யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/10/15

நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சி பட்டறை

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளியில்கலை வழிக்கற்றல் பயற்சிப்
பட்டறை நடைபெற்றது.

நிகழ்வுக்கு வந்திருந்தோரை ஆசிரியைமுத்து மீனாள்வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை உதவிதொடக்க கல்விஅலுவலர் லெட்சுமிதேவி தலைமைஏற்று மாணவர்களுக்குஅறிவுரைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் உதவி தொடக்ககல்வி அலுவலர்மாணவ ,மாணவிகளுக்குபல்வேறு போட்டிகளில்வெற்றி பெற்றதற்காகபரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.கலைவழிக் கற்றலைநடத்தக் கூடியதிருவண்ணாமலை பாஸ்கர் ஆறுமுகம் ,அபிலாஸ் ,பிரவின்ஆகியோர் கொண்டகுழு மாணவர்களுக்குபயற்சி அளித்தனர்.முதலில் பள்ளிமாணவர்களுக்கு கதைகள் கூறினர்.பாடல்கள்,டாகுமெண்டரிபடங்கள் போட்டுகாண்பித்தனர்.பிறகு மாணவர்களை மூன்று குழுக்களாகபிரித்து மாணவர்களுக்குதகுந்தாற்போல் கதைகள் சொல்லி ,பொம்மைகள் செய்யவைத்து,பொம்மலாட்டம்மூலம் அவர்களைகதை சொல்லவைத்தனர். மாணவர்களையேகதை எழுதவைத்தும்,ஓவியம்வரைய வைத்தும்சொல்லி கொடுத்தனர். மாணவர்களுக்கு நாடகம் முதலியவற்றை சொல்லி கொடுத்ததும்அவர்களாகவே நாடகங்களை தயாரித்தும்,பொம்மைகளை தானாகவேசெய்து பொம்மைகள்மூலம் நாடகத்தைசெய்து காண்பிக்கும்வண்ணம் கற்றுக்கொடுத்தனர்.மாணவர்களை குழுக்களாக அமரவைத்து அவர்களிடம்குழு மனப்பான்மையைவளர்க்கும் வண்ணம் மிக அழகாக கற்றுகொடுத்தனர்.

கலை வழிக் கற்றல்நிகழ்ச்சி நடத்திவரும் திருவண்ணாமலைபாஸ்கர் கூறுகையில்,எங்கள் குழுகடந்த ஒன்றரைஆண்டுகளாக தமிழகம்முழுவதும் உள்ளபள்ளிகளில் பயிற்சி அளித்து வருகிறோம்.ஒருநாள்,இரண்டுநாள் எனகால அவகாசம்எடுத்து மாணவர்களுக்குமுற்றிலுமாக எளிய வகையில் புரியும் வண்ணம்நிகழ்ச்சியை நடத்தி காண்பிக்கின்றோம்.எங்கள் பய்ர்சியின்மூலம் மாணவர்களிடையேநாள் குழுமனப்பான்மை ஏற்படுகிறது.கல்லூரியில் மட்டுமே குழுமனப்பான்மை உள்ளது.அதனை ஆரம்ப மற்றும்நடுநிலைப் பள்ளிஅளவிலும் கொண்டுவருவதேஎங்கள் நோக்கமாகும்.எங்கள் பயிற்சியின்மூலம் மேடையில்பேச தயங்கும்குழந்தை கூடகூட்சதை போக்கிவிட்டு நன்றாகபேசும்.அவ்வாறுபேச வைப்பதேஎங்கள் வெற்றி.கேள்வி அறிவைஉருவாக்கி வருகிறோம்.

அரசு பள்ளிகளை மட்டுமேநாங்கள் நோக்கிபோகிறோம்.எங்கள்குழுவின் நோக்கம்இவை அனைத்தையும்இலவசமாக வழங்குவதேஆகும்.என்னுடன்திருவண்ணாமலை பிரவின்,அபிலாஷ்,செய்யாறில் ஆனந்த்,திண்டுக்கல் நவீன்என குழுவினர்தொடர்ந்து பள்ளிகளுக்குசென்று பயற்சிஅளித்து வருகிறோம்.நாங்கள் எங்கள்போக்குவரத்துக்கு மற்ற செலவுகளுக்கு மண் மனம்என்ற சிறுதான்யங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும்கம்பெனி நடத்திவருகிறோம்.அதில்இருந்து கிடைக்கும்வருவாயின் மூலம்பள்ளிகளுக்கு இலவசமாக பயற்சிக்கு செல்கிறோம்.நாங்கள்வகுப்பறை ஜனநாயகத்தைகுறிக்கோளாக கொண்டிருக்கிறோம்.சிவகங்கை,ராமநாதபுரம்,புதுகோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில்தான் முதலில் செய்கிறோம்.இப்பள்ளி மாணவர்கள்மிக அருமையாகதங்கள் தகவல்களைஎடுத்து கூறுகின்றனர்.அவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,தலைமை ஆசிரியர்க்கும்எனது பாராட்டுக்கள்.எங்கள் குழுவைதொடர்பு கொள்ள99442036236,99944 23012 என்ற என்னை தொடர்புகொள்ளலாம்.பள்ளிகளுக்குசென்று பயற்சிஅளிக்க தயாராகஇருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் ஐயப்பன்,ரஞ்சித்,வசந்தகுமார்,மாணவிகள்ராஜேஸ்வரி,தனம்,திவ்ய தர்சினிஉட்பட பலமாணவர்கள் நாடகங்களைநடித்து காண்பித்துகைதட்டு வாங்கினர். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றிகூறினார்.மாணவ,மாணவியர் ஆர்வமுடன்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளைவெளிபடுத்தினார்.சிவகங்கை,ராமநாதபுரம்,புதுகோட்டை உட்படதென் தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்களில்முதன் முறையாகஇந்த நிகழ்ச்சிஇப்பள்ளியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்து இருந்தார்.

பட விளக்கம் : சிவகங்கைமாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் கலைவழிக் கற்றல்பயற்சிப் பட்டறைநடைபெற்றபோது தேவகோட்டை உதவி தொடக்க கல்விஅலுவலர் லெட்சுமிதேவி பேசினார்.பள்ளி தலைமைஆசிரியர் லெ.சொக்கலிங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக