம்மைப்போல்இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்பாடுத்தஉழைப்பேன்.

10.நாட்டின் வெற்றியையும்,மக்களின்வெற்றியையும் நான் பெருமிதத்துடன் கொண்டாடுவேன்!!

மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு?

மத்திய அரசு ஊழியர்களைப்போன்றே, மாநிலஅரசு ஊழியர்களுக்கும்அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில்வெளியாகலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசுஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்தமாதம் அறிவிக்கப்பட்டது.


அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசுஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும்உயர்வு அளிக்கப்படும்.


அதன்படி, மத்திய அரசின்அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும்அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கானகோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்புஓரிரு நாள்களில்வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள்தெரிவித்தன.

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்: சென்னை கருத்தரங்கில் தீர்மானம்

பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், அரசுக் கல்லூரிஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்தவேண்டும் என
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுக் கல்லூரிஆசிரியர் கழகம்சார்பில் "அனைவருக்கும் உயர்கல்வி' என்ற தலைப்பிலானகருத்தரங்கம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமைநடத்தப்பட்டது. கருத்தரங்கை உயர் கல்வித் துறைஅமைச்சர் பி. பழனியப்பன் தொடக்கி வைத்தார்.

கருத்தரங்கில், தமிழக அரசுபல்கலைக்கழகங்களில் உள்ளதுபோல் அரசுக்கல்லூரி ஆசிரியர்களின்ஓய்வு வயதையும்60-ஆக உயர்த்தவேண்டும்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்துசெய்து, பழையஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஏழை மாணவர்கள் பயன்பெறும்வகையில் பல்கலைக்கழகஉறுப்புக் கல்லூரிகள்அனைத்தையும் அரசுக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும்.

அரசுக் கல்லூரிகளில் உள்ளஅனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பனஉள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.

இது குறித்து அரசுக்கல்லூரி ஆசிரியர்கழகத் தலைவர்வெங்கடாச்சலம் கூறியது:கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கோரிக்கைகளாக உயர் கல்வித் துறை அமைச்சரிடம்வழங்கப்பட்டது. அப்போது, அவற்றை பரிசீலித்து அரசுடன்ஆலோசித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர்உறுதியளித்தார்.கருத்தரங்கில் "அனைவருக்கும்உயர்கல்வி' என்ற தலைப்பில் 50-க்கும் மேற்பட்டகட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன என்றார்அவர்

நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சி பட்டறை

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில்கலை வழிக்கற்றல் பயற்சிப்
பட்டறை நடைபெற்றது.

நிகழ்வுக்கு வந்திருந்தோரை ஆசிரியைமுத்து மீனாள்வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை உதவிதொடக்க கல்விஅலுவலர் லெட்சுமிதேவி தலைமைஏற்று மாணவர்களுக்குஅறிவுரைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் உதவி தொடக்ககல்வி அலுவலர்மாணவ ,மாணவிகளுக்குபல்வேறு போட்டிகளில்வெற்றி பெற்றதற்காகபரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.கலைவழிக் கற்றலைநடத்தக் கூடியதிருவண்ணாமலை பாஸ்கர் ஆறுமுகம் ,அபிலாஸ் ,பிரவின்ஆகியோர் கொண்டகுழு மாணவர்களுக்குபயற்சி அளித்தனர்.முதலில் பள்ளிமாணவர்களுக்கு கதைகள் கூறினர்.பாடல்கள்,டாகுமெண்டரிபடங்கள் போட்டுகாண்பித்தனர்.பிறகு மாணவர்களை மூன்று குழுக்களாகபிரித்து மாணவர்களுக்குதகுந்தாற்போல் கதைகள் சொல்லி ,பொம்மைகள் செய்யவைத்து,பொம்மலாட்டம்மூலம் அவர்களைகதை சொல்லவைத்தனர். மாணவர்களையேகதை எழுதவைத்தும்,ஓவியம்வரைய வைத்தும்சொல்லி கொடுத்தனர். மாணவர்களுக்கு நாடகம் முதலியவற்றை சொல்லி கொடுத்ததும்அவர்களாகவே நாடகங்களை தயாரித்தும்,பொம்மைகளை தானாகவேசெய்து பொம்மைகள்மூலம் நாடகத்தைசெய்து காண்பிக்கும்வண்ணம் கற்றுக்கொடுத்தனர்.மாணவர்களை குழுக்களாக அமரவைத்து அவர்களிடம்குழு மனப்பான்மையைவளர்க்கும் வண்ணம் மிக அழகாக கற்றுகொடுத்தனர்.

கலை வழிக் கற்றல்நிகழ்ச்சி நடத்திவரும் திருவண்ணாமலைபாஸ்கர் கூறுகையில்,எங்கள் குழுகடந்த ஒன்றரைஆண்டுகளாக தமிழகம்முழுவதும் உள்ளபள்ளிகளில் பயிற்சி அளித்து வருகிறோம்.ஒருநாள்,இரண்டுநாள் எனகால அவகாசம்எடுத்து மாணவர்களுக்குமுற்றிலுமாக எளிய வகையில் புரியும் வண்ணம்நிகழ்ச்சியை நடத்தி காண்பிக்கின்றோம்.எங்கள் பய்ர்சியின்மூலம் மாணவர்களிடையேநாள் குழுமனப்பான்மை ஏற்படுகிறது.கல்லூரியில் மட்டுமே குழுமனப்பான்மை உள்ளது.அதனை ஆரம்ப மற்றும்நடுநிலைப் பள்ளிஅளவிலும் கொண்டுவருவதேஎங்கள் நோக்கமாகும்.எங்கள் பயிற்சியின்மூலம் மேடையில்பேச தயங்கும்குழந்தை கூடகூட்சதை போக்கிவிட்டு நன்றாகபேசும்.அவ்வாறுபேச வைப்பதேஎங்கள் வெற்றி.கேள்வி அறிவைஉருவாக்கி வருகிறோம்.

அரசு பள்ளிகளை மட்டுமேநாங்கள் நோக்கிபோகிறோம்.எங்கள்குழுவின் நோக்கம்இவை அனைத்தையும்இலவசமாக வழங்குவதேஆகும்.என்னுடன்திருவண்ணாமலை பிரவின்,அபிலாஷ்,செய்யாறில் ஆனந்த்,திண்டுக்கல் நவீன்என குழுவினர்தொடர்ந்து பள்ளிகளுக்குசென்று பயற்சிஅளித்து வருகிறோம்.நாங்கள் எங்கள்போக்குவரத்துக்கு மற்ற செலவுகளுக்கு மண் மனம்என்ற சிறுதான்யங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும்கம்பெனி நடத்திவருகிறோம்.அதில்இருந்து கிடைக்கும்வருவாயின் மூலம்பள்ளிகளுக்கு இலவசமாக பயற்சிக்கு செல்கிறோம்.நாங்கள்வகுப்பறை ஜனநாயகத்தைகுறிக்கோளாக கொண்டிருக்கிறோம்.சிவகங்கை,ராமநாதபுரம்,புதுகோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில்தான் முதலில் செய்கிறோம்.இப்பள்ளி மாணவர்கள்மிக அருமையாகதங்கள் தகவல்களைஎடுத்து கூறுகின்றனர்.அவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,தலைமை ஆசிரியர்க்கும்எனது பாராட்டுக்கள்.எங்கள் குழுவைதொடர்பு கொள்ள99442036236,99944 23012 என்ற என்னை தொடர்புகொள்ளலாம்.பள்ளிகளுக்குசென்று பயற்சிஅளிக்க தயாராகஇருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் ஐயப்பன்,ரஞ்சித்,வசந்தகுமார்,மாணவிகள்ராஜேஸ்வரி,தனம்,திவ்ய தர்சினிஉட்பட பலமாணவர்கள் நாடகங்களைநடித்து காண்பித்துகைதட்டு வாங்கினர். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றிகூறினார்.மாணவ,மாணவியர் ஆர்வமுடன்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளைவெளிபடுத்தினார்.சிவகங்கை,ராமநாதபுரம்,புதுகோட்டை உட்படதென் தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்களில்முதன் முறையாகஇந்த நிகழ்ச்சிஇப்பள்ளியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்து இருந்தார்.

பட விளக்கம் : சிவகங்கைமாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் கலைவழிக் கற்றல்பயற்சிப் பட்டறைநடைபெற்றபோது தேவகோட்டை உதவி தொடக்க கல்விஅலுவலர் லெட்சுமிதேவி பேசினார்.பள்ளி தலைமைஆசிரியர் லெ.சொக்கலிங்கம்.